Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»​முன் அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால் தொழிலாளர் மீது குற்றம்சாட்ட முடி​யாது: ஐகோர்ட்
    மாநிலம்

    ​முன் அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால் தொழிலாளர் மீது குற்றம்சாட்ட முடி​யாது: ஐகோர்ட்

    adminBy adminJune 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ​முன் அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால் தொழிலாளர் மீது குற்றம்சாட்ட முடி​யாது: ஐகோர்ட்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    முன்அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்காக தொழிலாளர் மீது குற்றம் சாட்ட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக பணியாற்றியவர் இளங்கோவன். இவர் கடந்த 2006-08 காலகட்டத்தில் முன்அனுமதியின்றி 117 நாட்கள் விடுப்பு எடுத்துள்ளார். தடையில்லா சான்று (என்ஓசி) பெறாமல் சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு 7 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். விடுப்பு எடுத்த நாட்களுக்கு ரூ.1 லட்சம் ஊதியமாக பெற்று நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளார் என சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இளங்கோவனுக்கு ஓராண்டு சிறை தண்டனையுடன் ரூ.2 ஆயிரம் அபராதம் விதி்த்து தீர்ப்பளித்தது.

    இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் மேல்முறையீடு செய்தார். நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

    மனுதாரர் இளங்கோவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.அசோக்குமார்: மனுதாரர் விடுப்பு கோரி முறையாக விண்ணப்பித்து விட்டுதான் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். அவர் தனது கிளைக்கு அதிக அளவில் முதலீடுகளை திரட்டி கொடுத்துள்ளார். கிளை மேலாளர் என்பதால் தினமும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட அவசியம் இல்லை. அவர் 117 நாட்களுக்கு மோசடி செய்து சம்பளம் பெறவில்லை. அவருக்கு சம்பளம் வழங்கியது நிர்வாகம் செய்த தவறு. அந்த தவறுக்கு மனுதாரர் மீது மோசடி குற்றம் சாட்ட முடியாது.

    சிபிஐ தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் கே.சீனிவாசன்: வெளிநாடு செல்வதாக இருந்தால் முன்கூட்டியே அனுமதியும், தடையில்லா சான்றும் பெற்றிருக்க வேண்டும். அவர் விதிமுறைகளை மீறி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற 117 நாட்களை முன்அனுமதியின்றி எடுத்த விடுப்பாகவும், அந்த காலகட்டத்துக்கு பெற்ற ஊதியத்தை, நிர்வாகத்துக்கு ஏற்படுத்திய இழப்பாகவுமே கருத முடியும்.

    இவ்வாறு வாதம் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘விடுப்பு கோரி விண்ணப்பித்த நிலையில், அதை அனுமதியின்றி எடுத்த விடுப்பாக கருத முடியாது. விடுப்பு எடுத்த காலகட்டத்துக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கியதற்கு, தொழிலாளர் மீது மோசடி குற்றம் சாட்ட முடியாது. மேலும், உயர் அதிகாரிகளின் முன்அனுமதி பெறாமல் வெளிநாடு சென்றால், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமே தவிர, மனுதாரரை பொறுப்பாக்க முடியாது’’ என்று கூறி, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    லாக்கப் மரணங்கள்: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

    July 1, 2025
    மாநிலம்

    டாஸ்மாக் கடைகளை அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? – ஐகோர்ட் கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் 120 மின்சார பேருந்துகள் சேவை: ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. வரை இயங்கும்

    July 1, 2025
    மாநிலம்

    போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்

    July 1, 2025
    மாநிலம்

    பாமக நெருக்கடியை சமாளிக்க அன்புமணி டெல்லியில் முகாம்: தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க முயற்சி

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • லாக்கப் மரணங்கள்: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
    • டாஸ்மாக் கடைகளை அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? – ஐகோர்ட் கேள்வி
    • தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?
    • பாரதி இல்லத்தை புதுப்பிக்க கோரி எட்டயபுரத்தில் பாஜக நூதன போராட்டம்: 65 பேர் கைது
    • தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.