Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முன்னாள் படை வீரர்களுக்கான புற்றுநோய் நிவாரண நிதி ரூ.10 ஆயிரமாக உயர்வு: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு
    மாநிலம்

    முன்னாள் படை வீரர்களுக்கான புற்றுநோய் நிவாரண நிதி ரூ.10 ஆயிரமாக உயர்வு: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முன்னாள் படை வீரர்களுக்கான புற்றுநோய் நிவாரண நிதி ரூ.10 ஆயிரமாக உயர்வு: அமைச்சர் கயல்விழி அறிவிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘‘புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர புற்றுநோய் நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்’’ என, சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்தார்.

    தமிழக சட்டப் பேரவையில், பொதுத் துறை மானியக் கோரிக்கையில் முன்னாள் படை வீரர் நலன் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது: தமிழகத்தில் 1.24 லட்சம் முன்னாள் படை வீரர்களும், 57,921கைம் பெண்களும் வசித்து வருகின்றனர். அவர்களுடைய மறுவாழ்வுக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 2024-25-ம் ஆண்டில் வீர தீர செயல்களில் பதக்கம் பெற்ற 25பேருக்கு ரூ.13.42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    போர் மற்றும் போர் ஒத்த நடவடிக்கைகளால் உயிரிழந்த, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட படை வீரர்களின் குடும்பத்துக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக, இவ்வாண்டு 482 பேருக்கு ரூ.1.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர நிதியுதவி, கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ நிதியுதவி ஆகியவற்றுக்கு 15,702 பேருக்கு ரூ.37.15 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமது ஒரே மகன் அல்லது ஒரே மகளை படைப் பணிக்கு அனுப்பிய பெற்றோரையும், ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளை படைப் பணிக்கு அனுப்பிய பெற்றோரையும் கவுரவிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுவதுடன், வெள்ளிப் பதக்கமும் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் 89 பேருக்கு ரூ.21.37 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

    முன்னாள் படை வீரர்கள் ராணுவ பணியில் சேரும் போது முப்படையில் நிரந்தர படை துறை அலுவலர் பணிக்கு ரூ.1 லட்சமும், குறுகிய கால படைத் துறை அலுவலர் பணிக்கு ரூ.50 ஆயிரமும், ராணுவத்தில் இளநிலை படை அலுவலர் மற்றும் இதர பணிக்கு ரூ.25 ஆயிரமும் தொகுப்பு மானியமாக வழங்கப்படுகிறது.

    முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், ரூ.7 கோடி மதிப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 205 முன்னாள் படை வீரர்களுக்கும், 2-ம் கட்டமாக 12 மாவட்டங்களில் 284 படை வீரர்களுக்கும் பல்வேறு விதமான திறன்மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வரப்படுகிறது.

    அறிவிப்புகள்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டு வரும் மாதாந்திர புற்றுநோய் நிவாரண நிதி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். முன்னாள் படை வீரர்களின் கைம்பெண்கள் ஈமச்சடங்குக்காக வழங்கப்பட்டு வரும் ஈமச்சடங்கு நிதியுதவி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு கயல்விழி செல்வராஜ் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து தருகிறார் முதல்வர்: தமிழிசை குற்றச்சாட்டு

    June 29, 2025
    மாநிலம்

    “முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை முடிவு செய்யும்” – ஹெச்.ராஜா கருத்து

    June 29, 2025
    மாநிலம்

    ‘கோவையில் ஒரு தொகுதி எங்களுக்கு…’ – ஆளுக்கு முன்னால் துண்டைப் போடும் மதிமுக!

    June 29, 2025
    மாநிலம்

    எம்ஜிஆரின் தனி செயலர் மகாலிங்கம் மறைவு

    June 29, 2025
    மாநிலம்

    “ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? உதயசூரியன்!” – முதல்வர் ஸ்டாலின்

    June 29, 2025
    மாநிலம்

    ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ – ஜூலை 7 முதல் பழனிசாமி சுற்றுப்பயணம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 10 படங்களை தயாரிக்கும் வேல்ஸ் ஃபிலிம் நிறுவனம்!
    • மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து தருகிறார் முதல்வர்: தமிழிசை குற்றச்சாட்டு
    • உங்கள் முகத்தை ஐசிங் செய்வது பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறதா? அதன் நன்மைகள், அபாயங்கள் மற்றும் பயன்பாட்டு உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்தியாவுக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை 1% ஆக குறைக்க அமெரிக்கா முடிவு
    • வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் அபாரம்: தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.