Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முதல்வர் வேட்பாளரை அமித் ஷா, பழனிசாமி முடிவு செய்வார்கள்: எல்.முருகன் கருத்து
    மாநிலம்

    முதல்வர் வேட்பாளரை அமித் ஷா, பழனிசாமி முடிவு செய்வார்கள்: எல்.முருகன் கருத்து

    adminBy adminJuly 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதல்வர் வேட்பாளரை அமித் ஷா, பழனிசாமி முடிவு செய்வார்கள்: எல்.முருகன் கருத்து
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சி / சென்னை: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி குறித்​தும், முதல்​வர் வேட்​பாளர் யார் என்​பது குறித்​தும் மத்திய அமைச்சர் அமித்​ஷா​வும், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும் பேசி முடி​வெடுப்​பார்​கள் என்று மத்​திய இணை அமைச்​சர் எல்.முருகன் கூறி​னார்.

    திருச்​சி​யில் முப்​படை ஓய்​வூ​தி​யர்​களுக்​கான மாபெரும் குறைதீர் கூட்​டத்தை மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் நேற்று தொடங்​கி​வைத்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக​வினர் தோல்வி பயத்​துடன் ஆட்சி நடத்தி வரு​கின்​றனர். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் வெற்றி மூலம் திமுகவை வீட்​டுக்கு அனுப்​புவோம். முதல்​வர் செயல்​ப​டாததன் விளை​வாக லாக்​கப் மரணம் நடந்​துள்​ளது.

    காவல் நிலை​யத்துக்கு செல்​லவே மக்​கள் அச்​சப்​படு​கிறார்​கள். முதல்​வரின் உத்​தரவை எந்த அதி​காரி​யும் பின்​பற்​று​வ​தில்​லை. அதி​காரி​கள் ஆட்​சி​தான் தமிழகத்​தில் நடக்​கிறது. அவர் சரி​யாக செயல்​பட​வில்​லை. திமுகவுட​னான கூட்​ட​ணிக்​காக தமிழக மக்களின் நலனை கூட்​ட​ணிக் கட்​சிகள் அடகு வைத்து விட்​டன.

    துறை அமைச்​சர் என்ற முறை​யில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்​.ரஹ்​மானின் ஸ்டூடியோவை பார்​வை​யிட்​டேன். அவரிடம் அரசி​யல் எது​வும் பேச​வில்​லை. தமிழகத்​தில் அதி​முக தலை​மை​யில்​தான் தேசிய ஜனநாயக கூட்​டணி இயங்​கும் என்று மத்​திய அமைச்​சர் அமித்ஷா கூறி​விட்​டார். தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி குறித்​தும், முதல்​வர் வேட்​பாளர் குறித்​தும் அமித்​ஷா​வும், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும் பேசி முடி​வெடுப்​பார்​கள். இதில் நான் கருத்து கூற முடி​யாது.

    கூட்​ட​ணி​யில் குழப்​பம் இல்​லை. எங்​கள் கூட்​ட​ணி​தான் 2026-ல் வெற்றி பெறும். இவ்​வாறு எல்​.​முரு​கன் கூறி​னார்.சென்னை விமான நிலை​யத்​தில் எல்​.​முரு​கன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்தில் காவல் துறை​யின் மொத்த செயல்​பாடும் பூஜ்ஜிய​மாக இருக்​கிறது. இதையெல்​லாம் கவனிக்க வேண்​டிய முதல்​வர், கடந்த 4 ஆண்​டு​களாக தூக்​கத்​தில் இருக்​கிறார்.

    திமுகவை வீட்​டுக்கு அனுப்​புவது​தான் எங்​களது ஒரே குறிக்​கோள். ஒரு​மித்த கருத்​துடைய கட்​சிகள் எங்​களு​டன் இணைய வேண்டும். துணை முதல்​வர் பதவியை ஸ்டா​லினிடம் கேட்டு வாங்​கும் தைரி​யும் திரு​மாவளவனுக்கு உள்​ள​தா? இவ்​வாறு அவர்​ கூறினார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு

    July 1, 2025
    மாநிலம்

    நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு

    July 1, 2025
    மாநிலம்

    திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் 8 இடங்களில் வீடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோக மையம் அமைக்க மாநகராட்சி அனுமதி

    July 1, 2025
    மாநிலம்

    171 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி: ஜூலை 4-ம் தேதி பழனிசாமி வழங்குகிறார்

    July 1, 2025
    மாநிலம்

    பாஜக, தி​முகவை எதிர்க்​கும் கட்​சிகளுடன் கூட்​ட​ணி​யா? – பிரேமலதா விளக்​கம்

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு
    • ஆல் டே ப்ராஜெக்ட்ஸ் டார்சான் அறிமுகத்திலிருந்து கே-பாப் ஸ்டான்களிலிருந்து பின்னடைவை எதிர்கொள்கிறது: காட்சிகள் முதல் அதிர்வு வரை, ரசிகர்கள் அதை வாங்கவில்லை
    • சிங்கப்பூர் நைட்ஸ்பாட் மரணம்: அபாயகரமான கும்பல் தாக்குதலுக்காக இந்திய மூல மனிதர்; 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நன்கொடை கேட்டு தாக்குதல்: விசிகவினரை கண்டித்து மேலூரில் வர்த்தக சங்கம் கடையடைப்பு
    • Prepieabeades அறிகுறிகள்: 5 அறிகுறிகள் முன்னுரிமைகள் (இரத்த பரிசோதனை இல்லாமல்) | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.