Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45,041 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
    மாநிலம்

    முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45,041 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்

    adminBy adminJune 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: 45,041 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களின் முதல் போக பாசனத்திற்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் இன்று (ஜூன் 15) தண்ணீரை திறந்து வைத்தனர்.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கியதால் வைகை அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரத்துவங்கியது. அணையின் மொத்தம் நீர்மட்டம் 71 அடியாக உள்ளநிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 60 அடியை கடந்துள்ளது. இதையடுத்து பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற தமிழ்நாடு நீர்வளத்துறை ஜூன் 15 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு அணையின் நீர் இருப்பைப் பொறுத்து 6,739 மில்லியன் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது.

    அதன்படி வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் இன்று வைகை அணையில் நடந்த நிகழ்ச்சியில் மதகை திறந்து வைத்து தண்ணீரில் மலர் தூவினர். அணையின் பிரதான 7 பெரிய மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறியது. தொடர்ந்து 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம் முழுமையாகவும், அதற்கடுத்த 75 நாட்களுக்கு முறை வைத்து திறக்கப்படும் நீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, மதுரை மாவட்டம், வடக்கு மற்றும் வாடிப்பட்டி ஆகிய தாலுகாக்கள் என பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இருந்து மதகுகள் வழியாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர்.


    அணையில் நீர் திறக்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர்கள் சங்கீதா(மதுரை), சரவணன்(திண்டுக்கல்), ரஞ்சித்சிங் (தேனி),தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் மற்றும் எம்எல்ஏ.,க்கள் கலந்துகொண்டனர்.

    ஜூன் 15 காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 61.22 அடியாகவும், நீரிருப்பு 3,841 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. நீர்வரத்து 1,230 கன அடியாக உள்ள நிலையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

    August 9, 2025
    மாநிலம்

    மாநில கல்விக் கொள்கை தன்னம்பிக்கை, சுய திறனை ஊக்குவிக்கும்: முத்​தரசன் வரவேற்பு

    August 9, 2025
    மாநிலம்

    ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரிய வழக்கு: தலைமை கால்நடை அதிகாரி ஆஜராக உத்தரவு

    August 9, 2025
    மாநிலம்

    மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: எல்.முருகன் குற்றச்சாட்டு

    August 9, 2025
    மாநிலம்

    எம்ஜிஆர், ஜெயலலிதா சாதி எல்லைகளைக் கடந்தவர்கள்: திருமாவளவன் திடீர் புகழாரம்

    August 9, 2025
    மாநிலம்

    திண்டிவனம், செஞ்சியில் கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுப்பு: பல்லவர் காலத்தை சேர்ந்தது என தகவல்

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.150 கோடி வசூலைக் கடந்த ‘மகா அவதார் நரசிம்மா’
    • விருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
    • ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிட்டிய லாபம் என்ன?
    • மாநில கல்விக் கொள்கை தன்னம்பிக்கை, சுய திறனை ஊக்குவிக்கும்: முத்​தரசன் வரவேற்பு
    • பாதுகாப்பு தளவாட உற்பத்தி சாதனை அளவாக ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.