Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முதன்முறையாக கச்சத்தீவுக்கு பயணம்: இலங்கை அதிபர் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
    மாநிலம்

    முதன்முறையாக கச்சத்தீவுக்கு பயணம்: இலங்கை அதிபர் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முதன்முறையாக கச்சத்தீவுக்கு பயணம்: இலங்கை அதிபர் பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராமேசுவரம் / கடலூர்: கச்​சத்​தீவு இலங்​கைக்​குரியது, அதை வேறு யாருக்​கும் விட்​டுக் கொடுக்க முடி​யாது என்று இலங்கை அதிபர் கூறி​யுள்​ளதற்​கு, அரசி​யல் கட்​சிகள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளன. இந்​திய அரசு கச்​சத்​தீவை இலங்​கைக்கு கொடுத்த பின்னர், கடந்த 51 ஆண்​டு​களில் முதன்​முறை​யாக இலங்கை அதிபர் கச்​சத்​தீவுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.

    யாழ்ப்​பாணம் மண்டை தீவில் புதி​தாக சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானம் அமைப்​ப​தற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற இலங்கை அதிபர் அநுர குமார திசா​நாயக்க, பின்​னர் மண்​டைத்​தீவு, நயி​னாத் தீவு மற்றும் கச்​சத்​தீவு​களுக்​குச் சென்று பார்​வை​யிட்​டார்.

    இது தொடர்​பாக இலங்கை அதிபர் மாளிகை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “அதிபர் அநுர குமார திசா​நாயக்க யாழ்ப்​பாணத்​தில் உள்ள கச்​சத்​தீவுக்கு கண்​காணிப்பு பயணம் மேற்​கொண்​டார். அப்​போது இலங்கை மீன்​வளத்​துறை அமைச்​சர் ராமலிங்​கம் சந்​திரசேகர், பொது​மக்​கள் பாது​காப்பு மற்​றும் நாடாளு​மன்ற விவ​கார அமைச்​சர் ஆனந்த விஜே​பால, வடக்கு கடற்​படை கட்​டளை தளபதி ரியர் அட்​மிரல் புத்​திக லியனகமகே ஆகியோர் உடனிருந்​தனர்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    முன்​ன​தாக, யாழ்ப்​பாணத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசா​நாயக்க “கச்​சத்​தீவு இலங்​கைக்​குரியது, அதை வேறு யாருக்​கும் விட்​டுக் கொடுக்க முடி​யாது” – என்று தெரி​வித்​திருந்​தார். கச்​சத்​தீவு விவ​காரம் தொடர்​பான இலங்கை அதிபரின் பேச்​சுக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன், தவாக தலை​வர் த.வேல்​முரு​கன் ஆகியோர் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

    அவர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை:

    இரா.​முத்​தரசன்: இலங்கை அதிபரின் பேச்சு இரு​நாட்டு உறவுக்​கும் எதி​ரானது. தமிழக மீனவர்​கள் மீது இலங்கை கடற்​படை​யினரும், கடல் கொள்​ளை​யர்​களும் தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வரும் நிலை​யில், இலங்கை அதிபர் ‘இந்​திய மீனவர்​கள், இலங்கை கடல் பகு​திக்​குள் மீன் பிடித்து சிக்​கி​னால், அவர்​களை எளி​தாக விட மாட்​டோம். பிடிபடும் படகு​களை திருப்​பித் தர மாட்​டோம். அது இலங்​கைக்கே சொந்​த​மாகும்’ என்று கூறி​யிருப்​பதும் அதி​கார ஆணவத்​தின் உச்​ச​மாகும்.

    தி.வேல்​முரு​கன்: கச்​சத்​தீவு விவ​காரத்​தில் இலங்கை அதிபரின் திமிர்ப்​பேச்சு தமிழக மீனவர்​களின் உரிமைக்​கும், மத்​திய அரசுக்கும், தமிழக அரசுக்​கும் நேரடி​யாகச் சவால்​விடும் அகந்தை மிகுந்​தப் பேச்​சாகும். கச்​சத்​தீவு தமிழர்​களின் உரிமை நிலம்.

    இலங்கை அதிபரின் பேச்​சுக்கு மத்​திய அரசும், அமைச்​சர்​களும் மவுனம் சாதிப்​பது வரலாற்​றின் பெரும் துரோகம். எனவே, கச்​சத் தீவை மீட்​டெடுக்க சட்ட, அரசி​யல் நடவடிக்​கைகளை மத்​திய, மாநில அரசுகள் உடனடி​யாக தொடங்க வேண்​டும். இல்லாவிட்டால் மக்​களைத் திரட்​டி போ​ராட்​டங்​கள்​ நடத்​துவோம்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மின்வாரிய ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு

    September 3, 2025
    மாநிலம்

    386 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது: துணை முதல்வர் உதயநிதி வழங்குகிறார்

    September 3, 2025
    மாநிலம்

    தொழில்நுட்பக் கோளாறு: திருச்சி – சார்ஜா ஏர் இந்தியா விமானம் ரத்து; பயணிகள் அவதி

    September 3, 2025
    மாநிலம்

    ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதை விரிவாக்கம்: திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம்

    September 3, 2025
    மாநிலம்

    மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

    September 3, 2025
    மாநிலம்

    ராமதாஸ் வெளியிட்ட பாமக புதிய உறுப்பினர் அடையாள அட்டையில் அன்புமணி புகைப்படம் புறக்கணிப்பு

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ’கட்டா குஸ்தி 2’ படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்
    • மின்வாரிய ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு
    • சிறந்த ஆக்ஸிஜன் ஓட்டத்திற்கு நடக்கும்போது முயற்சிக்க 5 சுவாச நுட்பங்கள்
    • அமெரிக்காவின் வரிவிதிப்பு உயர்வால் சுயசார்பு இந்தியா சபதம் ஏற்கும் பிரச்சாரத்தை தொடங்கும் பாஜக
    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.