Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»முட்டிக்கொள்ளும் பேரூராட்சியும் கோயில் நிர்வாகமும்: திருக்கழுக்குன்றம் வரும் பக்தர்கள் அவதி
    மாநிலம்

    முட்டிக்கொள்ளும் பேரூராட்சியும் கோயில் நிர்வாகமும்: திருக்கழுக்குன்றம் வரும் பக்தர்கள் அவதி

    adminBy adminMay 1, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    முட்டிக்கொள்ளும் பேரூராட்சியும் கோயில் நிர்வாகமும்: திருக்கழுக்குன்றம் வரும் பக்தர்கள் அவதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலின் கிரிவலப்பாதையில் அடிப்படை தேவைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் நிலையில், கோயில் நிலத்தில் அனுமதியின்றி பணி செய்வதா என கோயில் நிர்வாகம் முட்டிக் கொள்வதால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. மலைமீது சுயம்பு மூர்த்தியாக சுவாமி வேதகிரீஸ்வரர் அருள்பாலிப்பதால், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மேலும், மலைக்கோயிலில் இருந்து கீழே வரும் பாதையில் கல்மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்த இந்த ஒரு கல்மண்டபம் குடவரை சிற்பமாக அமைந்துள்ளது. மேலும், மலைக்கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோயிலில் பக்தவச்சலேஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் ஆகியோர் அருள்பாலித்து வருகின்றனர்.

    இக்கோயிலுக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனர். ஆனால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்கி செல்வதற்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளன. மேலும், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு கிரிவலபாதையில் கோயில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் ஏதும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.

    இதனால், இரவு நேரங்களில் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குடிநீர், கழிப்பறை அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இயற்கை உபாதைகளை திறந்த வெளியில் புதர்களில் கழிப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

    பக்தர்களின் வசதிக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறை.

    இதனால், கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் அல்லது பேரூராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும் என நீண்ட நாட்களாக உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், கோயில் நிர்வாகம் தங்களிடத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லை எனக்கூறி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவில்லை என தெரிகிறது.

    இதனால், பேரூராட்சி நிர்வாகம் கிரிவலப்பாதையை பராமரிப்பதோடு, அப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான இருக்கைகள், குடிநீர் தொட்டிகள் அமைத்துள்ளது. மேலும், ரூ.21 லட்சம் மதிப்பில் கழிப்பறை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மலையை சுற்றியுள்ள நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்றும் அதனால், தங்களின் அனுமதி பெறாமல் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என கோயில் நிர்வாகத்தினர் வலியுறுத்துகின்றனர்.

    இதனால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் கோயில் நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கிரிவலப்பாதையில் பயன்படுத்தாமலேயே பாழடைந்துள்ள

    பக்தர்கள் தங்கும் விடுதி கட்டிடம்.

    இதுகுறித்து, உள்ளூர் பொதுமக்கள் கூறியதாவது: கிரிவலம் வரும் நாட்களில், பக்தர்கள் இளைப்பாறுவதற்கு கூட இருக்கைகள் இல்லை. மேலும், கடும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்கள் அச்சம் கொள்கின்றனர். இதனால் பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், கோயில் நிலம் எனக்கூறி மேம்பாட்டு பணிகளுக்கு கோயில் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. உண்மையில் அவை மலை புறம்போக்கு என்று ஆவணத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2008-ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்தில் மலைக்கோயிலின் கிரிவலப்பாதையில் 8 அறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. ஆனால், விடுதியை கோயில் நிர்வாகம் பக்தர்களின் பயன்பாட்டுக்கு வழங்காமலேயே பாழடைந்த கட்டிடமாக மாற்றியுள்ளது. மேலும், பக்தவச்சலேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தவும் கோயில் அருகில் கழிப்பறை இல்லை.

    அதேபோல் மலையடிவாரத்தில் பக்தர்களின் உடைமைகளை வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள் ஏற்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயில் நிர்வாகத்தின் தரப்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. கிரிவலப்பாதையில் உள்ள நிலங்களை, பாதுகாக்க வேண்டியது எங்களின் கடமை எனக்கூறும் கோயில் நிர்வாகம், தனிநபர்கள் நகரப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்கவும் வரிகளை வசூலிக்கவும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பேரூராட்சி நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் தேவைக்காகவே செய்கிறது என்பதை கோயில் நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    மக்கள் பெருக்கத்துக்கு ஏற்றவாறு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். அதனால், பக்தர்களின் அடிப்படை தேவைகளை கருத்தில்கொண்டு இரு அரசுத்துறைகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவிக்காமல் ஒருங்கிணைந்து மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை

    August 14, 2025
    மாநிலம்

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.14, 15-ல் தலைமைச் செயலக பகுதியில் ‘ட்ரோன்’ பறக்க தடை

    August 14, 2025
    மாநிலம்

    திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி மைத்ரேயன்: அதிமுகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்!

    August 14, 2025
    மாநிலம்

    சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

    August 14, 2025
    மாநிலம்

    ஆளுநரின் தேநீர் விருந்தில் விசிக பங்கேற்காது: திருமாவளவன் அறிவிப்பு

    August 13, 2025
    மாநிலம்

    “கழிப்பறையை சுத்தம் செய்வதிலும் திமுக ஊழல்!” – இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை
    • இந்த எளிய 30-வினாடி சமநிலை சோதனை உங்கள் வீழ்ச்சி அபாயத்தை கணிக்க முடியும், குறிப்பாக நடுத்தர வயது பெரியவர்களுக்கு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இறந்துபோன’ வாக்காளர்கள் உடன் தேநீர் விருந்து: தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என ராகுல் காந்தி பதிவு
    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக.14, 15-ல் தலைமைச் செயலக பகுதியில் ‘ட்ரோன்’ பறக்க தடை
    • நியூயார்க்கிலிருந்து மியாமி வரை: அமெரிக்காவின் நகரங்கள் 40 ஐத் தாக்கும் முன் ஒவ்வொரு கட்சி காதலரும் பார்வையிட வேண்டும்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.