Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»‘முகமூடியார் பழனிசாமி’ என்று இனி அழைப்போம்: டிடிவி விமர்சனம்
    மாநிலம்

    ‘முகமூடியார் பழனிசாமி’ என்று இனி அழைப்போம்: டிடிவி விமர்சனம்

    adminBy adminSeptember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘முகமூடியார் பழனிசாமி’ என்று இனி அழைப்போம்: டிடிவி விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ‘23-ம் புலிக்கேசி’ பட பாணியில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமியை ‘முகமூடியார்’ பழனிசாமி என்று அழைக்க வேண்டும் என்று இபிஎஸ் – அமித் ஷா சந்திப்பு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார்

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் எப்படி எல்லாம் எடப்பாடி பழனிசாமி வீர வசனம் பேசினார். ‘நான் தன்மானம் மிக்கவன்’, ‘எனக்கு ஆட்சி அதிகாரம் முக்கியம் அல்ல’, என்றெல்லாம் பேசினார். மேலும், பத்திரிகைகளில் அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டது தெடர்பாக வெளிவந்த செய்திகளுக்கு கோபித்துக் கொண்டவர், வானிலையை காரணம் காட்டி தள்ளி வைத்ததாக கதை விட்டார்.

    தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்ட குடியரசு துணைத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்துவிட்டு, இரவு அமித் ஷாவை சந்தித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அமித் ஷா எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து இருப்பதாக ஏற்கனவே, ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துவிட்டன. இவைதான் பத்திரிகைகளில் செய்தியாக வெளி வந்தன. இதற்கு எல்லாம் பொய் சொல்லி எடப்பாடி பழனிசாமி யாரை ஏமாற்ற பார்க்கிறார்?.

    தமிழக மக்களையும், மற்ற அரசியல் கட்சிகளையும் இனிமேலும், எடப்பாடி பழனிசாமியால் ஏமாற்ற முடியாது. டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்தித்த பின் வெளி வந்தவர் ஏன் முகத்தை முடிக்கொண்டு சென்றார் ?.

    ‘23-ம் புலிக்கேசி’ பட பாணியில் இன்று முதல் எடப்பாடி பழனிசாமியை முகமூடியார் பழனிசாமி என்று அழைக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்வது எல்லாம் பொய். சிலர் எடப்பாடி பழனிசாமி செய்யும் துரோகத்தை ராஜதந்திரம் என்று கூறுகின்றனர். ஆட்சி பொறுப்பில் உள்ளார் என்பதற்காக அப்போது ஆதரித்துப் பேசிய சிலர் இப்போது அவருக்கு எதிராக பேசி வருகின்றனர்.

    எம்ஜிஆர், ஜெயலலிதா வெற்றி கண்ட இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டு மக்களை எடப்பாடி பழனிசாமி ஏமாற்றப் பார்க்கிறார். என்னதான் பண பலம், படை பலம் இருந்தாலும் வரவிருக்கும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தோல்வியை தழுவுவது உறுதி.” என்று தினகரன் கூறினார்.

    முன்னாதாக டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அதிமுக எடப்பாடி பழனிசாமி, அவருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமித் ஷா வீட்டில் இருந்து காரில் வெளியேறிய பழனிசாமி தனது முகத்தை மறைத்துக் கொண்டதாக காணொலி ஒன்று இணையத்தில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கொடிக் கம்பங்கள் விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம்

    September 17, 2025
    மாநிலம்

    ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு

    September 17, 2025
    மாநிலம்

    ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மாதம்பட்டி ரங்கராஜ்!

    September 17, 2025
    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    September 17, 2025
    மாநிலம்

    சென்னை – செய்யாறு இடையே ஆறுவழிச் சாலை: நிலங்களை கையகப்படுத்தும் ஆரம்பகட்ட பணிகள் தீவிரம்

    September 17, 2025
    மாநிலம்

    தங்கமணிக்கு எதிராக தடதடக்கும் மாஜி எம்எல்ஏக்கள்! – செப்.19 நாமக்கல்லில் என்ன நடக்கும்?

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொடிக் கம்பங்கள் விதிமுறைகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: சென்னை உயர் நீதிமன்றம்
    • சியா விதைகள் சுகாதார அபாயங்கள்: ஹார்வர்ட் டாக்டர் சியா விதைகளை சாப்பிடுவதற்கான மறைக்கப்பட்ட ஆபத்தை வெளிப்படுத்துகிறார் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “என் குழந்தைக்கு தந்தை என மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்” – ஜாய் கிரிசில்டா
    • ஆகாஷ் பாஸ்கரன் மீதான நடவடிக்கைக்கு தடை: உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு
    • ஒளிரும் சருமத்திற்கான குங்குமப்பூ: பிரகாசம், வடுக்கள் மற்றும் நிறமிக்கு இயற்கை DIY வைத்தியம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.