Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு
    மாநிலம்

    மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு

    adminBy adminAugust 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழக அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று அரசு அமைத்த குழு​விடம் அரசு ஊழியர்​ – ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​கள் வலி​யுறுத்​தினர். அதோடு தங்​கள் கருத்​துகளை அறிக்கை​யாக சமர்ப்​பித்​தனர்.

    பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் மற்​றும் மத்​திய அரசு அண்​மை​யில் அறி​முகப்​படுத்​தி​யுள்ள ஒருங்​கிணைந்த ஓய்​வூ​திய திட்​டம் (யுபிஎஸ்) ஆகியவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்​பிக்க மூத்த ஐஏஎஸ் அதி​காரி​யான ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்​தது. அந்த குழு தனது அறிக்​கையை வரும் செப். 30-ம் தேதிக்​குள் தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது.

    இந்​தச் சூழலில் ஆக. 18, 25, செப். 1, 8 என 4 நாட்​கள் கருத்​துகேட்பு கூட்​டம் நடந்​தது. அதன்​படி முதல் சுற்று கூட்​டத்​தில் தலை​மைச் செயலக சங்​கம், தமிழ்​நாடு அரசு அலு​வலர் ஒன்​றி​யம், தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்​கம், தமிழ்​நாடு அலு​வலக உதவி​யாளர் மற்றும் அடிப்​படை பணி​யாளர் சங்​கம், தமிழ்​நாடு ஆரம்​பப்​பள்ளி ஆசிரியர் கூட்​ட​ணி, தமிழ்​நாடு முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர் சங்​கம் உள்பட 40 சங்​கங்​களின் நிர்​வாகி​கள் குழு​வின் தலை​வ​ரான ககன்​தீப் சிங் பேடியை சந்​தித்து மனு அளித்​தனர். அப்​போது அரசு ஊழியர்​களுக்கு மீண்​டும் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்த வேண்​டும் என்று வலி​யுறுத்​தினர்.

    தலை​மைச் செயலக சங்க மாநில தலை​வர் கு.வெங்​கடேசன், செய​லா​ளர் சு.ஹரிசங்​கர் ஆகியோர் சமர்ப்​பித்த அறிக்​கை​யில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது: பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வது 100 சதவீதம் சாத்​தி​யமே. சிபிஎஸ் திட்​டத்​தில் பணி​யாற்றி ஓய்​வு​பெற்​றுள்ள 45,625 பேருக்கு ஒரு பைசாகூட ஓய்​வூ​தி​ய​மாக கிடைக்​க​வில்​லை. அரசுக்கு கூடு​தல் செல​வினம்​தான் ஏற்​படும். எனவே அத்​திட்​டத்தை அரசு பரிசீலிக்​கக் கூடாது.

    சிபிஎஸ் திட்​டத்​தில் உள்ள அரசு ஊழியர்​களை சேமநல நிதி திட்​டத்​தில் (ஜிபிஎப்) இணைத்​து, அனை​வரை​யும் தமிழ்​நாடு ஓய்​வூ​திய விதி​களின்​கீழ் கொண்டு வர வேண்​டும். சிபிஎஸ் திட்​டத்​தில் ஏற்​கெனவே ஓய்​வு​பெற்​றவர்​களுக்​கும் ஓய்​வூ​தி​யம், குடும்ப ஓய்​வூ​தி​யம் பணிக்​கொடை வழங்க வேண்​டும்.

    இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. பட்​ட​தாரி ஆசிரியர் கழகத்​தின் கவுரவ தலை​வர் அ.மாய​வன், தொழிற்​கல்வி ஆசிரியர் கழக மாநிலத்​தலை​வர் செ.​நா.ஜ​னார்த்​தனன், முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர் கழக மாநிலத்​தலை​வர் எஸ்​.பிர​பாகரன், பொதுச்​செயலாளர் பொ.அன்​பழகன், தமிழ்​நாடு ஆரம்​பப்​பள்ளி ஆசிரியர் கூட்​டணி மாநில பொதுச்​செய​லா​ளர் ச.ம​யில் ஆகியோர் அளித்த அறிக்​கையில், “நிதி பற்​றாக்​குறை​யால் பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை அமல்​படுத்​த​வில்லை என்று வாதம் ஏற்​றுக்​கொள்ள முடி​யாதது” என்​றனர்.

    நேற்​றைய கருத்​துகேட்பு கூட்​டத்​தில் பங்​கேற்ற அனைத்து அரசு ஊழியர்- ஆசிரியர் சங்​கங்​களின் நிர்​வாகி​களும் மீண்​டும் பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை நடை​முறைப்​படுத்​த வேண்​டும்​ என்​று வலி​யுறுத்​தினர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலங்களை வாங்கியவர்களுக்கு நிலம் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்

    August 20, 2025
    மாநிலம்

    ஆக.22-ல் நடக்கவிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு: டிட்டோ ஜாக் அறிவிப்பு

    August 20, 2025
    மாநிலம்

    ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்

    August 20, 2025
    மாநிலம்

    எந்த நிதி மோசடி வழக்கிலாவது 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்த வரலாறு உள்ளதா? – போலீஸாருக்கு ஐகோர்ட் கண்டனம்

    August 20, 2025
    மாநிலம்

    75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முயற்சி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

    August 20, 2025
    மாநிலம்

    பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை தடுப்பது குறித்து பரிசீலிக்க டிஜிபி-க்கு ஐகோர்ட் உத்தரவு

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வீட்டுவசதி வாரியத்தால் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட நிலங்களை வாங்கியவர்களுக்கு நிலம் விடுவிக்கப்படும்: அமைச்சர் தகவல்
    • ஆக.22-ல் நடக்கவிருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைப்பு: டிட்டோ ஜாக் அறிவிப்பு
    • மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: கருத்துகேட்பு கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மனு
    • ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்​ கோரி அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் போராட்டம்
    • இண்டியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு: நாளை மனு தாக்கல் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.