Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மீண்டும் பரவும் கரோனா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
    மாநிலம்

    மீண்டும் பரவும் கரோனா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

    adminBy adminJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மீண்டும் பரவும் கரோனா: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக கரோனா தொற்று நோயை மக்கள் மறந்திருந்த நிலையில், ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவிலும் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வருவது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

    நேற்று முன்தினம் மட்டும் இந்தியாவில் 363 பேர் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்து உள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 199 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    கடந்த மாதம் மே 22-ஆம் தேதி 257 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 3,758 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதாவது, பத்து நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14 மடங்கு உயர்ந்து இருக்கிறது. ஒமைக்ரான் வைரசின் துணை வகை வைரசால் கரோனா தொற்று வேகமாக பரவுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 1,400 பேர் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு ஒமைக்ரான் ஜே.என்-இன் மாறுபாடான எல்.எப்.7 என்ற உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன. சளி, தொண்டை வலி, இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுத்திருக்கும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் இதன் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் கரோனாவின் தாக்கத்ததை கட்டுப்படுத்தும் வண்ணம், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருவோர் கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய சோதனை மேற்கொள்வதும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே, குறிப்பாக முதியவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களிடையே ஏற்படுத்தவும், மருத்துவமனைகளில் தேவையான மாத்திரைகளை இருப்பில் வைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும்.

    இதனைக் கருத்தில் கொண்டு, கரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “புதுச்சேரியில் பாஜக ஆட்சியை கொண்டு வர பாடுபட வேண்டும்” – அமைச்சர் நமச்சிவாயம்

    August 20, 2025
    மாநிலம்

    மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதிப்பு மறு ஆய்வுக்கு 11 பேர் குழு அமைப்பு

    August 20, 2025
    மாநிலம்

    “இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி!” – ‘பதவிப் பறிப்பு’ மசோதா மீது மு.க.ஸ்டாலின் காட்டம்

    August 20, 2025
    மாநிலம்

    ஜெ.தீபாவுக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

    August 20, 2025
    மாநிலம்

    ஒடிசா பெண்ணுக்கு முதல் உதவி அளித்து பிரசவிக்க உதவிய பெண் காவலருக்கு டிஜிபி நேரில் பாராட்டு!

    August 20, 2025
    மாநிலம்

    “தவெக மாநாடு எவ்வித திருப்புமுனையையும் ஏற்படுத்தாது” – அப்பாவு கருத்து

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காபி மற்றும் ஆப்பிள்களில் உள்ள ஃபெருலிக் அமிலம் மருந்துகளை விட கொடிய இதய பிடிப்புகளைத் தடுக்கலாம்: ஆய்வு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய்: புறக்கணிக்கக் கூடாத 5 எச்சரிக்கை அறிகுறிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ரெட்மி 15 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
    • பருவமழையின் போது பயணம் செய்யும் போது உணவு விஷத்தைத் தவிர்ப்பதற்கான 7 வழிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உளவியின்படி, 5 நபர்கள் விலகி இருக்க வேண்டும்- ஏன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.