Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மீஞ்சூர் அருகே வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீஸ் மீது கல்வீச்சு: 50-க்கும் மேற்பட்டோர் கைது
    மாநிலம்

    மீஞ்சூர் அருகே வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீஸ் மீது கல்வீச்சு: 50-க்கும் மேற்பட்டோர் கைது

    adminBy adminSeptember 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மீஞ்சூர் அருகே வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீஸ் மீது கல்வீச்சு: 50-க்கும் மேற்பட்டோர் கைது
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பொன்னேரி: மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் சமரசம் பேசவந்த போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பதிலுக்கு போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நடந்தது என்ன? – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அமர்பிரசாத் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அமர்பிரசாத் நேற்றிரவு காட்டுப்பள்ளியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் தங்கும் குடியிருப்பு பகுதியில், வீட்டின் மாடியில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, தகவலறிந்த காட்டூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து, அமர்பிரசாத்தின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், உயிரிழந்த அமர்பிரசாத்தின் உடலை தங்களிடம் காண்பிக்க வேண்டும், அவரின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும், அமர்பிரசாத்தின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால், காட்டுப்பள்ளி பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனிடையே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகாக அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களிடம் போலீஸார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.

    ஆனால், போராட்டக்காரர்கள் சிலர் போலீஸார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸார் கூட்டத்தை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். இதனால் அப்பகுதியே சிறிது நேரம் கலவர் பூமி போல் இருந்தது. இந்நிலையில், அங்கு தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ‘குஜராத் நிறுவனங்களுக்கு ஆதாயமாக…’ – அமெரிக்க வரி விவகாரத்தில் மோடி மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    September 2, 2025
    மாநிலம்

    பாஸ்போர்ட் பெற தரகர்களை அணுக வேண்டாம்: மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்

    September 2, 2025
    மாநிலம்

    காவிரி குறுக்கே தடுப்பணை கட்ட நிதி இல்லையா? – திமுக அரசுக்கு பாஜக கேள்வி

    September 2, 2025
    மாநிலம்

    கால்நடை வளர்ப்புக்கு கைகொடுத்த பழங்குடியினர் நலத்துறை: திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரத்தில் 1,000 குடும்பங்களில் நம்பிக்கை விதை

    September 2, 2025
    மாநிலம்

    தமிழக பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் முறையீடு

    September 2, 2025
    மாநிலம்

    அதிமுக பிரிந்து இருந்தபடி போட்டியிட்டால் 4-வது இடத்துக்கு சென்றுவிடும்: பெங்களூரு புகழேந்தி

    September 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கருத்துவேறுபாடு கொண்ட 2 நண்பர்களின் கதை ‘பாம்’
    • ‘குஜராத் நிறுவனங்களுக்கு ஆதாயமாக…’ – அமெரிக்க வரி விவகாரத்தில் மோடி மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம்
    • மன அழுத்தம்: இந்த அன்றாட பழக்கம் ரகசியமாக உங்கள் மன அழுத்தத்தை 50% உயர்த்தக்கூடும் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகில் ஒவ்வொரு 100 இறப்புகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலை: உலக சுகாதார அமைப்பு
    • ’தி பாரடைஸ்’ படத்தினை ஹாலிவுட்டிலும் வெளியிட திட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.