Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இருந்து இளையராஜா பெயர் நீக்கம் – ஐகோர்ட்டில் வனிதா தகவல்
    மாநிலம்

    மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இருந்து இளையராஜா பெயர் நீக்கம் – ஐகோர்ட்டில் வனிதா தகவல்

    adminBy adminJuly 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இருந்து இளையராஜா பெயர் நீக்கம் – ஐகோர்ட்டில் வனிதா தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பெயரை நீக்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

    நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் நடிப்பில் உருவான ‘மிசஸ் & மிஸ்டர்’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து ‘மைக்கேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ராத்திரி சிவ ராத்திரி…’ பாடல் இடம்பெற்றுள்ளது.

    தான் இசையமைத்த பாடலை தன்னுடைய அனுமதியில்லாமல் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும், பாடலை மாற்றி அமைத்துள்ளதாகவும் இளைராஜா தரப்பில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது காப்புரிமை மீறிய செயல் என்றும் உடனடியாக அந்தப் பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் எனவும் இளையராஜா மனுவில் தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது இளையராஜா இசையமைத்த பாடலை பயன்படுத்துவதோடு அவரின் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் சார்பில் எக்கோ நிறுவனத்திடம் அனுமதி பெற்று தான் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் காப்புரிமை மீறல் இல்லை எனக் குறிப்பிட்டார்.

    இதனையடுத்து, மனு குறித்து தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், படத்தில் இளையராஜா பெயரை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    அப்போது வனிதா விஜயகுமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீதர், இளையராஜாவின் 4850 பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், அவர்களிடமிருந்து பாடலை வாங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் படத்தில் இளையராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்டதை நீக்கிவிட்டதாக குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்து நீதிபதி இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் சேர்க்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சாதிய படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் உருவாக்க தமிழக அரசுக்கு பிருந்தா காரத் வலியுறுத்தல்

    September 12, 2025
    மாநிலம்

    திமுகதான் ஐசியூ-வில் உள்ளது: உதயநிதிக்கு பழனிசாமி பதிலடி

    September 12, 2025
    மாநிலம்

    ஆசிரியர் ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு

    September 12, 2025
    மாநிலம்

    ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்

    September 12, 2025
    மாநிலம்

    16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தவறியதால் பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்: கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு

    September 12, 2025
    மாநிலம்

    மதுரை மேயர் இந்திராணியை ஓரங்கட்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சாதிய படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் உருவாக்க தமிழக அரசுக்கு பிருந்தா காரத் வலியுறுத்தல்
    • திமுகதான் ஐசியூ-வில் உள்ளது: உதயநிதிக்கு பழனிசாமி பதிலடி
    • ஆசிரியர் ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
    • ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்
    • மாரடைப்பு ஆபத்து: ஜிம்மைத் தொடங்கவா? இளைஞர்களிடையே மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க இருதயநோய் நிபுணர் ஐந்து சோதனைகளை பரிந்துரைக்கிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.