Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மின்தடை ஏற்பட்டதால் ‘நீட்’ மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
    மாநிலம்

    மின்தடை ஏற்பட்டதால் ‘நீட்’ மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

    adminBy adminJuly 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மின்தடை ஏற்பட்டதால் ‘நீட்’ மறுதேர்வு கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நீட் தேர்​வின்​போது மின்​தடை ஏற்​பட்​ட​தால் மறு​தேர்வு நடத்த வேண்​டும் என்று கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

    இளங்​கலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அன்று சென்​னை​யில் பெய்த கனமழை காரண​மாக ஆவடி மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் மின்​தடை ஏற்​பட்​டது. இதன் காரண​மாக, தங்​களால் சரி​யாக தேர்வு எழுத முடி​யாத​தால், மறு​தேர்வு நடத்த உத்​தர​விட வேண்​டும் என்று கோரி, ஆவடி கேந்​திரிய வித்​யாலயா பள்ளி மையத்​தில் தேர்வு எழு​திய 13 பேர், பிற மையங்​களில் தேர்வு எழு​திய 3 பேர் என மொத்​தம் 16 பேர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

    இந்த வழக்​கில் தேசிய தேர்வு முகமை தரப்​பில், ‘மின்​தடை ஏற்​பட்​டாலும், நீட் தேர்வு எழு​திய மாணவர்​கள் யாரும் பாதிக்​கப்​பட​வில்​லை. பெரும்​பாலான மாணவர்​கள் எல்லா கேள்வி​களுக்​கும் பதில் அளித்​துள்​ளனர். மறுதேர்வு நடத்​தி​னால், நாடு முழு​வதும் நீட் தேர்வு எழு​திய லட்​சக்​கணக்​கான மாணவர்​கள் பாதிக்​கப்​படு​வார்​கள்’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.

    இதையடுத்​து, வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, ‘‘நாடு முழு​வதும் சுமார் 22 லட்​சம் பேர் நீட் தேர்வு எழு​திய நிலை​யில், மறு​தேர்வு நடத்​து​வது சாத்​தி​யமற்​றது’’ என்று கூறி வழக்​கு​களை தள்​ளு​படி செய்​தார். இந்த உத்​தரவை எதிர்த்​து, 16 மாணவர்​கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. நீதிப​தி​கள் ஜெ.நிஷா​பானு, எம்​.ஜோ​தி​ராமன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணை நடந்​தது. அப்​போது தேசிய தேர்வு முகமை தரப்​பில், ‘வழக்கு தொடர்ந்த பெரும்​பாலான மாணவர்​கள் 180 கேள்வி​களுக்கு100 கேள்வி​களுக்கு மேல் பதில் அளித்​துள்​ளனர். ஒரு மாணவர் 179 கேள்வி​களுக்கு விடையளித்​துள்​ளார். மின்​தடை​யால் இந்த மாணவர்​களுக்கு எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை’ என்று தெரிவிக்​கப்​பட்​டது.

    இதையடுத்து, நீதிப​தி​கள், ‘‘நீட் தேர்​வில் முறை​கேடு நடந்​துள்​ள​தாக நிரூபிக்​காத வரை மறு​தேர்வு நடத்த உத்​தர​விட முடி​யாது. மறு​தேர்வு நடத்த உத்​தர​விட்​டால் அது மற்ற மாணவர்​களுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும். எனவே, மனு​தா​ரர்​களின் கோரிக்​கையை ஏற்க முடி​யாது என்ற தனி நீதிப​தி​யின் உத்​தரவு உறுதி செய்​யப்​படு​கிறது’’ என்று தீர்ப்​பளித்​து, மேல்​முறை​யீட்​டு மனுவை தள்​ளுபடி செய்​தனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை

    July 4, 2025
    மாநிலம்

    கோயில் காவலாளி கொல்லப்பட்ட விவகாரம்: திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி 2-வது நாளாக விசாரணை

    July 4, 2025
    மாநிலம்

    ‘அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்!’ – அமித் ஷா இப்படிச் சொன்னதன் அர்த்தம் என்ன?

    July 4, 2025
    மாநிலம்

    கோயில் ஊழியர் தனிப்படை காவலர்களால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு

    July 4, 2025
    மாநிலம்

    மடப்புரம் அஜித்குமார் மீது குற்றம்சாட்டிய நிகிதா குடும்பத்தினர் மீது உதவி எஸ்.பி.யிடம் புகார்

    July 4, 2025
    மாநிலம்

    தமிழரசி எம்எல்ஏவுடன் திலகபாமா வாக்குவாதம்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கொல்கத்தா பாலியல் வழக்கில் பிர​மாண பத்​திரம் தாக்கல் செய்ய உத்தரவு
    • திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
    • சீன பொறியாளர்கள் திரும்ப பெறப்பட்டதால் பாக்ஸ்கானில் ஐ-போன் உற்பத்தி பாதிப்பு
    • படுக்கையறையில் 5 மறைக்கப்பட்ட ஆபத்துகள் (மற்றும் அவர்களைப் பற்றி என்ன செய்ய வேண்டும்)
    • 500% வரி அச்சுறுத்தல் குறித்து அமெரிக்காவிடம் கவலை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.