Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மா விவசாயிகளுக்கு இழப்பீடு: பழனிசாமி கோரிக்கை
    மாநிலம்

    மா விவசாயிகளுக்கு இழப்பீடு: பழனிசாமி கோரிக்கை

    adminBy adminJune 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மா விவசாயிகளுக்கு இழப்பீடு: பழனிசாமி கோரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: தமிழகத்தில் 35 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர்களை பாதிக்கும் புதிய பதவி உயர்வு உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: காவல் துறையினருக்கு திமுக அரசு பதவி உயர்வில் மிகப் பெரிய சலுகை அளிப்பதுபோல், கடந்த ஜூன் 13-ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2-ம் நிலைக் காவலர்கள் 23 ஆண்டுகால பணிக்குப் பிறகு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுவார்கள் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, முதல்நிலைக் காவலராக 5 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதை, 3 ஆண்டுகளாகக் குறைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    திமுக தேர்தல் அறிக்கையில் 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை காற்றிலே பறக்கவிட்டுள்ளது திமுக. இந்தப் புதிய உத்தரவால், சுமார் 35 ஆயிரம் காவலர்களுக்குப் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்படும்.

    மக்களைக் காக்கும் பணியில் உள்ள பெரும்பாலான காவலர்கள் பாதிக்கப்படக்கூடிய இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும். காவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், வாக்குறுதிப்படி 20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    மா விவசாயிகள்: இதேபோல் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட தமிழக ‘மா’ விவசாயிகளுக்காக பழனிசாமி தனது எக்ஸ்தள பக்கத்தில் விடுத்த கோரிக்கை: மா விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குரலாய் அதிமுக சார்பில் கடந்த ஜூன் 20-ம் தேதி கிருஷ்ணகிரி, திண்டுக்கல்லில் போராட்டம் நடத்தி, ‘மா’ விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. ஆனால், வழக்கம் போல இங்குள்ள திமுக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை.

    இந்நிலையில், கர்நாடக மாநில ‘மா’ விவசாயிகளுக்கு விலை பற்றாக்குறையை ஈடுசெய்யும் திட்டத்தின்படி இழப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை வரவேற்கிறேன். தமிழக விவசாயிகளுக்கும் இத்தகைய இழப்பீட்டை அறிவித்து வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இந்த இழப்பீடு பெரும் உதவியாக இருக்கும். அதிமுக என்றும் விவசாயிகளுடன் துணை நிற்கும். அவர்களின் குரலாக என்றென்றும் ஒலிக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கேரளா – தமிழகம் இடையிலான 20 சாலைகளிலும் கண்காணிப்பு

    July 12, 2025
    மாநிலம்

    அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு – முழு விவரம்

    July 12, 2025
    மாநிலம்

    உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பேரணி, கருத்தரங்கம்: போட்டியில் வென்றவர்களுக்கு சுகாதார துறை பாராட்டு

    July 12, 2025
    மாநிலம்

    பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

    July 12, 2025
    மாநிலம்

    ஜூலை 15-ம் தேதி முதல் கோவை, நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு

    July 12, 2025
    மாநிலம்

    ஒப்புதல் மனை பிரிவுகளின் பொது ஒதுக்கீட்டு இடங்களின் பயன்பாட்டை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி: கேரளா – தமிழகம் இடையிலான 20 சாலைகளிலும் கண்காணிப்பு
    • அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு – முழு விவரம்
    • உலக மக்கள்தொகை தினத்தையொட்டி பேரணி, கருத்தரங்கம்: போட்டியில் வென்றவர்களுக்கு சுகாதார துறை பாராட்டு
    • பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை
    • இந்த 4 பொதுவான உணவுகளைத் தவிர்க்க சத்குரு ஏன் அறிவுறுத்துகிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.