Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மார்க்சிஸ்ட் கட்சியினரை தாக்கிய இந்து முன்னணி, பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்க: பெ.சண்முகம்
    மாநிலம்

    மார்க்சிஸ்ட் கட்சியினரை தாக்கிய இந்து முன்னணி, பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்க: பெ.சண்முகம்

    adminBy adminJune 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மார்க்சிஸ்ட் கட்சியினரை தாக்கிய இந்து முன்னணி, பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்க: பெ.சண்முகம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது, தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல்லில் திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது செய்து தமிழக அரசு மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தகராறு செய்து ஆர்.சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் பாக்கியம், சண்முகவேல், ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து சரத்குமார் மற்றும் சண்முகவேல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற கட்சியின் தோழர்களை கும்பலாக திரண்டிருந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினர் அங்கேயும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மாற்றுத் திறனாளியான ஜெயந்தி, பொன்மதி, பெருமாள், விஷ்ணுவர்த்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    மக்கள் மத்தியில் தாங்கள், அம்பலமாவதால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல்லில் திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மகாகவி பாரதியார் நினைவு தினம்: ஆளுநர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

    September 12, 2025
    மாநிலம்

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்தோர் பெயர்​ பதியப்பட்ட மதிப்புச்சுவர் செப்​.30-ல் திறப்பு

    September 12, 2025
    மாநிலம்

    கனிமவள துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே கனிமம் கொள்ளை: பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

    September 12, 2025
    மாநிலம்

    சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள பக்தர்களை அனுமதிக்க முடியாது: தீட்சிதர் தரப்பில் வாதம்

    September 12, 2025
    மாநிலம்

    ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்

    September 12, 2025
    மாநிலம்

    அதிமுக – பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படவில்லை: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மகாகவி பாரதியார் நினைவு தினம்: ஆளுநர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
    • இதய ஆரோக்கியம்: உடனடி கவனம் தேவைப்படும் தடுக்கப்பட்ட தமனிகளின் 5 எச்சரிக்கை அறிகுறிகள்
    • தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு
    • இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
    • சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்தோர் பெயர்​ பதியப்பட்ட மதிப்புச்சுவர் செப்​.30-ல் திறப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.