Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மாநிலங்​களுக்கு விடு​தலையை பெற்று தந்​துள்​ளது தமிழகம்: வழக்​கறிஞர்​கள் பாராட்டு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் பெரு​மிதம்
    மாநிலம்

    மாநிலங்​களுக்கு விடு​தலையை பெற்று தந்​துள்​ளது தமிழகம்: வழக்​கறிஞர்​கள் பாராட்டு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் பெரு​மிதம்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மாநிலங்​களுக்கு விடு​தலையை பெற்று தந்​துள்​ளது தமிழகம்: வழக்​கறிஞர்​கள் பாராட்டு விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் பெரு​மிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஆளுநருக்கு எதி​ரான வழக்​கில் கிடைத்​திருக்​கும் தீர்ப்பு என்​பது தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தால் மாநிலங்​களுக்கு பெற்​றுத்​தந்​திருக்க கூடிய மாபெரும் விடு​தலை என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

    தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்றி அனுப்​பிய 10 சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் நிலு​வை​யில் வைத்​திருந்த நிலை​யில் அதை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்​தது. இந்த வழக்​கில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோஹ்தகி, அபிஷேக் சிங்வி, ராகேஷ் திவே​தி, பி.​வில்​சன் ஆகியோர் வழக்​காடி வெற்​றியை பெற்​றுத் தந்​தனர். இவர்​களுக்​கான பாராட்டு விழா சென்னை கிண்​டி​யில் நேற்று நடை​பெற்​றது.

    முதல்​வர் ஸ்டா​லின் தலைமை வகித்​து, வழக்​கறிஞர்​களுக்கு பாராட்டு தெரி​வித்​து, பொன்​னாடை அணி​வித்​து, செங்​கோல்​களை நினைவு பரி​சாக வழங்கி கவுர​வித்​தார். விழாவுக்கு வர இயலாத முகுல் ரோஹ்தகிக்​கும் முதல்​வர் வாழ்த்து தெரி​வித்​தார். தொடர்ந்து அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வரவேற்​புரை​யாற்றி முதல்​வர் ஸ்டா​லினுக்​கு, அரசி​யலமைப்பு சட்​டத்​தின் முகப்பு உரையை, நினைவு பரி​சாக வழங்​கி​னார்.

    பின்​னர் நிகழ்​வில் முதல்​வர் ஸ்டா​லின் பேசி​ய​தாவது: மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மாநில அரசுகளை, ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்​டுப்​படுத்​தலாம் என்ற எண்​ணத்​துடன், போட்டி அரசுகளை நடத்த தொல்​லைகள் கொடுக்​கும் காலத்​தில், மிக முக்​கிய​மான தீர்ப்பை உச்ச நீதி​மன்​றம் வழங்​கி​யிருக்​கிறது. இது தமிழகத்​துக்கு மட்​டுமின்​றி, மக்​களாட்​சிக்​கும், மாநில சட்​டப்​பேர​வை​களின் உரிமை​களுக்​கும் கிடைத்த மகத்​தான வெற்​றி.

    ஆளுநருக்​கும், குடியரசுத் தலை​வருக்​கும் காலக்​கெடு நிர்​ண​யித்​தது மிகப்​பெரிய வெற்​றி. மத்​திய அரசுக்​கும், மாநில அரசுக்​கும் இடையே இருக்​கக்​கூடிய அதி​காரப் பகிர்​வில் மாநில அரசுகளின் உரிமை​களை எக்​காலத்​தி​லும் பாது​காக்​கும் வரலாற்று சாசன​மாக இந்த தீர்ப்பு நிலைத்​திருக்​கும்.

    இது இந்​திய மாநிலங்​களுக்கு தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தால் பெற்​றுத் தந்​திருக்​கக் கூடிய மாபெரும் விடு​தலை. வழக்​குத் தாக்​கல் செய்த தமிழக​மும், வாதிட்ட வழக்​கறிஞர்​களும், தீர்ப்​பளித்த நீதிப​தி​களும் வரலாற்​றில் என்​றைக்​கும் நிலைத்​திருப்​பார்கள் என்​பது உறு​தி. இந்த தீர்ப்பு தந்த நம்​பிக்​கை​யில்​தான் மாநில சுயாட்​சிக் குழு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

    முன்​ன​தாக வழக்​கறிஞர் வில்​சன் பேசும்​போது, “எதிர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​களில் தங்​களது பதவியை பயன்​படுத்தி இடையூறு ஏற்​படுத்​தும் ஆளுநர்​களுக்கு எதி​ராக வழங்​கப்​பட்ட உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்பு தமிழகத்​துக்கு மட்​டுமின்றி அனைத்து மாநிலங்​களுக்​கு​மானது” என்​றார்.

    வரம்பு மீறக்கூடாது: தொடர்ந்து வழக்​கறிஞர் ராகேஷ் திவேதி பேசும்​போது, “ஆளுநர் என்​பவர் மாநிலங்​களில் அமைக்​கப்​படும் அமைச்​சர​வைக்கு ஆலோ​சனை​கள் வழங்​கலாமே தவிர, தனது வரம்பு மீறி நடந்து கொள்​ளக்​கூ​டாது. தற்​போது உச்ச நீதி​மன்​றம் அதை சரிசெய்​துள்​ளது” என்றார்.

    வழக்​கறிஞர் அபிஷேக் சிங்வி பேசுகை​யில், “உண்​மை​யாக செங்​கோலுக்கு தகு​தி​யுடைய​வர் முதல்​வர் ஸ்டா​லின்​தான். பெரி​யார், அண்​ணா, கருணாநி​தியை தொடர்ந்து முதல்​வர் ஸ்டா​லினும் தமிழகத்தை சரி​யான பாதை​யில் வழிநடத்தி கொண்​டிருக்​கிறார்” என்​றார். இந்​நிகழ்​வில் மூத்த வழக்​கறிஞர்​கள், முன்​னாள் நீதிப​தி​கள், அமைச்​சர்​கள்​, எம்​.பி.க்​கள்​, எம்​எல்​ஏக்​கள்​ உள்​ளிட்​டோர்​ பலர்​ பங்​கேற்​றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை

    July 4, 2025
    மாநிலம்

    கோயில் காவலாளி கொல்லப்பட்ட விவகாரம்: திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி 2-வது நாளாக விசாரணை

    July 4, 2025
    மாநிலம்

    ‘அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்!’ – அமித் ஷா இப்படிச் சொன்னதன் அர்த்தம் என்ன?

    July 4, 2025
    மாநிலம்

    கோயில் ஊழியர் தனிப்படை காவலர்களால் தாக்கப்படுவதை வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு

    July 4, 2025
    மாநிலம்

    மடப்புரம் அஜித்குமார் மீது குற்றம்சாட்டிய நிகிதா குடும்பத்தினர் மீது உதவி எஸ்.பி.யிடம் புகார்

    July 4, 2025
    மாநிலம்

    தமிழரசி எம்எல்ஏவுடன் திலகபாமா வாக்குவாதம்

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
    • சீன பொறியாளர்கள் திரும்ப பெறப்பட்டதால் பாக்ஸ்கானில் ஐ-போன் உற்பத்தி பாதிப்பு
    • படுக்கையறையில் 5 மறைக்கப்பட்ட ஆபத்துகள் (மற்றும் அவர்களைப் பற்றி என்ன செய்ய வேண்டும்)
    • 500% வரி அச்சுறுத்தல் குறித்து அமெரிக்காவிடம் கவலை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
    • கோயில் காவலாளி கொல்லப்பட்ட விவகாரம்: திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி 2-வது நாளாக விசாரணை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.