Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை சுற்றுச்சூழல், மனிதகுல மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
    மாநிலம்

    மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை சுற்றுச்சூழல், மனிதகுல மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

    adminBy adminSeptember 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வியை சுற்றுச்சூழல், மனிதகுல மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவாரூர்: ‘​மாணவர்​கள் தாங்​கள் கற்ற கல்வியை, இயற்கை மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்​புக்​கும், மனித குலத்​தின் மேம்பாட்டுக்​கும் பயன்​படுத்த வேண்​டும்’ என குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு அறி​வுறுத்​தி​னார். திரு​வாரூர் மாவட்​டம் நீலக்​குடி​யில் உள்ள தமிழ்​நாடு மத்​திய பல்​கலைக்​கழகத்​தின் 10-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது.

    பல்​கலைக்​கழக வேந்​தர் பத்​ம​நாபன் தலைமை வகித்​தார். தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, புதுச்​சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன், தமிழக அமைச்​சர்​கள் கோவி.செழியன், கீதா ஜீவன் ஆகியோர் பங்​கேற்​றனர். துணைவேந்​தர் பேராசிரியர் கிருஷ்ணன் வரவேற்​றார்.

    விழா​வில், முதன்மை மாணவர்​களாகத் திகழ்ந்த 45 பேருக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, தங்​கப்​ப​தக்​கங்​களை வழங்கி பேசி​ய​தாவது: தமிழ்​நாடு மத்​திய பல்​கலைக்​கழகம், சமூகக் கல்​லூரி அம்​பேத்​கர் மையம் மூலம் விளிம்பு நிலை மக்​களின் முன்​னேற்​றத்​துக்கு பங்​களித்து வரு​கிறது. இங்கு பயிலும் 3 ஆயிரம் பேரில் அதிக அளவு மாணவி​கள் இருப்​பதும், தங்​கப்​ப​தக்​கம் பெற்​றவர்​களில் 3-ல் 2 பங்கு பேர் மாணவி​களாக இருப்​பதும் மகிழ்ச்சி அளிக்​கிறது.

    மாணவர்​கள் கற்​கும் கல்​வி, சமூகத்​துக்​குப் பயனளிப்​ப​தாக இருக்க வேண்​டும். எனவே, மாணவர்​கள் தாங்​கள் கற்ற கல்​வியை, அறி​வியல் தொழில்​நுட்​பத்​துக்​கும், இயற்கை மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்​புக்​கும், மனித குலத்​தின் மேம்​பாட்​டுக்​கும் பயன்​படுத்த வேண்​டும்.

    வாழ்க்கை முழு​வதும் கற்​றுக்​ கொண்டே இருக்க வேண்​டும். இன்​றைய டிஜிட்​டல் யுகத்​தில் கல்வி கற்க பல்​வேறு வழி​வகைகள் இருக்​கின்​றன. நமது பாரம்​பரி​யத்தை அறிந்து கொள்​வது நிகழ்​கால தலை​முறைக்கு எளிமை​யாக உள்​ளது. இதைத்​தான் தேசிய கல்விக்கொள்கை மைய​மாகக் கொண்​டுள்​ளது.

    20 ஆண்​டு​களில் இணைய புரட்சி பல்​வேறு தொழில்​களை உரு​வாக்​கி​யுள்​ளது. ஏஐ தொழில்​நுட்​பம் மற்​றும் தொழில் புரட்சி 4.0 ஆகியவை நமது வேலை மற்​றும் பயன்​பாட்​டில் மேலும் அதிக மாற்​றங்​களைக் கொண்டு வரும். இத்​தகைய சூழலில் புதிய திறன்​களை கற்​றுக்​கொண்டு தங்​களை தகவ​மைத்​துக் கொண்​டால் மாற்​றத்​தின் தலை​வர்​களாக உரு​வாக முடி​யும். இவ்​வாறு அவர் பேசி​னார். அதைத்​தொடர்ந்து விழா​வில், 568 மாணவி​கள், 442 மாணவர்​கள் என 1,010 பேர் பட்​டம் பெற்​றனர்.

    ஸ்ரீரங்கத்தில் தரிசனம்: பின்னர், திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். அங்கிருந்து காரில் திருச்சி விமான நிலையம் சென்ற அவர், தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததால் நகையை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

    September 4, 2025
    மாநிலம்

    பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்

    September 4, 2025
    மாநிலம்

    வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறை 

    September 4, 2025
    மாநிலம்

    இளநிலை உதவியாளரை பெண் கவுன்சிலர் காலில் விழவைத்த சம்பவம்: திண்டிவனத்தில் 5 பேர் மீது வழக்கு

    September 4, 2025
    மாநிலம்

    மேயர்கள் மாற்றத்துக்கு ஊழல் பணத்தை பங்கிடுவதில் ஏற்பட்ட மோதலே காரணம்: பழனிசாமி குற்றச்சாட்டு

    September 4, 2025
    மாநிலம்

    சசிகலாவை நான் சந்திக்கவில்லை: செங்கோட்டையன் மறுப்பு

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முதுகெலும்பு சிக்கல்களைத் தடுக்க நடைபயிற்சி போது தோரணையை மேம்படுத்துவதற்கான 6 வழிகள் – இந்தியாவின் டைம்ஸ்
    • வாட்ச்: ஹவாயின் கிலாவியா எரிமலை மீண்டும் வெடிக்கும்; உருகிய எரிமலைக்கு சாட்சியாக கூட்டம் சேகரிக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு: கல்வி நிறுவனங்கள் செப்.7 வரை மூட உத்தரவு
    • யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரை இறுதி சுற்றில் அல்கராஸ், ஜோகோ​விச்
    • வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததால் நகையை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.