Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
    மாநிலம்

    மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

    adminBy adminSeptember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ​மாணவர்​களிடம் சாதிய உணர்வு , பாலின பாகு​பாடு போன்ற பிற்​போக்​குத்​தனங்​கள் தலை​யெடுக்​காமல் பார்த்​துக்​கொள்ள வேண்​டும் என்று ஆசிரியர்களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

    பள்​ளிக்​கல்​வித் துறை சார்​பில் முப்​பெரும் விழா சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. இதில்புதி​தாக தேர்​வுசெய்​யப்​பட்ட 2,715 ஆசிரியர்​களுக்​கான நுழைவுநிலை பயிற்​சியை முதல்​வர் தொடங்​கி​வைத்​தார். தொடர்ந்து ரூ.122 கோடி மதிப்​பீட்​டில் புதி​தாக கட்​டப்​பட்ட 76 அரசு பள்​ளிக்​கட்​டிடங்​களை திறந்​து​வைத்த அவர், ரூ.310 கோடி​யில் 262 அரசு பள்​ளி​களுக்கு புதிய கட்​டிடங்​கள் கட்​டு​வதற்​கும், பாரத சாரண-​சா​ரணி​யர் தலைமை அலு​வலக கட்​டிடத்​துக்​கும் அடிக்​கல் நாட்​டி​னார்.

    பின்​னர் அவர் பேசி​ய​தாவது: ஆசிரியர் என்​பவர் பாடப்​புத்​தகத்​தில் இருந்து மட்​டுமல்​லாமல் தன்​னுடைய கல்​வியை​யும், அனுபவத்​தை​யும் மாணவர்​களுக்கு சொல்​லிக் கொடுத்​து, எதிர்​காலத்​தில் நல்​லொழுக்​கம்​மிக்க சமு​தா​யத்தை உரு​வாக்​கு​கிறவர்​கள். இன்​றைய தினம் அறி​வியல், வரலாறு, கணிதம் என எந்​தப் பாட​மாக இருந்​தா​லும், அதன் ஆழத்​தை, மிக​வும் எளி​தாக கற்​றுக் கொள்​வதற்​கான வாய்ப்​பு​கள் உரு​வாகி​விட்​டன. இத்​தகவல்​களை மாணவர்​களின் அறி​வாற்​றலுக்​குக் கொண்டு சென்று அவர்​களு​டைய சிந்​தனையைத் தூண்​டி, அறிவை மேம்​படுத்த வேண்​டிய பெரும் பணி ஆசிரியர்​களுக்கு இருக்​கிறது.

    ஏனென்​றால், எந்த அளவுக்கு அறி​வார்ந்த தகவல்​கள் கொட்​டிக்​கிடக்​கிறதோ, அதற்கு கொஞ்​ச​மும் குறைவு இல்​லாமல் தேவையற்ற குப்​பை​யும் இருக்​கின்​றன. நாம்​தான் குழந்​தைகளுக்கு சரி​யானதை அடை​யாளம் காட்​ட​வேண்​டும். எதற்​கெடுத்​தா​லும் தொழில்​நுட்​பத்தை மட்​டுமே நம்பி இருக்​கின்ற தலை​முறை​யாக மாணவர்​கள் மாறி​விடக் கூடாது.

    தொழில்​நுட்​பத்​துக்​கும், மனிதச் சிந்​தனைக்​கு​மான வேறு​பாட்டை உணர்த்த வேண்​டும். அறத்​தின் வலிமை​யை​யும், நேர்​மை​யின் தேவையை​யும் மாணவர்​களுக்கு கற்​றுக் கொடுக்க வேண்​டும். பாடப் புத்​தகங்​களைக் கடந்​து, இலக்​கி​யங்​களை, பொது அறி​வுத்தகவல்​களை, சமூக ஒழுக்​கத்​தை, சுற்​றுச்​சூழல் விழிப்​புணர்​வை, காலநிலை மாற்​றம் குறித்த தெளிவை, மாற்று எரிசக்​தி​களின் தேவையைப் பற்​றியெல்​லாம் புரிய வைக்க வேண்​டும். மாணவர்​களிடம் நீங்​கள் ஒரு நண்​ப​னாக பழக வேண்​டும்.

    குழந்​தைகள் யாரிட​மும் பேசாமல் அமை​தி​யாக இருப்​பார்​கள். சிலர் கலகல​வென்று பேசு​வார்​கள். சிலர் படித்த குடும்​பங்​களில் இருந்து வந்​திருப்​பார்​கள். சிலருடைய குடும்​பங்​கள் இப்​போது​தான் கல்வி கற்க தொடங்​கி​யிருப்​பார்​கள். அனை​வருடைய வீட்​டிலும் ஒரே சூழல் இருக்க வேண்​டும் என்ற அவசி​யம் இல்​லை. அதனால், அனை​வரை​யும் ஒரே அளவு​கோலோடு, முன்​முடிவோடு அணுகக்​கூ​டாது. அவர்​களின் குடும்​பச்​சூழல் என்ன, அவர்​கள் சமூகத்​தில் எதிர்​கொள்​கின்ற பிரச்​சினை என்​னவென்று கவனித்​து, அவர்​களை வளர்த்​தெடுக்க வேண்​டியது உங்​களு​டைய பொறுப்​பு. ஏனென்​றால், நீங்​கள் தான் குழந்​தைகளின் இரண்​டாவது பெற்​றோர்.

    கல்வி தொடர்​பாக செய்​யும் பணி​களைத் தாண்​டி, மாணவர்​களுக்​குள்ளே சாதிய உணர்​வு, பாலின பாகு​பாடு போன்ற பிற்​போக்​குத்​தனங்​கள் தலை​யெடுக்​காமல் ஆசிரியர்​கள் பார்த்​துக் கொள்ள வேண்​டும். மாணவர்​களுக்கு சமத்​து​வம், சமூகநீ​தி​யின் தேவையைப் பற்றி எடுத்​துச் சொல்​லுங்​கள். மாணவர்​களிடம் அடிக்​கடி மனது​விட்டு பேசுங்​கள். நூல​கங்​களை​யும், வாசிப்​புப் பழக்​கத்​தை​யும் அறி​முகப்​படுத்​துங்​கள். அதற்​கு, ஆசிரியர்​கள் முதலில் படித்​துக் கொண்டே இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

    முன்​ன​தாக பள்​ளிக்​கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஸ் வரவேற்​றுப் பேசும்​போது, “அரசு பள்​ளி​களில் 8,380 ஆசிரியர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். விரை​வில் பட்​ட​தாரி ஆசிரியர்​கள், முதுகலை ஆசிரியர்​கள், வட்​டார கல்வி அலு​வலர்​கள் என 3,227 பேர் தேர்வு செய்​யப்பட உள்ளனர்” என்​றார்.

    இவ்​விழா​வில், துணை முதல்​வர் உதயநிதி, அமைச்சர்​கள் கே.என்​.நேரு, மா.சுப்​பிரமணி​யன், சி.​வி.கணேசன், நாசர், ஆசிரியர்

    தேர்வு வாரிய தலைவர் எஸ்​.ஜெயந்​தி, ஒருங்​கிணைந்த பள்​ளிக்​கல்வி திட்ட இயக்​குநர் மா.ஆர்த்​தி, பள்​ளிக்​கல்வி இயக்​குநர் எஸ்​.கண்​ணப்​பன், தொடக்​கக்​கல்வி இயக்​குநர் பி.ஏ.நரேஷ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். நிறை​வாக, பள்​ளிக்​கல்​வித்​ துறை​யின்​ செயலர்​ பி.சந்​திரமோகன்​ நன்​றி கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் ஆங்கிலேய கல்விமுறையை தொடர்வது வேதனை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதால் விஜய்யின் தாக்குதல் திமுக மீது மட்டுமே இருக்க வேண்டும்: தமிழிசை கருத்து

    September 21, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

    September 21, 2025
    மாநிலம்

    பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்

    September 21, 2025
    மாநிலம்

    அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து: ஜவாஹிருல்லா கண்டனம்

    September 21, 2025
    மாநிலம்

    புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும்: மத்திய தொல்லியல் துறை இயக்குநர் கருத்து

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இமாச்சலில் கனமழை: இதுவரை 427 பேர் உயிரிழப்பு
    • நினைத்ததை நிறைவேற்றும் அகரம் பாலமுருகன் | ஞாயிறு தரிசனம்
    • ஷூ வடிவம் தோரணை மற்றும் வலியை எவ்வாறு பாதிக்கிறது: கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க சரியான பாதணிகளைத் தேர்வுசெய்ய ஒரு எளிய வழிகாட்டி – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு: நாளை தொடங்கி அக்.7 வரை நடக்கிற‌து
    • மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.