Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
    மாநிலம்

    மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    adminBy adminSeptember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மழை: சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவள்ளூர்: மழை​யால் நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து சென்​னை குடிநீர் ஏரி​களுக்கு மழைநீர் வரத்து அதி​கரித்​துள்​ளது.

    தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் நேற்​று​முன்​தினம் இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்​தது.

    மாவட்​டத்​தில் சராசரி​யாக 4 செ.மீ. மழை பெய்​தது. இம்​மழை, செங்​குன்​றம், தாமரைப்​பாக்​கம், ஊத்​துக்​கோட்டை ஆகிய இடங்​களில் கனமழை​யாக​வும், கும்​மிடிப்​பூண்​டி, பொன்​னேரி, சோழவரம், பூந்​தமல்​லி, ஆவடி, திரு​வள்​ளூர், திரு​வாலங்​காடு, பள்​ளிப்​பட்டு ஆகிய இடங்​களில் மித​மான மழை​யாக​வும், திருத்​தணி, ஆர்​.கே.பேட்​டை, பூண்​டி, ஜமீன் கொரட்​டூர் ஆகிய இடங்​களில் லேசான மழை​யாக​வும் பெய்​தது.

    இம்​மழை​யால் திரு​வள்​ளூர் மற்​றும் காஞ்​சிபுரம் மாவட்ட பகு​தி​களில் உள்ள சென்​னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்​யும் புழல், பூண்​டி, சோழ​வரம் மற்​றும் செம்​பரம்​பாக்​கம் ஆகிய ஏரி​களுக்கு நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் இருந்து வரும் மழை நீர் வரத்து அதி​கரித்​துள்​ளது.

    நேற்று காலை நில​வரப்​படி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 595கன அடி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 360 கன அடி, செம்​பரம்​பாக்​கம் ஏரிக்கு விநாடிக்கு 225 கன அடி, சோழ​வரம் ஏரிக்கு விநாடிக்கு 30 கன அடி என, மழைநீர் வரத்து உள்​ளது.

    வேகமாக நிரம்பும் ஏரிகள்: அது​மட்​டுமின்​றி, பூண்டி ஏரி​யில் இருந்து இணைப்பு கால்​வாய் மூலம் புழல் ஏரிக்கு விநாடிக்கு 135 கன அடி, செம்​பரம்​பாக்​கம் ஏரிக்கு விநாடிக்கு 250 கன அடி, ஆந்​திர மாநிலம்- கண்​டலேறு அணை​யில் இருந்து கிருஷ்ணா கால்​வாய் மூலம் பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 420 கனஅடி என நீர் வரத்து உள்​ளது.

    எனவே, 3,300 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட புழல் ஏரி​யின் நீர் இருப்பு 3,058 மில்​லியன் கன அடி​யாக​வும், 3,231 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட பூண்டி ஏரி​யின் நீர் இருப்பு 2,455 மில்​லியன் கன அடி​யாக​வும் உள்​ளது. அதே​போல், 3,645 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட செம்​பரம்​பாக்​கம் ஏரி​யின் நீர் இருப்பு 1,075 மில்​லியன் கன அடி​யாக​வும், 1,081 மில்​லியன் கன அடி கொள்​ளளவு கொண்ட சோழ​வரம் ஏரி​யின் நீர் இருப்பு 172 மில்​லியன் கன அடி​யாக​வும் உள்​ளது என, நீர்​வள ஆதா​ரத்​ துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் செப். 3-ம் தேதி குடியரசுத் தலைவர் முர்மு சுவாமி தரிசனம்

    September 1, 2025
    மாநிலம்

    திமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேற்றம்: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    September 1, 2025
    மாநிலம்

    மதுரை ஆதீனத்துக்கு எதிராக ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்புரான் தர்ணா போராட்டம்

    September 1, 2025
    மாநிலம்

    2 வாரமாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம்!

    September 1, 2025
    மாநிலம்

    குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த கழிவுநீர்: ஆவடியில் பொதுமக்கள் சாலை மறியல்

    September 1, 2025
    மாநிலம்

    டிஜிபி நியமன விவகாரம்: பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட திமுக அரசு – அண்ணாமலை விமர்சனம்

    September 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் செப். 3-ம் தேதி குடியரசுத் தலைவர் முர்மு சுவாமி தரிசனம்
    • ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ ஆகியவற்றில் ஒரு எழுச்சியை டெல்லி தெரிவிக்கிறது: பாதுகாப்பாக இருப்பது மற்றும் தொற்றுநோயைத் தடுப்பது எப்படி
    • ‘தேசத்துரோகம் மற்றும் சட்டவிரோதமானது’: புகலிடம் கோருவோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் குறித்த எலோன் மஸ்க் பிளாஸ்ட்ஸ் இங்கிலாந்து நிலைப்பாடு | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஷாங்காய் மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி
    • திமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து வகையிலும் முன்னேற்றம்: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.