Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மழையால் விழுந்த மரத்தை அகற்றாததால் இ-சேவை மையத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி
    மாநிலம்

    மழையால் விழுந்த மரத்தை அகற்றாததால் இ-சேவை மையத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி

    adminBy adminJuly 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மழையால் விழுந்த மரத்தை அகற்றாததால் இ-சேவை மையத்துக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: புரசை​வாக்​கம் தாலுகா அலு​வல​கத்​தில் உள்ள இ-சேவை மையம் முன்பு விழுந்த மரத்தை வரு​வாய்த்​ துறை​யினர் அகற்​றாத​தால் பொது​மக்​கள் அவதிக்​குள்​ளா​யினர். சென்னை புரசை​வாக்​கம் தாலுகா அலு​வலக வளாகத்​தில் 2 அலகு​கள் கொண்ட இ-சேவை மையம் மற்​றும் ஒரு ஆதார் மையம் செயல்​பட்டு வரு​கிறது.

    இந்த மையத்​துக்கு தின​மும் 150-க்​கும் மேற்​பட்​டோர் வந்​து, ஆதார் தொடர்​பான சேவை​கள் மற்​றும் வரு​வாய்த்​துறை, சமூக நலத்துறை சார்ந்த சான்​றுகளை பெற விண்​ணப்​பித்து வரு​கின்​றனர். சென்​னை​யில் கடந்த ஒரு வார​மாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலை​யில், இ-சேவை மையம் முன்பு இருந்த மரம், நேற்று முன்​தினம் வேரோடு சாய்ந்து விழுந்​தது.

    இந்த மையத்​தின் பணி​யாளர்​கள் நேற்று கடும் சிரமத்​துக்​கிடையே மையத்​துக்​குள் நுழைந்​துள்​ளனர். அதன் பின்​னர் காலை 10 மணிக்​குமேல் பொது​மக்​கள் அதிக அளவில் வரத் தொடங்​கினர். ஒவ்​வொரு​வரும் ஆபத்​தான நிலை​யில், மரத்​தின் மீது ஏறி, இறங்கி கால் நடுங்​கியபடி இ-சேவை மையத்​துக்​குள் செல்ல நேர்ந்​தது. வயதானவர்​கள், மையத்​துக்​குள் செல்ல முடி​யாமல் திரும்பிச் சென்​றனர்.

    இது தொடர்​பாக இ-சேவை மைய பணி​யாளர்​களிடம் கேட்​ட​போது, “வரு​வாய்த்​துறை அதி​காரி​களிடம் தகவல் தெரி​வித்து விட்டோம்” என்​றனர். இ சேவை மையத்​துக்​குள் செல்ல முடி​யாமல் திரும்​பிச் சென்ற பொது​மக்​கள் கூறிய​தாவது: ஆண்​டு​தோறும் பேரிட​ரால் பாதிக்​கும் மாநகர​மாக சென்னை உள்​ளது. அதி​காரி​களும், அமைச்​சர்​களும், மேயரும் பேட்டி கொடுக்​கும்​போது, “489 ஹைட்​ராலிக், டெலஸ்​கோபிக் மர அறுவை இயந்​திரங்​கள், 19 ஆயிரம் பணி​யாளர்​கள் தயா​ராக உள்​ளனர்” என கூறுகின்​றனர்.

    ஆனால், இங்கு ஒரு மரம் விழுந்​துள்​ளது. வரு​வாய்த்​துறை​யிடம் களப் பணி​யாளர்​கள், இயந்​திரங்​கள், வாகன வசதி இல்லை என்பது உண்​மை​தான். ஆனால், அவர்​கள் மாநக​ராட்​சி​யிடம் உதவி கேட்​டார்​களா, மாநக​ராட்சி நேரத்​தோடு உதவ மறுத்​ததா என்பது தெரிய​வில்​லை. இந்த சிற்​றிடரைக்​கூட எதிர்​கொள்ள முடி​யாத வரு​வாய்த்​துறை, பேரிடரை எப்​படி எதிர்​கொள்​ளும் என்​பதை நினைத்​தாலே, சென்​னை​யில் வசிக்க அச்​ச​மாக உள்​ளது.

    இ-சேவை மையத்​துக்​குள் செல்​வது என்​னவோ சாகசம் புரிவது போன்று உள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர். இது தொடர்​பாக சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே​விடம் விவரம் பெற பலமுறை கைபேசி வழி​யாக தொடர்​பு​கொண்​டும், அவரிடம்​ விவரம்​ பெற முடிய​வில்​லை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக கூட்டணிக்கு இபிஎஸ் அழைப்பு: விஜய்யின் தவெக பதில் என்ன?

    July 22, 2025
    மாநிலம்

    செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

    July 22, 2025
    மாநிலம்

    “தீமைக்கு மாற்று தீமை கிடையாது!” – எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை நிராகரித்த சீமான்

    July 22, 2025
    மாநிலம்

    ‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு: திமுக ரியாக்‌ஷன் என்ன?

    July 22, 2025
    மாநிலம்

    நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம்: திருச்செங்கோட்டில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு

    July 22, 2025
    மாநிலம்

    சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வருண் மோகன் யார்? விண்ட்சர்ஃப் இந்திய-ஆரிஜின் தலைமை நிர்வாக அதிகாரி கூகிளின் தொடக்கத்தை விட்டு வெளியேறிய பிறகு பின்னடைவை எதிர்கொள்கிறார், b 3 பி ஓப்பனாய் டீல் | உலக செய்திகள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் வெற்றி யாருக்கு? – பாஜக+ Vs எதிர்க்கட்சிகள் பலம்
    • அதிமுக கூட்டணிக்கு இபிஎஸ் அழைப்பு: விஜய்யின் தவெக பதில் என்ன?
    • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் 10 ஆயுர்வேத பானங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.