Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மலேசிய அமைச்சர் சிவநேசன் மாமல்லபுரம் வருகை
    மாநிலம்

    மலேசிய அமைச்சர் சிவநேசன் மாமல்லபுரம் வருகை

    adminBy adminJuly 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மலேசிய அமைச்சர் சிவநேசன் மாமல்லபுரம் வருகை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மலேசியாவில் பேரா மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் மனிதவள மேம்பாடு துறை அமைச்சர் சிவனேசன் சுற்றுலா தளமான மாமல்லபுரத்துக்கு நேற்று வருகை தந்தார். முன்னதாக, அவரை மல்லை தமிழ்ச் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது, மல்லை தமிழச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மல்லை சத்யா தலைமையில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி முன்னிலையில், தமிழக கலாச்சரப்படி பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, அர்ச்சுனன் தபசு, கிருஷ்ணா மண்டபம், வெண்ணை உருண்டை பாறை, கடற்கரை கோயில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை மலேசியா நாட்டின் பேரா மாநில அமைச்சர் சிவனேசன் சுற்றி பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தார். அவருடன், மல்லை தமிழ்ச் சங்க செயலாளர் பாஸ்கரன், விசிக மாவட்ட செயலாளர் கனல் விழி, திருக்கழுகுன்றம் விசிக ஒன்றிய செயலாளர் அன்பு, விசி க நகர செயலாளர் ஐயப்பன், பிரபல சமூக ஆர்வலர்கள் குங்பூ மாஸ்டர் அசோக், பாபு, சுரேந்தர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    பேராவில் 134 தமிழ் பள்ளிகள்: அப்போது, மலேசியா நாட்டு பேரா மாநில அமைச்சர் சிவநேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நான் மலேசியா சென்று பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், தமிழை இதுவரை மறக்கவில்லை. எங்கள் மதத்தையும் மறக்கவில்லை. மலேசிய அரசியலில் தமிழுக்கும், மதத்துக்கும் நிறைய சட்ட ஈடுபாடு உள்ளது. அதனை அழிப்பது மிகமிக சிரமம். தமிழ்நாட்டை அடுத்து நிறைய தமிழ் பள்ளிகள் அதிகம் உள்ள நாடு மலேசியா தான்.

    குறிப்பாக, மலேசியாவில் பேரா மாநிலத்தில் மட்டும் 134 தமிழ் பள்ளிகள் உள்ளன. இது, எங்களுக்கு பெருமையாக உள்ளது. எப்போதுமே, தமிழ் அழியாது. இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் நிறைய பேர் மலேசியா வந்தார்கள். இப்போது, பொருளாதாரம் நன்றாக உள்ளதால் தொழிலாளர்கள் வருவது குறைவாக உள்ளது. குறிப்பாக, தொழிலாளர்கள் கடத்தல் (மலேசியாவுக்கு) இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    கடந்த, வாரம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 42 தொழிலாளர்களை மீட்டுள்ளார்கள். போதை பொருள் கடத்தல்காரர்களையும் பிடித்து வருகிறார்கள். போதை பொருள் என்று பிடிபட்டால் மலேசியாவில் தூக்கு தண்டனை தான். 26 பேர் போதை பொருள் கடத்தல் பிரச்சினையில் சிக்கி உள்ளனர். அவர்களின், மேல்முறையீடு எல்லாம் முடிந்து விட்டது. அவர்களை, காப்பாற்ற புதிதாக சட்டம் கொண்டு வந்துள்ளோம்.

    நீதிபதிக்கு தூக்கு தண்டனை தவிர வேறு வழி இல்லாமல் இருந்தது. 34 பி போதைப்பொருள் சட்டம் என்றால் தூக்கு தண்டனை தான். ஆனால், இப்போது மலேசியா நாடாளுமன்றத்தில் சட்டம் மாற்றம் செய்து நீதிபதியிடம் ஒப்படைத்து விட்டார்கள். அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்கு தண்டனை கொடுக்கலாம் என அந்த அதிகாரத்தை, உரிமையை நீதிபதியிடம் கொடுத்துள்ளார்கள். இப்போது, போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறார்கள். இவ்வாறு, மலேசியா நாட்டு அமைச்சர் சிவநேசன் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

    July 21, 2025
    மாநிலம்

    ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கன்னியாகுமரியில் ஆலோசனை

    July 21, 2025
    மாநிலம்

    உள் இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் இன்று பாமக போராட்டம்

    July 21, 2025
    மாநிலம்

    திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: சந்தேக நபரின் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்ட காவல் துறை

    July 21, 2025
    மாநிலம்

    திமுகவை ஆட்​சியில் இருந்து விரட்டுவதுதான் அதிமுக – பாஜக கூட்டணியின் ஒரே நோக்கம்: அண்ணாமலை உறுதி

    July 21, 2025
    மாநிலம்

    மீண்டும் தேர்தல் களத்துக்கு வரும் இபிஎஸ்ஸின் வலது கரம்! – சேலத்தில் 3 தொகுதிகளை குறிவைக்கும் இளங்கோவன்

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 10-ம் வகுப்பு சான்றிதழில் திருத்தமா? – உரிய ஆவணங்களை இணைக்க தேர்வு துறை அறிவுறுத்தல்
    • நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
    • உச்சநேர மின் பயன்பாட்டை கணக்கெடுக்க தாழ்வழுத்த பிரிவில் 26,000 டி.ஓ.டி. மீட்டர்களை பொருத்த மின் வாரியம் உத்தரவு
    • ஆப்டிகல் மாயை: மறைக்கப்பட்ட எருமையை 5 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கனமழையால் வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்: கேரளாவில் 9 மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.