Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்து விற்பனைக்கு தடை
    மாநிலம்

    மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்து விற்பனைக்கு தடை

    adminBy adminMay 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்து விற்பனைக்கு தடை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரவசத்துக்கு 70 என தேசிய அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 39 ஆக குறைந்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து, தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

    தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பது, கள பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மருத்துவம் சார்ந்த அணுகுமுறைகள், கொள்கை சீர்திருத்தங்கள், சமூக பங்களிப்பு குறித்த பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:

    நாட்டில் மகப்பேறு இறப்பை ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 70 என்ற அளவில் குறைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டு சுகாதார கண்காணிப்பு தகவல் அறிக்கையின்படி தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு லட்சம் பிரவசத்துக்கு 39 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் (8.02 லட்சம்) மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. அதில் 56 சதவீத (4.51 லட்சம்) பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. ஒவ்வொரு மாதமும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, கர்ப்பகால சிக்கல்கள் உள்ள கர்ப்பிணிகளை கண்டறிந்து, மகப்பேறு மருத்துவர்கள் மூலம் ஆலோசனை, சிகிச்சை வழங்கப்படுகிறது. இதில், கர்ப்பிணிகளை கண்டறிவதில் முதல் இடத்துக்கான விருதையும், அதிக மகப்பேறு மையங்கள் கொண்டதில் 2-வது இடத்துக்கான விருதையும் தமிழகத்துக்கு மத்திய சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.

    கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் சிக்கல்கள் உள்ள தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்க, அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளிலும் நவீன கருவிகளுடன் கூடிய சிறப்பு பராமரிப்பு பிரிவு செயல்படுகிறது.

    மருந்து கட்டுப்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து, தனியார் மருந்தகங்களில் கருக்கலைப்பு மருந்துகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பேறுகாலம் தொடங்கி குழந்தையின் 18 வயது வரையிலான விவரங்கள் ‘பிக்மி’ (PICME) மென்பொருள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. மென்பொருள், ‘102’ அழைப்பு சேவை மூலமாக மாநில, மாவட்ட அளவில் கர்ப்பகால சிக்கல்கள் உள்ள கர்ப்பிணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.

    அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 800 தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு கவனிப்பு சேவைகள், பிரசவ சேவைகள் பதிவு செய்யப்படுகின்றன. கர்ப்பிணிகள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள நோயுற்ற குழந்தைகளுக்கு இலவச மருந்து, உணவு, நோய் கண்டறிதல் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. மருத்துவமனை, பரிந்துரை மையங்களுக்கு வந்துசெல்ல இலவச போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது. மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைக்க மாநில, மாவட்ட அளவில் பணி குழு அமைக்கப்பட்டு, அனைத்து மகப்பேறு உயிரிழப்புகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.

    சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவ கல்வி, ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணிராஜன், தேசிய நலவாழ்வு குழும ஆலோசகர் ஷோபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட அளவில் உள்ள அனைத்து சீமாங்க் மையங்களில் இருந்து 129 மகப்பேறு மருத்துவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டனர். மகப்பேறு இறப்பு விகிதத்தை குறைப்பதில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முல்லை பெரியாறு அணைக்கு ‘ரூல் கர்வ்’ முறையை நீக்க தமிழக விவசாயிகள் கோரிக்கை

    July 2, 2025
    மாநிலம்

    பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவர் – பின்னணி என்ன?

    July 2, 2025
    மாநிலம்

    அஜித்குமார் வழக்கு: உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை

    July 2, 2025
    மாநிலம்

    குறைந்த ரயில் கட்டண உயர்வு என்பது வெறும் கண் துடைப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்

    July 2, 2025
    மாநிலம்

    அஜித்குமார் குடும்பத்துக்கு வீட்டு மனை பட்டா, சகோதரருக்கு அரசு வேலை பணி ஆணை வழங்கல்

    July 2, 2025
    மாநிலம்

    10 நாட்களில் வன்னியர் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: அன்புமணி காட்டம்

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: 10 பேர் பலி; 34 பேரை காணவில்லை
    • முல்லை பெரியாறு அணைக்கு ‘ரூல் கர்வ்’ முறையை நீக்க தமிழக விவசாயிகள் கோரிக்கை
    • குழந்தைகளுக்கு தரையில் சாப்பிடுவதன் 5 நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எனது மரணத்துக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடரும்: தலாய் லாமா
    • கல்லூரிப் படிப்பின்போதே பின்பற்ற வேண்டிய ‘5’

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.