Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, December 27
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மருத்துவ வளர்ச்சிக்காக பொதுமக்கள் உடல் தானம் செய்ய முன்வர வேண்டும்: எம்.பி சச்சிதானந்தம்
    மாநிலம்

    மருத்துவ வளர்ச்சிக்காக பொதுமக்கள் உடல் தானம் செய்ய முன்வர வேண்டும்: எம்.பி சச்சிதானந்தம்

    adminBy adminSeptember 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மருத்துவ வளர்ச்சிக்காக பொதுமக்கள் உடல் தானம் செய்ய முன்வர வேண்டும்: எம்.பி சச்சிதானந்தம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திண்டுக்கல்: மருத்துவ வளர்ச்சிக்காக பொதுமக்கள் தங்கள் உடல்களை தானம் செய்ய முன்வர வேண்டும் என திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் கூறியுள்ளார். மேலும், ஆர்.சச்சிதானந்தமும், தனது மனைவி கவிதாவுடன் உடல் உறுப்பு தானம் செய்ய உறுதிமொழி பத்திரம் வழங்கினார்.

    திண்டுக்கல் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த சீதாராம் யெச்சூரி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்கு அவரது திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து திண்டுக்கல் அருகே அடியனூத்தில் உள்ள திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் தானம், கண் தானம் வழங்க உறுதிமொழி பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் அரபு முகமது வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சரத்குமார் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என மொத்தம் 75 பேர் உடல் மற்றும் கண் தானம் வழங்க உறுதிமொழி பத்திரங்களை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்களிடம் வழங்கினர். உறுதிமொழி பத்திரம் வழங்கிய அனைவருக்கும் திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

    பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தனது உடலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அளித்திருந்தார். இதை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. உடல்களை தானம் செய்யும் போது பல்வேறு சந்தேகங்கள் நமக்கு உருவாகிறது.

    குறிப்பாக சில சமுதாயத்தில் உடல்களை புதைப்பார்கள். சில சமுதாயங்களில் உடல்களை எரியூட்டுவார்கள். ஆனால் மருத்துவ வளர்ச்சிக்காக நமது உடல்கள் தானமாக வழங்க அனைவருக்கும் விழிப்புணர்வு வேண்டும். வரும் காலங்களில் இந்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இது போன்ற செயல்களில் அதிக அளவில் ஈடுபடுவார்கள். இதேபோன்று மருத்துவ வளர்ச்சிக்காக பொதுமக்கள் தங்கள் உடல்களை தானம் செய்ய முன்வர வேண்டும்” என்று எம்.பி சச்சிதானந்தம் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம், தனது மனைவி கவிதாவுடன் உடல் உறுப்பு தானம் செய்ய உறுதிமொழி பத்திரம் வழங்கினார். இதேபோல் பலர் தம்பதிகளாக வந்து உடல் உறுப்பு தான உறுதிமொழி பத்திரங்களை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி, துணை முதல்வர் கீதா ராணி, உடற்கூறாய்வியல் துறை மருத்துவர் ஜெயமணி ஆகியோர் உடல் தான உறுதிமொழி பத்திரங்களை பெற்றனர். உடல் மற்றும் கண் தானம் செய்பவர்களுக்கான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிக பணத்தை சேமிப்பதில் இருந்து சிறந்த ஆரோக்கியம் வரை: 2026 இல் வாழ்க்கையில் வெற்றிபெற AI உங்களுக்கு உதவும் 4 சக்திவாய்ந்த வழிகள்
    • வரலாற்றில் டிசம்பர் 27 அன்று நடந்தது: ஆண்டுகளில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘மக்கள் இறந்துவிடுவார்கள்…’: சோஹ்ரான் மம்தானியின் முதல் ஓரினச்சேர்க்கையாளர் நியமனத்தை எலோன் மஸ்க் சாடுகிறார் FDNY கமிஷனர் | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வேகம்: சொற்பிறப்பியல், கலாச்சாரம் மற்றும் வேகமாக செல்வதற்கான நவீன போதை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எண் 36 ஐக் கண்டறியவும்: இந்த 9-வினாடி ஆப்டிகல் மாயை உங்கள் மூளை உண்மையில் எவ்வளவு கூர்மையாக இருக்கிறது என்பதை சோதிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.