Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, January 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மருத்துவர்கள் நியமனம் கோரி சென்னையில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
    மாநிலம்

    மருத்துவர்கள் நியமனம் கோரி சென்னையில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

    adminBy adminJune 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மருத்துவர்கள் நியமனம் கோரி சென்னையில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் தீர்வு காண வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூ ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டமைப்பில் இணைந்துள்ள ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் செந்தில்குமார், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ராமலிங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்தீஸ்வரன், பொதுச்செயலாளர் அகிலன், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் சக்திகுமார் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார்.

    அப்போது, அவர்கள் கூறியதாவது: மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி ஆட்சியில் 2009-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அரசு ஆணை 354 மறுசீராய்வு செய்து அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார மருத்துவ நிலைய மருத்துவர்களுக்கு படித்தொகை ரூ.3,000 உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஆணை 4 (D) மூலம் நீக்கப்பட்ட 1,500 -க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரி பதவிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளுக்காக கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக போராடும் அரசு மருத்துவர்களின் குரலுக்கு செவி மடுத்து, தமிழக முதல்வர் உடனடியாக எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • 58 யார்? ஜூலியா ராபர்ட்ஸின் வயதைக் குறைக்கும் கோல்டன் குளோப்ஸ் ஒளி இணையத்தில் அலறுகிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உலகின் மிக ஆடம்பரமான பரிசுப் பை: கோல்டன் குளோப்ஸ் வெற்றியாளர்கள் ₹8.3 கோடி மதிப்புள்ள வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிரியங்கா சோப்ராவின் கோல்டன் குளோப்ஸ் 2026 தோற்றம் மற்றும் அவரது 2020 தருணம்: அவர் ஒளிர்ந்தாரா அல்லது மெமோவை தவறவிட்டாரா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வெளிப்படையான கருப்பு உடை மற்றும் சாக்லேட் முடி: கோல்டன் குளோப்ஸ் 2026 – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா – பிளாக்பிங்கின் லிசா அசத்தலான புதிய தோற்றத்தை அறிமுகப்படுத்துகிறார்
    • இந்த அன்றாட சமையலறை ரொட்டி துண்டு உங்கள் வீட்டில் உள்ள சிறிய கண்ணாடி துண்டுகளை எடுக்க பாதுகாப்பான வழியாகும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.