Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மயிலாப்பூர் சாய்பாபா கோயில் சமாஜ் நிர்வாகம் கலைப்பு: இடைக்கால நிர்வாகிகளாக ஓய்வுபெற்ற 2 நீதிபதிகள் நியமனம்
    மாநிலம்

    மயிலாப்பூர் சாய்பாபா கோயில் சமாஜ் நிர்வாகம் கலைப்பு: இடைக்கால நிர்வாகிகளாக ஓய்வுபெற்ற 2 நீதிபதிகள் நியமனம்

    adminBy adminSeptember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மயிலாப்பூர் சாய்பாபா கோயில் சமாஜ் நிர்வாகம் கலைப்பு: இடைக்கால நிர்வாகிகளாக ஓய்வுபெற்ற 2 நீதிபதிகள் நியமனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மயிலாப்பூர் சாய்பாபா கோயிலை நிர்வகித்து வரும் அகில இந்திய சாய் சமாஜ் நிர்வாகத்தை கலைத்து, சமாஜத்தின் இடைக்கால நிர்வாகிகளாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொண்ட குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை மயிலாப்பூரில் சாய்பாபா கோயிலை அகில இந்திய சாய் சமாஜம் நிர்வகித்து வருகிறது. இந்த சமாஜத்துக்கு சொந்தமாக பள்ளி, கடைகள் உள்ளிட்ட பல சொத்துகள் உள்ளன. சமாஜத்தின் நிர்வாக குளறுபடி, முறைகேடு தொடர்பாக தங்கராஜ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

    அப்போது நீதிபதிகள், சமாஜத்துக்கு சொந்தமான சொத்துகளின் வரவு, செலவு கணக்குகள், உண்டியல் வருமானம், அசையா சொத்துகளின் நிலை, சமாஜத்தின் நிதி விவரங்கள், சமாஜத்தில் சங்க துணை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை நியமித்து உத்தரவிட்டிருந்தனர்.

    அதன்படி, நீதிபதி பி.என்.பிரகாஷ் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித் துள்ள உத்தரவு: ஆய்வுக்கு சென்ற நீதிபதி பி.என்.பிரகாஷூக்கு சமாஜ் நிர்வாகிகள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. வரவு, செலவு கணக்குகள் முறையாக தணிக்கை செய்யப்படவில்லை. நிர்வாகக் குழு, பொதுக்குழுவில் முடிவு எடுக்காமல் திருமண மண்டபம் கட்டியுள்ளனர்.

    சமாஜத்தில் முன்பு 5 ஆயிரத்து 600 பொதுக்குழு உறுப்பினர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது 522 பேர் மட்டுமே உள்ளனர். சமாஜ நிதி பரிவர்த்தனைகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அதிகப்படியான தொகை எந்த ஒப்புதலும் பெறப்படாமல் செலவழிக்கப்பட்டுள்ளது. எனவே, ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கை அடிப்படையில் சாய் சமாஜ் நிர்வாக குழுவை உடனடியாக கலைக்கிறோம். அந்த சமாஜத்தை நிர்வகிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.என்.பிரகாஷ் ஆகியோரை கொண்ட இடைக்கால நிர்வாகக் குழுவை அமைக்கிறோம்.

    இந்தக் குழுவுக்கு பட்டயக்கணக்காளர்கள் அனந்த ராமன், அருண் பாலாஜி ஆகியோர் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். சமாஜத்தின் பொறுப்பாளர் கள் உடனடியாக தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகி, ஓய்வு நீதிபதிகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்து போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்தக்குழு தங்களது நிர்வாகம் தொடர்பான இடைக்கால அறிக்கையை செப்.14-ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்

    September 24, 2025
    மாநிலம்

    90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு: 2021, 2022, 2023-க்கான முழு பட்டியல்

    September 24, 2025
    மாநிலம்

    டிஎஸ்பியை கைது  செய்ய உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை: நீதிமன்றம் உத்தரவு

    September 24, 2025
    மாநிலம்

    தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையிலான பாலத்துக்கு எஃகு கட்டமைப்புகளின் தரம்: அமைச்சர் வேலு உறுதி

    September 24, 2025
    மாநிலம்

    வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு பிறகு சென்னையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 4,071 ஆக உயர்வு

    September 24, 2025
    மாநிலம்

    விடுதலைப்புலிகள் அமைப்புக்காக ரூ.40 கோடி கையாடல் முயற்சி: இலங்கை பெண்ணிடம் அமலாக்கத் துறை விசாரணை

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிகாலை 2 மணிக்கு பயிற்சியாளருக்கு போன் செய்து ஓய்வு முடிவை வாபஸ் பெற்ற குவிண்டன் டி காக்
    • உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்
    • சிறுநீரக ஆரோக்கியம்: உடலில் கிரியேட்டினின் அளவைக் குறைக்க உதவுவதற்கும், சிறுநீரக ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கும் 5 இயற்கை சப்ளிமெண்ட்ஸ்
    • விஞ்ஞானிகள் அர்ஜென்டினாவிலிருந்து ஒரு புதிய டைனோசரை அதன் வாயில் முதலை எலும்புடன் கண்டுபிடித்துள்ளனர் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • , 000 100,000 கட்டணத்திற்குப் பிறகு, டிரம்ப் நிர்வாகம் எச் -1 பி விசாக்களுக்கான லாட்டரி முறையை கைவிடுவதாகத் தெரிகிறது; முன்மொழியப்பட்ட புதிய தேர்வு அளவுகோல்கள் இங்கே – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.