Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை 32-வது பட்டமளிப்பு விழா: ஆளுநரிடம் பட்டம் பெறாமல் புறக்கணித்த மாணவி
    மாநிலம்

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை 32-வது பட்டமளிப்பு விழா: ஆளுநரிடம் பட்டம் பெறாமல் புறக்கணித்த மாணவி

    adminBy adminAugust 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை 32-வது பட்டமளிப்பு விழா: ஆளுநரிடம் பட்டம் பெறாமல் புறக்கணித்த மாணவி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் தவிர்த்து, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி தலைமையேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

    இதில் மாணவி ஒருவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து பட்டத்தை பெறாமல் தவிர்த்து, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டத்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுவதால் அவரிடம் பட்டத்தை பெறாமல் மாணவி தவிர்த்ததாக கூறப்படுகிறது. மைக்ரோ பைனான்ஸ் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற ஜின் ஜோசப் என்ற மாணவி இவ்வாறு செய்ததாக தகவல் கூறப்படுகிறது.

    பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 759 மாணவ, மாணவியருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பட்டங்களை வழங்கினார். அதில் 109 பேர் (மாணவர்கள் 13, மாணவிகள் 96) தங்கப்பதக்கமும், 650 பேர் (மாணவர்கள் 108, மாணவிகள் 542) முனைவர் பட்டங்களும் பெற்றனர். இப்பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 11638 மாணவர்கள், 25738 மாணவிகள் என்று மொத்தம் 37376 பேர் பட்டம் பெற்றனர். மும்பையிலுள்ள இந்திய புவி காந்தவியல் நிறுவன இயக்குநர் பேராசிரியர் அ.பி. டிம்ரி பட்டமளிப்பு விழா பேருரையாற்றினார்.

    பல்கலைக்கழக துணைவேந்தர் ந. சந்திரசேகர் வரவேற்று, அறிக்கை வாசித்தார். சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜே. சாக்ரட்டீஸ், தேர்வாணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆத்தூரில் அமைச்சர் ஐ.பெரியசாமியை வம்புக்கு இழுக்கும் தவெக! – போஸ்டருக்கு போஸ்டரால் பதிலடி கொடுத்த திமுக

    August 14, 2025
    மாநிலம்

    கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் ஆக.16-ல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறாது: அமைச்சர் அறிவிப்பு

    August 14, 2025
    மாநிலம்

    மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தந்தை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி

    August 14, 2025
    மாநிலம்

    நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரிக்கை: நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் பேரணி

    August 14, 2025
    மாநிலம்

    மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம்: தரையிறங்கியபோது புகை வந்ததால் பரபரப்பு

    August 14, 2025
    மாநிலம்

    12-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: தனியார் நிறுவனம் பணப்பலன் வழங்குவது உறுதி செய்யப்படும் – சென்னை மாநகராட்சி

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அமெரிக்காவுடன் பதற்றம் நிலவும் சூழலில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகஸ்ட் 21-ம் தேதி ரஷ்யா பயணம்
    • ஆத்தூரில் அமைச்சர் ஐ.பெரியசாமியை வம்புக்கு இழுக்கும் தவெக! – போஸ்டருக்கு போஸ்டரால் பதிலடி கொடுத்த திமுக
    • கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால் ஆக.16-ல் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறாது: அமைச்சர் அறிவிப்பு
    • வேர் கால்வாய் சிகிச்சையானது மார்பக புற்றுநோயை ஏற்படுத்த முடியுமா? தெரிந்து கொள்ள 5 உண்மைகள்
    • மகளை தன்னுடன் அனுப்பி வைக்க கோரி தந்தை வழக்கு: உயர் நீதிமன்ற வளாகத்தில் 15 வயது சிறுமி தற்கொலை முயற்சி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.