Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 19
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மது விற்றால் உரிமம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மது விற்றால் உரிமம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminAugust 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மது விற்றால் உரிமம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தமிழகத்தில் செயல்படும் மனமகிழ் மன்றங்களில், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்றால் அவற்றின் உரிமத்தை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை உட்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் மனமகிழ் மன்றங்களில் நடக்கும் விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல்கான், வீராகதிரவன் ஆஜராகி, மதுவிலக்குத் துறை ஆணையர் மற்றும் பதிவுத்துறை ஐஜியின் பதில் மனுவை தாக்கல் செய்தனர். பின்னர் நீதிபதிகள், பதிவுத்துறை சார்பில், ‘மனமகிழ் மன்றங்களை சங்க விதிகளின்படி பதிவு செய்வதுடன் எங்கள் பணி முடிந்துவிட்டது’ எனக் கூறப்பட்டுள்ளது.

    ‘இதை எப்படி ஏற்க முடியும்? மதுவால் இளைஞர்கள் பாதிக்கப்படு கின்றனர். பதிவுத்துறையின் நடவடிக்கை மனமகிழ் மன்றங்களை பாதுகாப்பதாக இருக்கக் கூடாது’ என்று நீதிபதிகள் கூறினர். பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் எஃப்எல்-2 உரிமம் பெற்ற மதுபான விற்பனைக் கூடங்கள் காளான்கள் போல் பெருகி வருகின்றன.

    இந்த மனமகிழ் மன்றங்கள் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படு கின்றன. பின்னர் மதுபானம் விற்க எஃப்எல்-2 உரிமம் பெறுகின்றனர். மனமகிழ் மன்றங்களில் சட்டப்படி விளையாட்டு செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

    அதன் உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானங்களை விற்க வேண்டும். ஆனால், அங்கு விளையாட்டு செயல்பாடுகள் இருப்பதில்லை. மது விற்பனைமட்டுமே நடக்கிறது. அதுவும் உறுப்பினர்கள் அல்லாத வெளியாட்களுக்கும் மதுபானங்களை விற்கின்றனர். இந்த மன மகிழ் மன்றங்களில் பதிவுத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் சோதனையே நடத்துவதில்லை.

    இதனால் தமிழகத்தில் எப்.எல்-2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையம் போல் செயல்பட்டு உறுப்பினர் அல்லாதவர்களுக்கும் மதுபானம் விற்பதை தடுக்க தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு மது விற்பனை செய்தால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

    மனமகிழ் மன்றங்களை முறைப்படுத்த பதிவுத்துறை ஐஜி, மதுவிலக்கு ஆணையர், மாநகர் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மனமகிழ் மன்றங்கள் தொடர்பாக டிஜிபி 2021-ல் அனுப்பிய சுற்றறிக்கை அடிப்படையில் அங்கு பதிவு மற்றும் உரிம நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தர வில் குறிப்பிட்டுள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராமரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை நடமாட விடக்கூடாது: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை

    August 19, 2025
    மாநிலம்

    கா​விரி​யில் வெள்​ளப்பெருக்கு அதிகரிப்பு: கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    August 19, 2025
    மாநிலம்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும், எக்காலத்திலும் அடிபணியாது: சேலம் மாநாட்டில் முத்தரசன் திட்டவட்டம்

    August 19, 2025
    மாநிலம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிக்காக ஸ்டாலினிடம் ஆதரவு கோரினார் ராஜ்நாத் சிங்

    August 19, 2025
    மாநிலம்

    தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: அதிமுக, பாஜக வலியுறுத்தல்

    August 19, 2025
    மாநிலம்

    அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

    August 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிக பிபி, நீரிழிவு மற்றும் இதய நோயுடன் இணைக்கப்பட்ட உயர் யூரிக் அமில அளவு: பார்க்க ஆரம்ப அறிகுறிகள்
    • 1.5 லட்சம் வங்கிக் கணக்குகளில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்
    • புச்சிபாபு கிரிக்கெட்டில் சர்பராஸ் கான் சதம் விளாசல்: மும்பை அணி 367 ரன்கள் குவிப்பு
    • ராமரை இழிவாகப் பேசிய வைரமுத்துவை நடமாட விடக்கூடாது: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை
    • மெல்லும் மூளை சக்திக்கும் இடையிலான அதிர்ச்சியூட்டும் இணைப்பு: ஒரு எளிய பழக்கம் நினைவகத்தையும் கவனத்தையும் எவ்வாறு அதிகரிக்கும் – இந்தியாவின் நேரங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.