Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 8
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மத்திய வெளியுறவு துறை அமைச்சக முயற்சியால் ஈரானில் சிக்கிய 15 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்
    மாநிலம்

    மத்திய வெளியுறவு துறை அமைச்சக முயற்சியால் ஈரானில் சிக்கிய 15 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்

    adminBy adminJuly 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மத்திய வெளியுறவு துறை அமைச்சக முயற்சியால் ஈரானில் சிக்கிய 15 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: ஈ​ரான் நாட்​டில் சிக்​கித் தவித்த தமிழக மீனவர்​கள் 15 பேர் மத்​திய வெளி​யுறவுத் துறையின் முயற்​சி​யால் மீட்​கப்​பட்டு சென்னைக்கு அழைத்து வரப்​பட்​டனர். சென்னை விமான நிலை​யத்​தில் அவர்​களை வரவேற்ற தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அனைத்து செல​வு​களை​யும் தமிழக பாஜக ஏற்​றுள்​ள​தாக தெரி​வித்​தார். ஈ​ரானில் சிக்​கித் தவித்த தமிழகத்​தின் திருநெல்​வேலி மாவட்​டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்​கள், மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகத்​தின் மூலம் மீட்​கப்​பட்​டனர்.

    ஈரானிலிருந்து கப்​பலில் துபாய் வந்த அவர்​கள், அங்கிருந்து விமானம் மூலம் டெல்​லிக்​கும் அங்​கிருந்து ஏர் இந்​தியா விமானம் மூலம் நேற்று முன்​தினம்சென்​னைக்​கும் வந்​தனர். சென்னை விமான நிலை​யத்​தில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மீனவர்​களை வரவேற்​றார். பின்​னர் பாஜக ஏற்​பாடு செய்த வாக​னங்​கள் மூலம், திருநெல்​வேலிமாவட்​டம் உவரிக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

    முன்​ன​தாக சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் மீனவர்​கள் கூறிய​தாவது: நாங்​கள் மீன்​பிடித் தொழிலுக்​காக கடந்த பிப்​ர​வரி மாதம் ஈரானுக்கு சென்​றோம். அங்கு போர்நடந்​த​தால், எங்​களால் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடிய​வில்​லை.உணவுக்கு மிக​வும் கஷ்டப்​பட்​டோம். போரால் எங்​களுக்கு நேரடியாக எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை.

    ஆனால் நாங்​கள் தங்​கி​யிருந்த இடம் அரு​கில் குண்​டு​கள் வெடிப்​பது, எங்​கள் தலைக்கு மேலே ஏவு​கணை​கள் செல்​வது மிகுந்த அச்​சத்தை ஏற்​படுத்​தி​யது. ஈரான் நாடு முழு​வதுமே ஜிபிஎஸ் கருவிகள் வேலை செய்​ய​வில்​லை. ஜிபிஎஸ் கருவி இல்​லாமல் கடலுக்கு மீன் பிடிக்​கச் செல்ல முடி​யாது. இதனால் நாங்​கள் இந்​தியாதிரும்ப முடிவு செய்​தோம்.

    திருநெல்​வேலி​யில் உள்ள எங்​கள் குடும்​பத்​தினர், பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் மூலம் முயற்​சிகளை மேற்​கொண்​டனர். பின்​னர் இந்​திய வெளி​யுறவுத் துறை மூலம் நாங்​கள் மீட்​கப்​பட்​டு, ஈரானிலிருந்து கப்​பலில் துபாய் வந்​தோம். அங்குசில நாட்​கள் தங்க வேண்​டிய நிலைஏற்​பட்​டது.

    அதன் பிறகு துபா​யி​லிருந்து விமானத்​தில் டெல்​லிக்​கும், டெல்​லியி​லிருந்து இப்​போது சென்​னைக்​கும் வந்​திருக்​கிறோம். எங்​களை பத்​திர​மாக மீட்டு அழைத்து வர உதவிய பிரதமர் மோடி, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆகியோ​ருக்கு நன்​றியை தெரி​வித்​துக் கொள்​கிறோம் என்று கூறினர்.

    தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறுகை​யில், “இந்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் முயற்​சி​யால், இந்த மீனவர்​கள் ஈரானில் தங்​கி​யிருந்த தீவுக்​கு, இந்​திய தூதரக அதி​காரி​கள் நேரடி​யாக சென்​று, இவர்​களை மீட்டு துபாய்க்கு கப்​பலில் அனுப்பி வைத்​தனர். அங்​கிருந்து சென்​னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    மேலும் 15 திருநெல்வேலி மாவட்டம் மீனவர்கள் ஈரானில் மற்றொரு தீவில் இருக்கின்றனர். அவர்களையும் மீட்டு அழைத்து வருவதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அடுத்த ஓரிரு தினங்களில் அவர்களும் இந்தியா திரும்புவார்கள். இதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக பாஜக ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து: துணை முதல்வர் உதயநிதி இரங்கல்

    July 8, 2025
    மாநிலம்

    ஜூலை 18-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

    July 8, 2025
    மாநிலம்

    நீதிமன்றத்தை விளையாட்டு பொருளாக பயன்படுத்த கூடாது: நாதகவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

    July 8, 2025
    மாநிலம்

    ‘மைக் முன் பேசினால் மன்னராக நினைத்துக் கொள்கிறார்கள்’ – பொன்முடி வழக்கில் ஐகோர்ட் கருத்து

    July 8, 2025
    மாநிலம்

    தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

    July 8, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலையால் நாடார் சமுதாயத்தினர் அச்சம்: பாலபிரஜாபதி அடிகளார் ஆதங்கம்

    July 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • உளவியல் அடிப்படையிலான ஆளுமை சோதனை: மாடு, குதிரை, சிங்கம் அல்லது குரங்கு? நீங்கள் தேர்ந்தெடுக்கும் விலங்கு உங்களைப் பற்றி வெளிப்படுத்துகிறது
    • கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து: துணை முதல்வர் உதயநிதி இரங்கல்
    • பிளாக்ஹெட்ஸ் வைத்தியம்: பிளாக்ஹெட்ஸை அகற்ற 5 தேசி ஹேக்குகள்
    • அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
    • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.