Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரை மேயர் இந்திராணி கணவர் திமுகவில் இருந்து நீக்கம்
    மாநிலம்

    மதுரை மேயர் இந்திராணி கணவர் திமுகவில் இருந்து நீக்கம்

    adminBy adminMay 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை மேயர் இந்திராணி கணவர் திமுகவில் இருந்து நீக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மாநக​ராட்சி மேயர் இந்​தி​ராணி​யின் கணவர் பொன்​வசந்த், திமுக​வில் இருந்து தற்​காலிக​மாக நீக்​கப்​பட்​டுள்​ளார். இது தொடர்​பாக திமுக பொதுச்செய​லா​ளர் துரை​முரு​கன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மதுரை மேயர் இந்​தி​ராணி கணவர் பொன்​வசந்த், கட்​சிக் கட்​டுப்​பாட்டை மீறி​யும், கட்​சிக்கு அவப்​பெயர் ஏற்​படுத்​தும் வகை​யிலும் செயல்​பட்டு வந்​த​தால், அடிப்​படை உறுப்​பினர் உள்​ளிட்ட அனைத்​துப் பொறுப்​பு​களில் இருந்​தும் தற்​காலிக​மாக நீக்கி வைக்​கப்​படு​கிறார்” என்று அறி​வித்​துள்​ளார்.

    இதுகுறித்து திமுக​வினர் கூறும்​போது, “பொன்​வசந்​தின் கட்​சிப் பணி​யால் ஈர்க்​கப்​பட்ட அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் பரிந்துரையில் இந்​தி​ராணி மேய​ரா​னார். தற்​போது மாநக​ராட்சி நிர்​வாகத்​தில் தலை​யீடு, கட்சி செயல்​பாடு​களில் குளறு​படி என பல்​வேறு குற்​றச்​சாட்​டு​கள் காரண​மாக பொன்​வசந்த் திமுக​வில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளார். இதனால், அவரது மனைவி இந்​தி​ராணி, மேயர் பதவி​யில் வழக்​கம்​போல செயல்பட முடி​யாத சூழல் உள்​ளது.

    மேயர் பதவி குறித்து திமுக என்ன நிலைப்​பாட்டை எடுக்க உள்​ளது என்​பது சில நாட்​களில் தெரிந்​து​விடும். அது​வரை பொன்​வசந்த் கட்சி மற்​றும் மாநக​ராட்சி நிர்​வாகத்​தில் தலை​யிடவே முடி​யாது. அவரது நீக்​கம் தி​முக​வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்​ளது’’ என்​றனர்​.

    பின்னணி என்ன? – கட்​சியி​லிருந்து நீக்​கப்​பட்​டுள்ள பொன் வசந்த், முன்​னாள் சட்டப்பேரவை தலைவர் பிடிஆர்​. பழனிவேல் ராஜனின் தீவிர விசு​வாசி. அவரது மறைவுக்​குப் பிறகு, அவரது மகன் பழனிவேல் தியாக​ராஜனின் ஆதர​வாள​ராக இருந்​தார். திமுக ஆட்சி அமைந்​த​போது பழனிவேல் தியாக​ராஜன் நிதி அமைச்​ச​ராக​வும், திமுக தகவல் தொழில்​நுட்ப அணி மாநிலச் செய​லா​ள​ராக​வும் கட்​சி, ஆட்சி இரண்​டிலுமே செல்​வாக்​குடன் இருந்து வந்​தார்.

    அவர் ‘கை’ காட்​டும் நபர் மதுரை மேய​ராக வரக்​கூடிய நிலை இருந்​த​தால், தனது ஆதர​வாளர் பொன்​வசந்த் மனைவி இந்​தி​ராணியை மேய​ராக்​கி​னார். அதற்கு முன்பு வரை, இந்​தி​ராணிக்கு அரசி​யல் அனுபவமே இல்​லை. மேய​ராக அவர் பொறுப்​பேற்​ற​போது, இந்​தக் கேள்​வியை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜனிடம் செய்​தி​யாளர்​கள் கேட்​டனர். அதற்கு பழனிவேல் தியாக​ராஜன், `ஐஏஎஸ் அதி​காரி​கள் அவருக்கு வழி​காட்​டு​வார்​கள், போகப்​போக எல்​லாம் சரி​யாகி விடும்’ என்று நம்​பிக்கை அளித்​தார்.

    இந்​தி​ராணி மேய​ரான நாள் முதல் தற்​போது வரை, பெரும்​பான்மை திமுக கவுன்​சிலர்​கள், மண்​டலத் தலை​வர்​களு​டன் ஒத்​துப்​போக​வில்​லை. மேயர் இந்​தி​ராணி பெயரளவுக்கு மேய​ராக​வும், நிழல் மேய​ராக அவரது கணவர் பொன் வசந்த் செயல்​பட்டு வரு​வ​தாக​வும், மாநக​ராட்சி நிர்​வாகப் பணி​களில் தலை​யிடு​வதுடன், அதி​காரி​களுக்கு உத்​தர​விடு​வ​தாக​வும் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. அதனால், மாநக​ராட்சி ஆணை​யர்​களாக வந்​தவர்​கள் சிறிது​காலம்​கூட தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் சென்​றனர். அதனால், இந்​தி​ராணி மேய​ராகி 4 ஆண்​டு​கள் நெருங்​கும் நிலை​யில் 5 ஆணை​யர்​கள் மாற்​றப்​பட்​டநிலை​யில் தற்​போது 6-வது ஆணை​ய​ராக சித்ரா வந்​துள்​ளார். இந்​நிலை​யில்​தான் பொன் வசந்த் கட்​சி​யில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அஜித்குமார் கொலை: ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய தவெக மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

    July 4, 2025
    மாநிலம்

    லாக்-அப் உயிரிழப்பு, வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி: குஷ்பு வலியுறுத்தல்

    July 4, 2025
    மாநிலம்

    முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு! – போட்டிக்காகவா, போட்டியிடுவதை அதிகரிப்பதற்காகவா?

    July 4, 2025
    மாநிலம்

    சென்​னை, புறநகரில் மிதமான மழை

    July 4, 2025
    மாநிலம்

    “அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து போலீஸார் தாக்கியதை நேரில் பார்த்தேன்” – உறவினர் பரபரப்பு பேட்டி

    July 4, 2025
    மாநிலம்

    வாளுக்குப் பதில் வேல்… திமுகவினரையும் திருப்பிவிட்ட பாஜக! – முருகனை தூக்கிப் பிடிக்கும் தமிழக அரசியல் களம்!

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஸ்ரீநகரில் அமைதியாக நடைபெற்ற மொஹரம் ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    • ஸ்டோக்ஸ் மீது கடும் ‘பிரஷர்’ – இந்திய அணி பந்து வீச்சில் கட்டுக்கோப்பு தேவை!
    • ‘மகா கும்பமேளா புனிதநீர், ராமர் கோயில் நினைவுச் சின்னம்’ – டிரினிடாட் & டொபாகோ பிரதமருக்கு மோடி பரிசு
    • அஜித்குமார் கொலை: ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய தவெக மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு
    • பிராட் பிட் அவர் குழப்பமடைந்ததாக ஒப்புக்கொள்கிறார்: ‘அவர் ஏஞ்சலினாவை நேசித்தார்’ ஆனால் சேதம் செய்யப்படுகிறது, ஆதாரங்கள் கூறுகின்றன

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.