Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“மதுரை மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும்” – செல்லூர் ராஜூ
    மாநிலம்

    “மதுரை மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும்” – செல்லூர் ராஜூ

    adminBy adminAugust 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “மதுரை மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும்” – செல்லூர் ராஜூ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுக்கு பொறுப்பேற்று மேயர் இந்திராணி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், மாநகர அதிமுக செயலாளருமான செல்லூர் கே.ராஜூ வலியுறுத்தியுள்ளார்.

    இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியவது: “மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத மேயரின் கணவர் சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவர் செய்த முறைகேடுகளுக்கு மாநகராட்சி மேயர்தானே காரணம். அவர் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும். அவர் பதவி விலகாததால், அவர் பதவி விலக வேண்டும் அல்லது தமிழக அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது.

    கணவர் மீது குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், மேயர் இந்திராணி பதவியில் தொடர்வது அநீதியானது. நீதிக்கு புறம்பானது. தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சிகளில் ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை பதவி விலகச் செய்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதுபோல், மேயர் இந்திராணியை மாற்றிவிட்டு அவருக்கு மாற்றாக புதியவரை மேயராக கொண்டு வரலாம். அப்போதுதான் மதுரை மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கும்.

    தமிழகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அத்தனையிலும் வரி உயர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிய ஒரு குழு அமைக்க வேண்டும் என நீதிபதிகள் வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளனர். வழிகாட்டுதல்களை கொடுத்த பின்னும் மேயர் பதவியில் நீடிப்பது வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது.

    கணவர் தவறு செய்துள்ளதால் மனைவியிடமும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேயர் பதவியில் இருக்கும்போது இந்திராணியை விசாரித்தால் சரியாக இருக்காது. பதவி விலகிய பிறகு விசாரிப்பதுதான் முறையான நடவடிக்கையாக இருக்கும். சொத்துவரி முறைகேட்டில் அதிமுக தலையிட்டது என்ற ஒரே காரணத்திற்காக தற்போது முறைகேட்டில் தொடர்பில்லாத அதிமுக உறுப்பினர்களை விசாரிப்பதுபோல் போலீஸார் மிரட்டுகின்றனர்.

    அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி மதுரை வரும்போது உள்ளூர் அமைச்சர்கள் எங்கே போகப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் குடிமராமத்து பணிகளால் நிலத்தடிநீர் நீர்மட்டம் உயர்ந்தது. புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம், புதிய பாலங்கள், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால்தான், தற்போது மதுரை, மதுரையாக இருக்கிறது. இந்த 2 அமைச்சர்கள் மதுரைக்கு இதுவரை என்ன செய்துள்ளனர். ஒன்றை குறிப்பிட்டு சொல்ல முடியுமா?” என்றார் செல்லூர் ராஜூ.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    “திமுக ஆட்சிக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை” – முதல்வர் ஸ்டாலின்

    August 28, 2025
    மாநிலம்

    செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகளை மாற்றி ஐகோர்ட் உத்தரவு

    August 28, 2025
    மாநிலம்

    குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் செப்.2, 3 தேதிகளில் ‘ட்ரோன்’ பறக்க தடை

    August 28, 2025
    மாநிலம்

    கண்ணப்பர் திடலில் நாய் கருத்தடை மையம் அமைக்க தடை கோரிய வழக்கு: சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு

    August 28, 2025
    மாநிலம்

    பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக பொதுநல வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும்: ஐகோர்ட்

    August 28, 2025
    மாநிலம்

    கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு விரைந்து நலம் பெற விழைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “திமுக ஆட்சிக்கு எதிரான அவதூறுகளில் சத்தும் இல்லை; சாரமும் இல்லை” – முதல்வர் ஸ்டாலின்
    • புனித இந்திய மரங்களால் ஈர்க்கப்பட்ட 10 குழந்தை பெயர்கள்
    • செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகளை மாற்றி ஐகோர்ட் உத்தரவு
    • ட்ரம்ப் 50% வரி விதித்த ‘நிஜ’ காரணமும், இந்தியா செய்ய வேண்டியதும் என்ன? – ரகுராம் ராஜன் விவரிப்பு
    • ஆப்டிகல் மாயை: 10 பேரில் 1 பேர் மட்டுமே சிங்கங்களிடையே மறைக்கப்பட்ட நரியைக் காணலாம்! நீங்கள் அவர்களில் ஒருவரா? | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.