Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminJuly 17, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மதுரை மாநகராட்சி 83வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ மதுரை மாநகராட்சியில் பெரிய அளவில் சொத்து வரி விதிப்பு முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முறையான வரி செலுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக முந்தைய மாநகராட்சி ஆணையர் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் 2024-ல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் பல மாதங்கள் தாமதத்துக்கு பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை மாநகராட்சியில் 2022 முதல் 2024 வரை மேயர் மற்றும் மண்டல குழு தலைவர்களுக்கு தெரிந்து வரி விதிப்பு முறைகேடு நடைபெற்றுள்ளது. கட்டிடத்தின் அளவை குறைவாக காட்டுவது, வணிக கட்டிடங்களை குடியிருப்பு கட்டிடங்களாக காட்டுவது, கட்டிடங்களில் சில மாற்றங்களை செய்வது உள்ளிட்டவைகள் மூலம் வரிக்குறைப்பு செய்துள்ளனர்.

    இந்த முறைகேட்டால் மதுரை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பு இருப்பதால் குற்றப்பிரிவு போலீஸார் சரியாக விசாரணை நடத்தமாட்டார்கள். எனவே, மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், மாநகராட்சி ஆணையரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சிப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

    மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மகேந்திரன் வாதிடுகையில், மாநகராட்சி ஆணையர் புகார் அளித்துள்ளார். ரூ.10 லட்சம் வரி விதிக்க வேண்டிய இடத்துக்கு ரூ.5 லட்சம் மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேட்டை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் பிறகு முதல்வர் தலையிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவின் பேரில் 5 மண்டல தலைவர்கள், 2 குழு தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது.

    இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதால் தான் மண்டல தலைவர்கள், குழு தலைவர்களிடம் ராஜினாமா பெறப்பட்டுள்ளது. இதனால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றார். பின்னர் நீதிபதிகள், மதுரையில் மட்டும் வரி விதிப்பு முறைகேடு நடைபெறவில்லை. தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த முறைகேட்டில் சென்னை மாநகராட்சியை மதுரை மாநகராட்சி முந்தியுள்ளது.

    வரி விதிப்பில் முறைகேடு நடந்திருப்பதாக மாநகராட்சி ஆணையரே புகார் அளித்துள்ளார். மூன்றாவது நபர் புகார் அளித்திருந்தால் கூட மறுக்கலாம். ஆணையரின் புகாரை எளிதாக கையாள முடியாது. மாநகராட்சி ஆணையர் 16.9.2024-ல் புகார் அளித்துள்ளார். 7 மாதம் தாமதமாக 17.6.2025-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாமதம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

    இந்த முறைகேட்டில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. இதையடுத்தே மண்டல தலைவர்கள், குழு தலைவர்கள் என 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர். எனவே இந்த முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும். முழு உண்மையையும் வெளிக் கொண்டு வர வேண்டும். முறைகேட்டில் தொடர்புடைய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். இதனால் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை தொடரலாம் என்றனர்.

    மனுதாரர் தரப்பில், சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெறுபவர்களும் முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தான். இதனால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் சிபிசிஐடி விசாரணைக்காவது மாற்ற வேண்டும். விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

    இதற்கு நீதிபதிகள், எல்லா வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற முடியாது.

    சிபிஐக்கு ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ளது. மேலும் சிபிஐ விசாரணை முடிய பல ஆண்டுகள் ஆகும். எல்லா அதிகாரிகள் மீதும் நம்பிக்கை வைக்காமல் இருப்பது சரியல்ல. சிபிசிஐடி விசாரணையும் தேவையில்லை. இதனால் மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கை விசாரிக்க தென் மண்டல ஐஜி மற்றும் மதுரை மாநகர் காவல் ஆணையர் ஆகியோர் மூத்த, நேர்மையான ஐபிஎஸ் அதிகாரிக தலைமையிலான சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணையை தொடர வேண்டும். சிறப்பு விசாரணை குழு தனது விசாரணை அறிக்கையை ஜூலை 25-ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நடைபயிற்சி போது இசை கேட்பது எப்படி உங்கள் மனநிலை மற்றும் மன தெளிவை அதிகரிக்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பண்டைய ஜெர்மன் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட பேய் சாப மாத்திரை: இடைக்கால மாந்திரீகம் அல்லது பண்டைய வெறுப்பு? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நாம் இறுதியாக 2025 இல் நம்புவதை நிறுத்திவிட்ட மிகப்பெரிய சுகாதார கட்டுக்கதைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பெருங்குடல் புற்றுநோய் அறிகுறி: தொடர்ந்து துர்நாற்றம் வீசுவது பெருங்குடல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்: இரைப்பை குடல் மருத்துவர் அதிர்ச்சி தரும் இணைப்பை விளக்குகிறார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஏன் கண் சிமிட்டினால் யாராவது உண்மையில் உங்கள் பேச்சைக் கேட்கிறார்களா இல்லையா என்பதை வெளிப்படுத்தலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.