Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் இரு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் தடை
    மாநிலம்

    மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் இரு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் தடை

    adminBy adminJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் இரு சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் தடை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை – தூத்துக்குடி சாலையில் எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011-ல் பயன்பாட்டுக்கு வந்தது. சாலை ஒப்பந்த அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் மற்றும் நெடுஞ்சாலை நடுவில் (சென்டர் மீடியன்) செடிகள் நட்டு பரமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். ஆனால், அதுபேன்ற எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை.

    இதன் காரணமாக கடந்த 2023-ல் தனியார் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டது. மதுரை – தூத்துக்குடி சாலையில் சுங்கச் கட்டண வசூல் செய்ய ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் நெடுஞ்சாலையை பராமரிக்க ரூ.563.83 கோடி செலவிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செலவிடப்படவில்லை. அதே நேரத்தில் ஒப்பந்த தொகையை விட கூடுதலாக சுங்கச்சாவடி கட்டணம் மூலம் வசூல் செய்துள்ளது.

    தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் சாலை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மாதம் சுங்கக் கட்டணமாக ரூ.11 கோடி வசூல் செய்யப்படுகிறது. இதில் ரூ.30 லட்சம் மட்டுமே பராமரிப்பு பணிக்கு செலவிடப்படுகிறது. இதனால் போதுமான சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தியும் தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகளை வாகன ஓட்டிகள் பெறவில்லை.

    எனவே மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள், நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை எலியார்பத்தி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் வாகன ஒட்டிகளிடம் 30 சதவீத சுங்க கட்டணம் மட்டும் வசூலிக்க உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வு இன்று (ஜூன் 3) விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைப்பது, மரம் வளர்ப்பது உள்ளிட்ட வசதிகளை முறையாகச் செய்யும் வரை சுங்கக் கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பிரதமர், முதல்வர்களை நீக்கம் செய்யும் மசோதா: மக்களாட்சி அடித்தளத்தை களங்கப்படுத்தும் செயல் – முதல்வர் ஸ்டாலின்

    August 21, 2025
    மாநிலம்

    100 தொகுதிகளில் 34 நாட்களில் 10 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து மக்களை சந்தித்த பழனிசாமி 

    August 21, 2025
    மாநிலம்

    கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதா? – இந்து முன்னணி கண்டனம்

    August 21, 2025
    மாநிலம்

    ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

    August 21, 2025
    மாநிலம்

    முதல்வர் ஸ்டாலின் 50-வது திருமண நாள்: மனைவி துர்காவுடன் சென்று தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார்

    August 21, 2025
    மாநிலம்

    திருபுவனம் பாமக ராமலிங்கம் கொலை வழக்கு: திண்டுக்கல், தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

    August 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நடைபயிற்சி: படிகள் Vs நிமிடங்கள், பயிற்சி இலக்குகளுக்கு எது சிறந்தது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இரண்டு தலை ஹைபலோசொரஸ்: புதைபடிவ கண்டுபிடிப்பு அரிய டைனோசர் ஒழுங்கின்மையை வெளிப்படுத்துகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மெய்நிகர் நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி?
    • பிரதமர், முதல்வர்களை நீக்கம் செய்யும் மசோதா: மக்களாட்சி அடித்தளத்தை களங்கப்படுத்தும் செயல் – முதல்வர் ஸ்டாலின்
    • கணைய புற்றுநோயுடன் துணிச்சலான சண்டையைத் தொடர்ந்து நீதிபதி ஃபிராங்க் கேப்ரியோ 88 மணிக்கு இறந்தார் – இந்தியாவின் நேரங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.