Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரை தவெக மாநாட்டின்போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்சம் வாகனங்கள் கட்டணம் செலுத்தவில்லை
    மாநிலம்

    மதுரை தவெக மாநாட்டின்போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்சம் வாகனங்கள் கட்டணம் செலுத்தவில்லை

    adminBy adminSeptember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரை தவெக மாநாட்டின்போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்சம் வாகனங்கள் கட்டணம் செலுத்தவில்லை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரை தவெக மாநாட்​டின்​போது 4 சுங்கச்சாவடிகளில் 1.30 லட்​சம் வாக​னங்​கள் சுங்​கக் கட்​ட​ணம் செலுத்​த​வில்லை என்று உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    நெல்​லை​யைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஏஆர்​.ஜெயருத்​ரன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: மதுரை மாவட்​டம் கப்​பலூர் முதல் உத்​தங்​குடி வரையி​லான 31.2 கிலோமீட்​டர் தொலைவு சாலை வழி​யாக, தென் மாவட்​டங்​களில் இருந்து வரும் வாக​னங்​கள் சென்​னை, திருச்சி உள்​ளிட்ட நகரங்​களுக்​குச் செல்​கின்​றன.

    இந்த சாலை​யில் உள்ள சுங்​கச்​சாவடிகளில் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை சுங்​கக் கட்​ட​ணம் வசூலாகிறது. எனினும், சாலை பராமரிப்பு மோச​மாகவே உள்​ளது. மேலும், இந்த சாலை​யில் அரசி​யல் கட்​சிகளின் மாநாடு, பேரணி, மத அமைப்​பு​களின் மாநாடு, பொதுக் கூட்​டங்​கள், கலாச்​சார நிகழ்ச்​சிகளுக்கு அனு​மதி வழங்​கப்​படு​கிறது.

    இதில் பங்​கேற்க வரு​வோர் வாக​னங்​களை சாலைகளில் நிறுத்​தி​விட்டு செல்​வ​தால், கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​கிறது. மேலும், சுங்​கக் கட்​ட​ணம் செலுத்​தும் வாக​னங்​கள் பாது​காப்​பாக பயணம் செய்ய முடி​யாத நிலை ஏற்​படு​கிறது.

    அண்​மை​யில் தவெக 2-வது மாநில மாநாட்​டுக்கு இந்த சாலை​யில் அனு​மதி வழங்​கப்​பட்​டது. நெல்​லை, தூத்​துக்​குடியி​லிருந்து வந்த 1.30 லட்​சம் வாக​னங்​கள் கப்​பலூர், எலி​யார்​பத்தி உள்ளிட்ட சுங்​கச்​சாவடிகளில் கட்​ட​ணம் செலுத்​தாமல் சென்​றுள்​ளன. இதனால், மத்​திய மாநில அரசுகளுக்கு பெரும் வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இது, சுங்​கக் கட்​ட​ணம் செலுத்தி பயணம் செய்​வோருக்கு பாகு​பாடு பார்ப்​ப​தாகும்.

    எனவே, கப்​பலூர் முதல் உத்​தங்​குடி வரையி​லான சாலை​யில் அரசி​யல் கட்​சிகள், மத அமைப்​பு​களின் மாநாடு, பேரணி, பொதுக்​கூட்​டங்​கள் மற்​றும் திருமண மண்​டபம், வணிக வளாகங்​களுக்கு அனு​மதி வழங்க தடை விதித்​தும், ஏற்​கெனவே வழங்​கிய அனு​ம​தியை திரும்​பப் பெற​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

    இந்த மனு நீதிப​தி​கள் அனிதா சுமந்த், குமரப்​பன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. பின்​னர் நீதிப​தி​கள், “மனு​தா​ரர் குறிப்​பிட்​டுள்ள சாலை​யில் கடந்த ஓராண்​டில் எத்​தனை வாக​னங்​கள் சென்​றுள்​ளன, எவ்​வளவு சுங்​கக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது என்​பது தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்” என்று உத்​தர​விட்​டு, விசா​ரணையை தள்​ளி​வைத்​தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தண்​ணீரில் இருந்து எடுக்​கப்​படும் ஹைட்ரஜனை கொண்டு ‘காஸ்’ தயாரிப்பு: விஞ்ஞானி தகவல்

    September 20, 2025
    மாநிலம்

    பழனிசாமி சுற்றுப்பயணம் அக். 4, 5-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

    September 20, 2025
    மாநிலம்

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது: சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

    September 20, 2025
    மாநிலம்

    கோடநாடு வழக்கு விசாரணை: அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

    September 20, 2025
    மாநிலம்

    சென்னையில் நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்: முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்

    September 20, 2025
    மாநிலம்

    மருத்துவ மாணவர்களுக்கு ரேபிஸ் தடுப்பு சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்க தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தல்

    September 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஓமனை 21 ரன்களில் வீழ்த்திய இந்தியா!
    • பெங்களூருவில் ‘த டாக்ஸிக்’ கடைசிக் கட்ட படப்பிடிப்பு!
    • தண்​ணீரில் இருந்து எடுக்​கப்​படும் ஹைட்ரஜனை கொண்டு ‘காஸ்’ தயாரிப்பு: விஞ்ஞானி தகவல்
    • அமெச்சூர் வானியலாளர்கள் சிறுகோள் பிரஞ்சு தாக்க தளத்திற்கு கண்காணிக்க உதவுகிறார்கள் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும்’: இந்திய மாணவர் மீதான MEA நம்மில் சுட்டுக் கொல்லப்பட்டார், என்று ஆய்வு | இந்தியா செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.