Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, August 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த் – தேதியை மாற்ற போலீஸார் ஆலோசனை
    மாநிலம்

    மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த் – தேதியை மாற்ற போலீஸார் ஆலோசனை

    adminBy adminJuly 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரையில் தவெக மாநாடு பணிகளை ஆய்வு செய்த ஆனந்த் – தேதியை மாற்ற போலீஸார் ஆலோசனை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதுரையில் ஆகஸ்டு 25-ல் நடக்கும் தவெக மாநாடு குறித்த பணிகளை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று நேரில் ஆய்வு செய்தார். காவல் துறை அனுமதியை விரைந்து வழங்கவும் எஸ்பியிடம் அவர் வலியுறுத்தினார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது மாநில மாநாட்டை ஆகஸ்டு 25-ல் மதுரையில் நடத்துகிறது. இதற்காக மதுரை – தூத்துக்குடி சாலையில் 506 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பந்தல் கால் நடத்தப்பட்டு மாநாட்டுக்கான மேடை, பந்தல், பார்வையாளர்கள், பார்க்கிங் கேலரிகள் அமைத்தல் போன்ற பணிகளும் தொடங்கியுள்ளன.

    மாநாடுக்கான உரிய அனுமதி, உரிய பாதுகாப்பு கேட்டு அக்கட்சியின் மாநில செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து மாநாடு நடக்கும் இடத்தை போலீஸார் ஆய்வு மேற்கொண் டனர். இந்நிலையில், மாநாட்டு பணிகளை பார்வையிட, கட்சியின் மாநில செயலாளர் ஆனந்த் இன்று மதுரைக்கு வந்தார். அவர், மதுரை காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை சந்தித்து ஏற்கெனவே கொடுத்த கடிதம் குறித்த நிலையை கேட்டறிந்தார். விரைந்து அனுமதி வழங்கும்படி வலியுறுத்தியுள்ளார்.

    ஆக. 27-ம் தேதி விநாயகர் சதூர்த்தி பாதுகாப்பு போன்ற பணிகள் இருப்பதால் வேறு தேதியில் நடத்தலாமா என இரு தரப்பிலும் ஆலோசித்தாக வும், அதற்கு பொதுச் செயலாளர் வாய்ப்பில்லை எனக் கூறியதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து பாரபத்திக்கு சென்ற ஆனந்த், மாநாட்டு திடலில் நடக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டார். அவருடன் தவெக மாவட்ட செயலாளர்கள் கல்லாணை, தங்கப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, ‘விநாயகர் சதுர்த்திக்கு முன்னும் பின்னும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அளிக்கும் சூழலால் தவெக மாநாட்டை வேறு தேதிக்கு மாற்றலாமா என அக்கட்சி நிர்வாகிகளிடம் கேட்டோம். எதுவானாலும் கட்சி தலைவரே முடிவெடுப்பார்’ என்றனர். தவெக நிர்வாகி ஒருவர் கூறுகையில் ‘விஜயகாந்த் பிறந்தநாள், தலைவர் விஜய்யின் திருமண நாளான ஆகஸ்டு 25-ல் திட்டமிட்டபடி மாநாடு நடக்கும். மாநாட்டுக்கான பணிகளை மும்முரமாக செய்கிறோம். தேதி மாற வாய்ப்பில்லை’ என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை அக்.10-க்கு ஒத்திவைப்பு: குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

    August 28, 2025
    மாநிலம்

    அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் ஜவுளி மையத்தில் ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் ஸ்டாலின்

    August 28, 2025
    மாநிலம்

    தேர்தல் ஆணையத்தை கண்டித்து நெல்லையில் செப்​.7-ல் காங்கிரஸ் மாநாடு

    August 28, 2025
    மாநிலம்

    தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

    August 28, 2025
    மாநிலம்

    கையில் இருப்பது மந்திரக்கோலா, மருத்துவக்கோலா? – பிரேமலதாவும் கையில் கரகோல் வைத்திருக்கும் ‘கணக்கு’ என்ன?

    August 28, 2025
    மாநிலம்

    “பாமக அழிவதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது!” – காடுவெட்டி குருவின் மகள் காட்டமான நேர்காணல்

    August 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை அக்.10-க்கு ஒத்திவைப்பு: குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்
    • இந்த அன்றாட நட்டு குறைந்த கொழுப்பு, இதய நோய் தடுப்பு மற்றும் நீண்ட ஆயுளைக் குறைப்பதற்கான ரகசியமாக இருக்கலாம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விஞ்ஞானிகள் ‘அவதார் பாணி’ ஒளிரும் தாவரங்களை உருவாக்குகிறார்கள், அவை விரைவில் வீடுகளையும் நகரங்களையும் ஒளிரச் செய்யலாம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழகத்தில் பிஹாரிக்கள் தாக்கப்பட்டபோது ஸ்டாலின் எங்கே போனார்? – பிரசாந்த் கிஷோர்
    • சற்றே உயர்ந்த தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.9,405-க்கு விற்பனை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.