Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதுரையில் சாலையை மறைத்து மேடை அமைத்த திமுக மாணவரணி – பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமம்
    மாநிலம்

    மதுரையில் சாலையை மறைத்து மேடை அமைத்த திமுக மாணவரணி – பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமம்

    adminBy adminJune 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதுரையில் சாலையை மறைத்து மேடை அமைத்த திமுக மாணவரணி – பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில் இன்று திமுக மாணவரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தக்காக மதுரை – ராமேசுவரம் பழைய தேசிய நெடுஞ்சாலையை மறைத்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்று வழியில் பல கி.மீ. தூரம் சுற்றிச் சென்றதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிரமப்பட்டனர்.

    திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் மதுரை விரகனூர் சுற்றுச் சாலை வழியாகச் செல்கின்றனர். இதனால் நாள் முழுவதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. மதுரையிலிருநது புளியங்குளம், சிலைமான், மணலூர், திருப்புவனம் வழியாக தினமும் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பகுதி களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் தினமும் இப்பேருந்து களில் பயணம் செய்கின்றனர்.

    இந்நிலையில், விரகனூர் சுற்றுச்சாலை அருகே மதுரை – ராமேசுவரம் பழைய தேசிய நெடுஞ்சாலையை மறைத்து திமுக மாணவரணியினர் இன்று மேடை அமைத்திருந்தனர். தார்ச் சாலையை பெயர்த்து கம்புகள் ஊன்றி ஆர்ப்பாட்டத்துக்கான பதாகைகளை வைத்திருந்தனர். நேற்று இரவு முதல் இச்சாலையில் வாகனங்கள் செல்ல போலீஸார் தடை விதித்தனர்.

    சாலையை மறைத்து மேடை அமைக்கப்பட்டிருந்ததால் மாற்று வழியில் வாகனங்களை போலீஸார் திருப்பிவிட்டனர். இதனால் பல கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸார் எப்படி அனுமதி வழங்கினார்கள் எனத் தெரிய வில்லை. ஆளும் கட்சி என்பதாலும், மத்திய அரசை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டம் என்பதாலும் போலீஸார் அனுமதி வழங்கியுள்ளனர்.

    இதைப் பார்த்து, எதிர்காலத்தில் மற்ற கட்சியினரும், இதே இடத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்த அனுமதி கோருவர். இதனால் எங்களை போன்ற வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தான் அதிகம் பாதிக்கப்படுவோம். இதுபோன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்குவதை போலீஸார் தவிர்க்க வேண்டும் என்று கூறினர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு தில்லுமுல்லு: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    July 26, 2025
    மாநிலம்

    வலிமையான ராணுவமே நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

    July 26, 2025
    மாநிலம்

    போலி வணிகர்களை தடுக்க கள ஆய்வு நடத்த அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவு

    July 26, 2025
    மாநிலம்

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

    July 26, 2025
    மாநிலம்

    முதல்வர் மருந்தகங்களில் குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு பற்றாக்குறை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

    July 26, 2025
    மாநிலம்

    கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பவர்களுக்கு வீடு கட்டி கொடுப்போம் என சொல்வதா? – பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்

    July 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஒரு தில்லுமுல்லு: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
    • வலிமையான ராணுவமே நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து
    • போலி வணிகர்களை தடுக்க கள ஆய்வு நடத்த அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவு
    • மூளை மூடுபனியை அழிக்கவும், மன தெளிவை அதிகரிக்கவும்க்கூடிய 6 சக்திவாய்ந்த மூலிகைகள்
    • ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.