Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 10
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மதம் மாறிய பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு: உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
    மாநிலம்

    மதம் மாறிய பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு: உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

    adminBy adminSeptember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மதம் மாறிய பேரூராட்சி தலைவர் பதவி பறிப்பு: உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மதம் மாறியதை மறைத்து பேரூ​ராட்​சித் தலை​வர் தேர்​தலில் வென்ற அதி​முக பெண் கவுன்​சிலரின் தலை​வர் பதவியை பறித்த உத்​தரவை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உறு​திப்படுத்​தி​யுள்​ளது.

    கன்​னி​யாகுமரி மாவட்​டம், தேரூர் பேரூ​ராட்​சிக் கவுன்​சிலர் அய்​யப்​பன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தேரூர் பேரூ​ராட்​சி​யில் 2022-ல் நடை​பெற்ற தேர்​தலில் திமுக சார்​பில் 8-வது வார்​டில் போட்​டி​யிட்டு கவுன்​சில​ரானேன். பேரூ​ராட்​சித் தலை​வர் பதவி பட்​டியலினத்​துக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது.

    இந்த தேர்​தலில் 2-வது வார்டு அதி​முக கவுன்​சிலர் அமு​தா​ராணி வெற்றி பெற்​றார். அவர் கிறிஸ்தவ மதத்​தைச் சேர்ந்​தவர். 2005-ம் ஆண்​டிலேயே மதம் மாறி கிறிஸ்தவ மதத்​தில் இணைந்​து, கிறிஸ்​தவரை திரு​மணம் செய்​தவர். இந்து பட்​டியல் சமூகத்​தைச் சேர்ந்​தவர் வேறு மதத்​துக்கு மாறினால், அவர் பட்​டியலினப் பிரி​வினருக்​கான இடஒதுக்​கீட்​டுப் பலனைப் பெற முடி​யாது.

    இந்​நிலை​யில், கிறிஸ்​தவ​ரான அமு​தா​ராணி, தான் இந்து பட்​டியலினத்​தைச் சேர்ந்​தவர் என்று கூறி தேர்​தலில் போட்​டி​யிட்​டு, வெற்றி பெற்​றார். இது சட்​ட​விரோத​மானது. எனவே, தேரூர் பேரூ​ராட்​சித் தலை​வ​ராக உள்ள அமு​தா​ராணி​யின் பட்​டியலின சாதிச் சான்​றிதழை ரத்து செய்​து, அவரை தலை​வர் பதவி​யில் இருந்து தகுதி நீக்​கம் செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறி​யிருந்​தார்.

    இந்த மனுவை தனி நீதிபதி விக்​டோரியா கௌரி விசா​ரித்​து, “இந்து பட்​டியல் வகுப்​பைச் சேர்ந்த ஒரு​வர் கிறிஸ்தவ மதம் மாறி, கிறிஸ்​தவர் ஒருவரை திரு​மணம் செய்​து​கொண்​டதற்கு அனைத்து ஆவணங்​களும் உள்ள நிலை​யில், பட்​டியலின வகுப்​பைச் சேர்ந்​தவர் என்று கூறி வேட்​பு

    மனுத் தாக்​கல் செய்​த​போதே, அவரது வேட்​புமனுவை தேர்​தல் அதி​காரி​கள் தகுதி நீக்​கம் செய்​திருக்க வேண்​டும்.

    ஒரு​வர் ஒரே நேரத்​தில் இரு சலுகைகளை அனுபவிக்​கக் கூடாது. இது அரசி​யலமைப்​புச் சட்​டத்தை ஏமாற்​றும் செய​லாகும். எனவே, அமு​தா​ராணி தலை​வர் பதவியி​லிருந்து தகுதி நீக்​கம் செய்​யப்பட வேண்​டும்” என்று உத்​தர​விட்​டார்.

    இந்த உத்​தரவை எதிர்த்து அமுதா​ராணி மேல்​முறை​யீடு செய்​தார். இதை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.ஆர்.சுவாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது:

    இந்த வழக்​கின் உண்​மை​யான பிரச்​சினை அமு​தா​ராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்​றுக்​கொள்​கிறா​ரா, அவர் ஞானஸ்​நானம் பெற்​றாரா என்​பது​தான். மனு​தா​ரர் ஞானஸ்​நானம் பெற்​றுக்​கொண்​டது உறு​திப்​படுத்​தப்​படு​கிறது. ஒரு​வர் ஒரு மதத்​திலிருந்து மற்ற மதத்​துக்கு மாறு​வது என்​பது அரசி​யலமைப்​பின் அடிப்​படை உரிமை​யாகும்.

    ஆனால், ஞானஸ்​நானத்​துக்​குப் பிறகு புதிய அடை​யாளத்தை மறைத்​து, அரசி​யலமைப்​புச் சட்​டம் வழங்​கி​யுள்ள உரிமை​களை அனுபவிக்​கும் நோக்​கத்​துக்​காக, பட்​டியல் இன சமூக நிலை​யில் தொடரும்​போது சிக்​கல் ஏற்​படு​கிறது.

    இந்த வழக்​கில் மேல்​முறை​யீட்டு மனு​தா​ரர் கிறிஸ்தவ மதத்​தைத் தழுவி உள்​ளார் என்​பது ஆதா​ரங்​களு​டன் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, தனி நீதிப​தி​யின் உத்​தரவு உறுதி செய்​யப்​பட்​டு, மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் 45 மாதங்களில் 6,700 கொலைகள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

    September 10, 2025
    மாநிலம்

    அமித் ஷா, நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் சந்திப்பு: பாஜகவின் அணுகுமுறை மாற்றத்தால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு

    September 10, 2025
    மாநிலம்

    என்டிஏ கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும் விரைவில் முடிவுக்கு வரும்: அண்ணாமலை கருத்து

    September 10, 2025
    மாநிலம்

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாயார் காலமானார்: பழனிசாமி இரங்கல்

    September 10, 2025
    மாநிலம்

    210-ல் வெற்றி என்ற பழனிசாமி கனவு நிறைவேறாது: கனிமொழி எம்.பி. விமர்சனம்

    September 10, 2025
    மாநிலம்

    வெளியே ஜொலிப்பு, உள்ளே புதர்… காஞ்​சியில் கவலைக்குரிய நிலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா!

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சமூக வலைதளங்களில் ஏராளமான மன நோயாளிகள்! – தங்கர் பச்சான் காட்டம்
    • தமிழகத்தில் 45 மாதங்களில் 6,700 கொலைகள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
    • உலக நாடுகள் இடையே நியாயமான, வெளிப்படையான வர்த்தகம் தேவை: அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
    • கொழுப்பு கல்லீரல் நோய்: தவறான நோயறிதலைத் தடுக்கக்கூடிய ஹார்வர்ட் மருத்துவரின் கூற்றுப்படி 8 எச்சரிக்கை அறிகுறிகள்
    • நாட்டின் 4-வது முழு எழுத்தறிவு பெற்ற மாநிலம் இமாச்சல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.