Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மடப்புரம் அஜித்குமார் மீது குற்றம்சாட்டிய நிகிதா குடும்பத்தினர் மீது உதவி எஸ்.பி.யிடம் புகார்
    மாநிலம்

    மடப்புரம் அஜித்குமார் மீது குற்றம்சாட்டிய நிகிதா குடும்பத்தினர் மீது உதவி எஸ்.பி.யிடம் புகார்

    adminBy adminJuly 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மடப்புரம் அஜித்குமார் மீது குற்றம்சாட்டிய நிகிதா குடும்பத்தினர் மீது உதவி எஸ்.பி.யிடம் புகார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்​லூரி பேராசிரியை நிகிதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது திரு​மங்​கலம் உதவி எஸ்​.பி.​யிடம் நேற்று பலரும் புகார் அளித்​தனர்.

    கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகி​தா, மதுரை திரு​மங்​கலம் ஆலம்​பட்​டியைச் சேர்ந்​தவர். திண்​டுக்​கல்​லில் உள்ள கல்​லூரி​யில் பேராசிரியை​யாகப் பணிபுரி​கிறார். நிகி​தா​வின் தந்தை ஜெயபெரு​மாள், தாயார் சிவ​காமி அம்​மாள், சகோ​தரர் கவியரசு என்ற வைபவ் சரண், இவரின் மனைவி சுகதே​வி, உறவினர் பகத்​சிங் ஆகியோர் அரசு வேலை வாங்​கித்தரு​வ​தாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்​திருப்​ப​தாக ஏற்​கெனவே பல வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

    2010-ல் நிகி​தா​வின் தந்தை ஜெயபெரு​மாள் துணை ஆட்​சி​ய​ராகப் பணி​யாற்​றிய​போது, அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாக கூறி ரூ.16 லட்​சம் மோசடி செய்​த​தாக, நிகிதா குடும்​பத்​தினர் மீது வழக்கு உள்​ளது. மதுரை செக்​கானூரணி​யைச் சேர்ந்த செல்​வத்​திடம் ரூ.25 லட்​சம், ஆலம்​பட்​டியைச் சேர்ந்த முத்​துக்​கொடி, முரு​கேசன் ஆகியோரிடம் தலா ரூ.2.5 லட்​சம் பெற்று மோசடி செய்​த​தாக​வும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

    மேலும், மொக்​க​மாயன், மணிமேகலை ஆகியோரிட​மும் பணம் பெற்​று, நிகிதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மோசடி செய்​த​தாக புகார் அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஆலம்​பட்​டி​யில் உள்ள ஜெயபெரு​மாளுக்கு சொந்​த​மான வீட்டை தனி​யார் கல்​லூரிமேலா​ளர் பாசில் மன்​சிங் என்​பவரிடம் விற்​ற​தி​லும் புகார் உள்​ளது. நிகிதா குடும்​பத்​தின​ரால் பாதிக்​கப்​பட்ட பாசில் மன்​சிங், முத்​துக்​கொடி, முரு​கேசன், தெய்​வம், வினோத்​கு​மார் உள்​ளிட்​டோர் திரு​மங்​கலம் உதவி எஸ்​.பி.​யிடம் நேற்று மீண்​டும் புகார் மனு அளித்​தனர்.

    கல்​லூரிக்கு வரவில்​லை.. திண்​டுக்​கல்​லில் உள்ள எம்​விஎம் அரசு மகளிர் கல்​லூரி​யில் தாவர​வியல் துறைத் தலை​வ​ராக பணிபுரிந்து வரும் நிகி​தா, மாணவி​கள், உடன் பணிபுரி​யும் பேராசிரியைகள், அலு​வலர்​கள் ஆகியோ​ருக்கு தொடர்ந்து இடையூறு தரும் வகை​யில், உயர் அதி​காரி​களுக்கு புகார் அளித்து வந்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. அவர் தாவர​வியல் துறை துணைத் தலை​வ​ராக இருந்​த​போது கல்​லூரி மாணவி​கள் சிலர், ‘எங்​களை மனரீ​தி​யாகத் துன்​புறுத்​துகிறார். தகாத வார்த்​தைகளால் பேசுகிறார், எனவே, நிகி​தாவை பணி​யிட மாற்​றம் செய்ய வேண்​டும்’ என 2024 மே மாதம் திண்​டுக்​கல் மாவட்ட ஆட்​சி​ய​ராக இருந்த பூங்​கொடி​யிடம் புகார் மனு அளித்​துள்​ளனர்.

    ஆனால், அந்த புகார் தொடர்​பாக எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், அஜித்​கு​மார் மரணத்​துக்கு பிறகு கடந்த 5 நாட்​களாக நிகிதா பணிக்குவரவில்லை என்று கல்​லூரி வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு: அதிமுக மறியல் போராட்டம்

    July 4, 2025
    மாநிலம்

    சிபிசிஐடி விசாரணைதான் வேண்டும்: அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார்

    July 4, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை: ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய தவெக மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

    July 4, 2025
    மாநிலம்

    லாக்-அப் உயிரிழப்பு, வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி: குஷ்பு வலியுறுத்தல்

    July 4, 2025
    மாநிலம்

    முருக பக்தர்கள் மாநாடு நடத்திய இடத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநாடு! – போட்டிக்காகவா, போட்டியிடுவதை அதிகரிப்பதற்காகவா?

    July 4, 2025
    மாநிலம்

    சென்​னை, புறநகரில் மிதமான மழை

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு: அதிமுக மறியல் போராட்டம்
    • ஒரு செல்லப்பிராணி பீகல் நாய்க்குட்டியைப் பெறுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்
    • ஐ.எஸ்.எஸ்ஸில் வாழ்க்கையைப் பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு சுபன்ஷு சுக்லா பதிலளிக்கிறார்: சாப்பிடுவது முதல் விண்வெளியில் மிதப்பது வரை | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தலாய் லாமாவால் மட்டுமே வாரிசை தேர்வு செய்ய முடியும்: சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி
    • மகனுக்காக மன்னிப்புக் கேட்ட விஜய் சேதுபதி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.