Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: எல்.முருகன் குற்றச்சாட்டு
    மாநிலம்

    மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: எல்.முருகன் குற்றச்சாட்டு

    adminBy adminAugust 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: எல்.முருகன் குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஊட்டி: மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பாஜக சார்பில் மூவர்ணக்கொடி ஊர்வலம் நடந்தது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் பாஜக மாவட்ட தலைவர் தர்மன், அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத், கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன், முன்னாள் எம்பி கே.ஆர்.அர்ஜூணன் உட்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி சேரங்கிராஸ் பகுதியிலிருந்து கைகளில் மூவர்ணக்கொடி ஊர்வலம் கமர்சியல் சாலை வழியாக ஏடிசி சுதந்திர திடலில் நிறைவடைந்தது. பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் மூர்வணக்கொடி ஊர்வலம் நடந்து வருகிறது.

    நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் இந்தியா வல்லரசு நாடாகவும், ஒரே நாடு ஒரே மக்கள் என்ற நோக்கில் இப்பேரணி நடத்தப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது நாட்டுக்கு பெரிய வெற்றி கிடைத்தது. பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளோம்.

    கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடின் வளர்ச்சி பின்நோக்கி சென்றுள்ளது. ஸ்டாலின் வளர்ச்சியை பின் நோக்கி கொண்டு சென்று விட்டார். நான்கு ஆண்டுகளாக யாரோ அவரை இயக்கி வருகின்றனர். தற்போது உங்களுடன் ஸ்டாலின் என முகாம் நடத்துகின்றனர். இத்தனை காலம் அவர் யார் கூட இருந்தார். மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது.

    எங்கும் லஞ்சம், போதைப் பொருட்கள் புழக்கம், கொலை கொள்ளை என நடந்து வருகிறது. எனவே, இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப நேரம் வழந்து விட்டது. இந்த ஆட்சியில் மகளிருக்கு பாதுகாப்பில்லை. புகார்தாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையுள்ளது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது’ என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

    August 9, 2025
    மாநிலம்

    மாநில கல்விக் கொள்கை தன்னம்பிக்கை, சுய திறனை ஊக்குவிக்கும்: முத்​தரசன் வரவேற்பு

    August 9, 2025
    மாநிலம்

    ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரிய வழக்கு: தலைமை கால்நடை அதிகாரி ஆஜராக உத்தரவு

    August 9, 2025
    மாநிலம்

    எம்ஜிஆர், ஜெயலலிதா சாதி எல்லைகளைக் கடந்தவர்கள்: திருமாவளவன் திடீர் புகழாரம்

    August 9, 2025
    மாநிலம்

    திண்டிவனம், செஞ்சியில் கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுப்பு: பல்லவர் காலத்தை சேர்ந்தது என தகவல்

    August 9, 2025
    மாநிலம்

    சென்னை | மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை: பிஹார் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.150 கோடி வசூலைக் கடந்த ‘மகா அவதார் நரசிம்மா’
    • விருதுநகர் வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம்: முதல்வர் அறிவிப்பு
    • ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் 3 ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிட்டிய லாபம் என்ன?
    • மாநில கல்விக் கொள்கை தன்னம்பிக்கை, சுய திறனை ஊக்குவிக்கும்: முத்​தரசன் வரவேற்பு
    • பாதுகாப்பு தளவாட உற்பத்தி சாதனை அளவாக ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்வு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.