Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“மக்களுக்கு நல்லது செய்யவிடாமல் அதிமுகவினர், அதிகாரிகளுக்கு மிரட்டல்…” – செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
    மாநிலம்

    “மக்களுக்கு நல்லது செய்யவிடாமல் அதிமுகவினர், அதிகாரிகளுக்கு மிரட்டல்…” – செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

    adminBy adminMay 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “மக்களுக்கு நல்லது செய்யவிடாமல் அதிமுகவினர், அதிகாரிகளுக்கு மிரட்டல்…” – செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: “மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் போலீஸார், மக்களுக்காக பணிபுரிய வேண்டும். திமுகவினர் சொல்வதை கேட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீங்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள்,” என்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.

    மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுக நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நீர் மோர் பந்தலை திறந்து வைத்த செல்லூர் ராஜூ கூறியது: “மதுரை விளாங்குடி பகுதியில் ஏற்கெனவே காவல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துதான் பொதுமக்களுக்கான நீர்-மோர் பந்தலை திறந்து வைத்தோம். திறந்து வைத்த 2 நாட்களில் தமிழகத்தில் எங்குமே இல்லாத அளவில் கூடல்புதூர் காவல்துறையினர் நீர்-மோர் பந்தலை அகற்றினர்.

    கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை எளிதாக விற்கலாம். ஆனால்., மக்களுக்கு நீர்-மோர் கொடுக்கக் கூடாது. இதுதான் காவல் துறையினர் எடுக்கும் நடவடிக்கையா? நீர்மோர் பந்தல் அகற்றப்பட்டது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேட்டதற்கு நீர்மோர் பந்தல் திறப்பதற்கு நாங்கள் தடை விதித்ததில்லை என்கிறார்கள். காவல் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், திமுகவினர் மிரட்டலுக்கு பயந்து நீர்மோர் பந்தலை அகற்றினர்.

    விளாங்குடி பகுதியில் ஆளும்கட்சியினர் காவல் துறையினரைக் கொண்டு அதிமுகவினரையும், அதிகாரிகளையும் மிரட்டி மக்களுக்கு நல்லது செய்ய விடாமல் தடுக்கின்றனர்.

    நீர்-மோர் பந்தல் அகற்றப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். காவல் துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் விதித்து, நீதிமன்றத்தில் வெற்றி பெற்று மீண்டும் நீர்-மோர் பந்தலை திறந்து உள்ளோம்.

    கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி அனுமதி பெற்று தான் திமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து உள்ளார்களா? மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் போலீஸார், மக்களுக்காக பணிபுரிய வேண்டும். திமுகவினர் சொல்வதை கேட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீங்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள்” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    முல்லை பெரியாறு அணைக்கு ‘ரூல் கர்வ்’ முறையை நீக்க தமிழக விவசாயிகள் கோரிக்கை

    July 2, 2025
    மாநிலம்

    பதவியை இழந்த சங்கரன்கோவில் திமுக நகராட்சி தலைவர் – பின்னணி என்ன?

    July 2, 2025
    மாநிலம்

    அஜித்குமார் வழக்கு: உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி திருப்புவனத்தில் விசாரணை

    July 2, 2025
    மாநிலம்

    குறைந்த ரயில் கட்டண உயர்வு என்பது வெறும் கண் துடைப்பு: சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்

    July 2, 2025
    மாநிலம்

    அஜித்குமார் குடும்பத்துக்கு வீட்டு மனை பட்டா, சகோதரருக்கு அரசு வேலை பணி ஆணை வழங்கல்

    July 2, 2025
    மாநிலம்

    10 நாட்களில் வன்னியர் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்: அன்புமணி காட்டம்

    July 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • முல்லை பெரியாறு அணைக்கு ‘ரூல் கர்வ்’ முறையை நீக்க தமிழக விவசாயிகள் கோரிக்கை
    • குழந்தைகளுக்கு தரையில் சாப்பிடுவதன் 5 நன்மைகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • எனது மரணத்துக்குப் பிறகும் இந்த அறக்கட்டளை தொடரும்: தலாய் லாமா
    • கல்லூரிப் படிப்பின்போதே பின்பற்ற வேண்டிய ‘5’
    • தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் Vs ஃபெப்சி: மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜ் நியமனம் 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.