Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»போஸ்டர் ஒட்டினால் அபராதமா? – மதுரை மாநகராட்சி தீர்மானத்துக்கு சிபிஎம் கண்டனம்
    மாநிலம்

    போஸ்டர் ஒட்டினால் அபராதமா? – மதுரை மாநகராட்சி தீர்மானத்துக்கு சிபிஎம் கண்டனம்

    adminBy adminSeptember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போஸ்டர் ஒட்டினால் அபராதமா? – மதுரை மாநகராட்சி தீர்மானத்துக்கு சிபிஎம் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை; “நகரின் அழகு குறைவதால், போஸ்டர்கள் ஓட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சி கூட்டம் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு குறைவதாகவும், குப்பைகள் அதிகமாவதாகவும், மாநகராட்சிக்கு அவப்பெயர் மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறி சுவரொட்டிகள் ஒட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5000 அபராதம் விதித்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மாகநராட்சிக்குட்பட்ட சாலைகள், தெருக்களில், கடைகள், வீடுகளுக்கு குப்பை வரி வசூல் செய்தாலும், குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 11 கால்வாய்களில் குப்பை தேங்கி கழிவுநீர் கலந்து தூர்நாற்றம் வீசுகிறது. கால்வாய்களில் மரங்கள், செடிகள் வளர்ந்து புதர் போல் மண்டிக்கிடக்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் நீடிக்கிறது.

    மதுரை நகர் வீதிகளில் பாதாளச் சாக்கடை ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்து சாக்கடை நீர் கலந்த குடிநீரை மக்கள் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. குண்டும், குழியுமான சாலைகள் சீர் செய்யப்படாமல் இரு சக்கர வாகனங்கள் செல்லும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.

    மதுரை மாநகராட்சி வீதிகள் தூசி மண்டலமாககாணப்படுகிறது. மக்கள் மாசு கலந்து காற்றை சுவாசிக்கிறார்கள். சுவாச நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி தேவையான பணியாளர்களை நியமித்து துரித நடவடிக்கை எடுத்தாலே போதும், மதுரை மாநகரம் எழில் மிகு நகரமாக மாறும். சுகாதாரமான, பாதுகாப்பான, தூய்மையான மாநகராட்சியாக மதுரை மாறும். அதைவிடுத்து, போஸ்டர்கள் ஓட்டுவதால் குப்பைகள் தேங்குவதாகவும், சுகாதாரசீர்கேடுகள் ஏற்படுவதாகவும் கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எந்த வகையிலும் பொருத்தமானது அல்லது.

    மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறுித்து ஜனநாயக அமைப்பகள், அரசியல் கட்சியினர், தங்களது கருத்துகளை போஸ்டர்கள் மூலமே வெளியிட்டு வரும்நிலையில் அவர்களது ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

    September 4, 2025
    மாநிலம்

    குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு: ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

    September 4, 2025
    மாநிலம்

    அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்து நாட்டுக்கு நல்லதுதானே செய்துள்ளார் முதல்வர்: கமல்ஹாசன்

    September 4, 2025
    மாநிலம்

    வழிப்பறி கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாததால் நகையை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

    September 4, 2025
    மாநிலம்

    பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்

    September 4, 2025
    மாநிலம்

    வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறை 

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
    • சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை
    • வீக்கம் காரணங்கள்: பிரபலமான ஹார்வர்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி வீக்கத்திற்கான 3 முக்கிய காரணங்களையும் இயற்கையாகவே அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதையும் வெளிப்படுத்துகிறார்
    • வாட்ச்: ஹவாயின் கிலாவியா எரிமலை மீண்டும் வெடிக்கும்; உருகிய எரிமலைக்கு சாட்சியாக கூட்டம் சேகரிக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வர்த்தக உறவை மேம்படுத்த 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.