Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை: மதுரை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு
    மாநிலம்

    போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை: மதுரை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு

    adminBy adminApril 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை: மதுரை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர் காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமலன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கறிஞர் அறை எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    எனது வழக்கறிஞர் அறைக்கு சென்றபோது எனது பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்து படித்தபோது, காவல்துறை கண்காணிப்பாளர் மீது நான் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்ததாகவும், அந்த புகாருக்கு நான் நேரில் ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன் வந்திருந்தது தெரியவந்தது.

    இதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. நான் இதுபோன்று எந்தவித புகாரையும் கொடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அப்போது தான் எனக்கு நடந்தது போல் பல வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்களின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்திய பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு போலியான புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடந்து வருவதும் தெரியவந்தது.

    இதுபோன்று பிற வழக்கறிஞர்கள் பெயர்களை பயன்படுத்தி புகார்கள் அனுப்புவதால், மூத்த வழக்கறிஞர்கள் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் தனிப்பட்ட பகைமை உண்டாகிறது. மேலும் உயர் அதிகாரிகளின் நேரமும் வீணடிக்கப்படுகிறது. எனவே பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி தனபால் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “இந்த புகார் போல அரசு வழக்கறிஞர்களுக்கு எதிராகவும் அரசு வழக்கறிஞர்கள் பெயரை பயன்படுத்தியும் பல புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கும் இது போன்று புகார் சென்றுள்ளன. இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

    இதையடுத்து நீதிபதி, “பிறர் பெயரை பயன்படுத்தி போலி புகார் அனுப்பும் நபர்கள் மீது மதுரை மாநகர் காவல் ஆணையார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும.” என உத்தரவிட்டார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு 

    August 24, 2025
    மாநிலம்

    ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி: அரசு உடனே திரும்பப் பெற விவசாய சங்கங்கள் கோரிக்கை

    August 24, 2025
    மாநிலம்

    ‘அடக்கி வாசிங்க ப்ரோ’ – மதுரையில் விஜய்யை கண்டித்து திமுகவினர் போஸ்டர்

    August 24, 2025
    மாநிலம்

    தவெக மதுரை மாநாட்டுக்கு பிறகு புதுச்சேரி முதல்வருடன் புஸ்ஸி ஆனந்த் திடீர் சந்திப்பு

    August 24, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நாளை முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

    August 24, 2025
    மாநிலம்

    ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதியை திரும்பப் பெறுக: வைகோ

    August 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தின் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு 
    • பல குவாக்களை சாப்பிடுவது சிறுநீரகத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்; அவற்றை உங்கள் உணவில் சேர்க்க பாதுகாப்பான வழிகளை அறிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி: அரசு உடனே திரும்பப் பெற விவசாய சங்கங்கள் கோரிக்கை
    • இந்த 9 அன்றாட பொருட்களை உங்கள் குளிர்சாதன பெட்டி வாசலில் சேமிப்பதை நிறுத்துங்கள்; காரணம் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் சோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பாராட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.