Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்
    மாநிலம்

    போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்

    adminBy adminJuly 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போதை தொடர்பான காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை: ஐகோர்ட் காட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: அந்தகால திரைப்படங்களில் வன்முறை, மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகள் ஆகியவை இருக்காது. ஆனால், தற்போது இதுபோன்ற காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி தெரிவித்துள்ளது.

    மதுரை கைத்தறி நகரில் மதுபான கடை திறக்க தடை விதிக்க கோரி, மேகலா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது, நடந்த வாதம்:

    நீதிபதிகள்: அரசு ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அதிகரித்து வருகிறது. அரசின் கொள்கைகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளன. ஆன்லைன் ரம்மி விளையாட்டை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, டாஸ்மாக் கடை விவகாரத்தில் வேறு மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

    அந்தகால திரைப்படங்களில் வன்முறை, மது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தும் காட்சிகள் ஆகியவை இருக்காது. ஆனால், தற்போது இதுபோன்ற காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை. மதுக்கடையை அரசே நடத்த வேண்டிய அவசியம் என்ன? அது அரசின் பணி இல்லையே. அரசு எடுத்து நடத்துவதற்கு ஏராளமான தொழில் சார்ந்த நிறுவனங்கள் இருக்கும்போது, டாஸ்மாக் கடையை ஏன் நடத்த வேண்டும்? ஊழல், சட்டவிரோதம், குற்ற சம்பவங்களுக்கு மது காரணமாக அமைகிறது. டாஸ்மாக் மது, ஆன்லைன் ரம்மி இரண்டுமே கொலை செய்யக்கூடியவை. டாஸ்மாக் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?

    அரசு தரப்பு: மது அருந்துவதை அரசு ஒருபோதும் ஊக்குவிப்பது இல்லை.

    நீதிபதிகள்: அப்படி என்றால், எதற்காக மது விற்க வேண்டும்? மதுக்கடைகள் மூடப்படும் என்று ஒவ்வொரு கட்சியினரும் கூறுகின்றனர். ஆனால், யாரும் அதை செய்வதில்லை.

    அரசு தரப்பு: மதுக்கடைகளின் எண்ணிக்கை இனிமேல் அதிகரிக்கப்படாது. கடைகள் படிப்படியாக மூடப்படும்.

    நீதிபதிகள்: மூடப்படும் டாஸ்மாக் கடைகள் மூடியபடியே இருக்கலாமே. ஏன் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்?

    வேலைவாய்ப்பு, கல்வி, பொது நலன் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி, நல்லதை மட்டுமே செய்ய வேண்டும். மனு தொடர்பாக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரம் தள்ளிவைத்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி

    July 1, 2025
    மாநிலம்

    எம்எல்ஏ அருள் மீது வன்னியர் சங்க செயலாளர் குற்றச்சாட்டு

    July 1, 2025
    மாநிலம்

    சென்னையில் மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: வழித்தடங்கள், சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

    July 1, 2025
    மாநிலம்

    சட்டம் ஒழுங்கை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுங்கள்: காவல் உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    July 1, 2025
    மாநிலம்

    லாக்கப் மரணங்கள்: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

    July 1, 2025
    மாநிலம்

    டாஸ்மாக் கடைகளை அரசு நடத்த வேண்டிய அவசியம் என்ன? – ஐகோர்ட் கேள்வி

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேர் கைது
    • விசாரணைக்கு அழைத்து சென்றவரை தாக்கியது ஏன்? – மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கில் நீதிபதிகள் கேள்வி
    • எம்எல்ஏ அருள் மீது வன்னியர் சங்க செயலாளர் குற்றச்சாட்டு
    • அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பும் இந்தியா: நிர்மலா சீதாராமன் தகவல்
    • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 73,000 பேர் விண்ணப்பம்: தரவரிசை பட்டியல் சில தினங்களில் வெளியீடு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.