Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
    மாநிலம்

    போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

    adminBy adminSeptember 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: ​போக்சோ வழக்​கில் புகார் அளிக்க கால​வரம்பு நிர்​ண​யம் செய்​ய​வில்​லை. பல சந்​தர்ப்​பங்​களில் குற்​ற​வாளி குடும்ப உறுப்​பின​ராகவோ அல்​லது உறவினருக்கு தெரிந்த நபராகவோ இருப்​ப​தால் புகார் அளிக்க தயங்​கு​கின்​றனர் என்று உயர் நீதிமன்றம் தெரி​வித்​துள்​ளது. தென்​காசி​யைச் சேர்ந்​தவர் நீல​கண்​டன்.

    ஒரு பெண் மற்​றும் அவரது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்​த​தாக இவர் மீது போலீ​ஸார் 2 வழக்​கு​கள் பதிவு செய்​தனர். இந்த வழக்​கு​களை ரத்து செய்​யக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நீல​கண்​டன் மனு தாக்​கல் செய்​தார். அதில், “உரிமை​யியல் பிரச்​சினை​யில் என் மீது பாலியல் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே, இரு வழக்​கு​களை​யும் ரத்து செய்​ய​வேண்​டும்” என்று தெரி​வித்​திருந்​தார்.

    இந்த மனுவை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார். மனு​தா​ரர் தரப்​பில், “2023-ல் நடந்​த​தாகக் கூறப்​படும் சம்​பவத்​துக்கு 2025-ல் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தாமத​மாக வழக்​குப்பதிவு செய்​யப்​பட்​டதற்​கான விளக்​கம் ஏற்​கும்​படி​யாக இல்​லை. புகார் அளித்த சிறுமிக்கு 19 வயதாகிறது. இதனால், போக்சோ சட்​டத்​தில் வழக்​குப் பதிவு செய்ய முடி​யாது” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

    பின்​னர் நீதிபதி தனது உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: போக்சோ வழக்​கில் புகார் அளிப்​ப​தற்கு கால​வரம்பு நிர்​ண​யிக்​க​வில்​லை. பல சந்​தர்ப்​பங்​களில் குற்​ற​வாளி குடும்ப உறுப்​பினர், உறவினர் அல்​லது தெரிந்த நபராக இருப்​ப​தால், பெரும்​பாலும் குழந்​தைகளால் புகார் அளிக்க முடிய​வில்​லை. பாலியல் வழக்​கு​களில் பாதிக்​கப்​பட்​ட​வர் வாழ்க்கை முழு​வதும் பாலியல் தொல்​லை​யின் அதிர்ச்​சியை சுமக்க நேரிடு​கிறது.

    புகார் அளிக்க துணிகின்றனர்: அந்த அதிர்ச்​சி​யில் இருந்து மீள்​வதற்​காக பாதிக்​கப்​பட்ட சிறுமிகள் பலர் மேஜ​ரானதும், தாங்​கள் குழந்​தைகளாக இருந்​த​போது சந்​தித்த பாலியல் துன்​புறுத்​தல் குறித்து புகார் அளிக்​கத் துணி​கின்​றனர். வயதுக்கு வந்த பெண், தான் மைன​ராக இருந்​த​போது தனக்கு எதி​ராக நடந்த பாலியல் வன்​முறை​களுக்​காக போக்சோ சட்​டத்​தில் புகார் அளிப்​பதை தடை செய்ய போக்சோ சட்​டத்​தில் எந்த விதி​யும் இல்​லை.

    இந்த வழக்​கில் மனு​தா​ரருக்கு எதி​ரான பாலியல் குற்​றத்தை நிரூபிக்க போதிய ஆதா​ரங்​கள் நீதி​மன்​றத்​தின் முன் வைக்​கப்​பட்​டுள்​ளன. எனவே, வழக்கை ரத்து செய்ய விரும்​ப​வில்​லை. மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது. அதே நேரத்​தில் புகாரை போலீ​ஸார் சரி​யாக விசா​ரிக்​க​வில்​லை. இதனால், இரு வழக்​கு​களும் தென்​காசி சிபிசிஐடி வி​சா​ரணைக்​கு மாற்​றப்​படு​கிறது. இவ்​வாறு நீதிப​தி உத்​தர​விட்​டுள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    September 22, 2025
    மாநிலம்

    ஆளுநர் ரவி, அண்ணாமலை வரிசையில் விஜய்யும் அவதூறு அரசியல் செய்கிறார்: ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்

    September 22, 2025
    மாநிலம்

    அதிமுக பிரச்சாரத்துக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

    September 22, 2025
    மாநிலம்

    காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வு கிணறுகள்: தடுத்து நிறுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

    September 22, 2025
    மாநிலம்

    விஜய் கூறியது தனிப்பட்ட கருத்து: பழனிசாமி விமர்சனம்

    September 22, 2025
    மாநிலம்

    நிபந்தனைகளை மீறியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்கு

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னையில் கடற்கரை, கோயில் குளங்களில் ஏராளமானோர் தர்ப்பணம்
    • தாதா சாகேப் விருதை மலையாள சினிமாவுக்கு அர்ப்பணித்தார் மோகன்லால்!
    • நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
    • புதிய உச்சம் எட்டிய தங்கம் விலை: பவுனுக்கு ரூ.560 உயர்வு
    • மூளையை மாற்றியமைக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும்க்கூடிய 3 பயிற்சிகள் – இந்தியாவின் காலங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.