Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பொன்முடி, செந்தில் பாலாஜி விலகல்: இபிஎஸ் விமர்சனத்துக்கு திமுக ரியாக்‌ஷன் என்ன?
    மாநிலம்

    பொன்முடி, செந்தில் பாலாஜி விலகல்: இபிஎஸ் விமர்சனத்துக்கு திமுக ரியாக்‌ஷன் என்ன?

    adminBy adminApril 28, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பொன்முடி, செந்தில் பாலாஜி விலகல்: இபிஎஸ் விமர்சனத்துக்கு திமுக ரியாக்‌ஷன் என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: “செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேச பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்கான விதைகள் துளிர்விடத் துவங்கிவிட்டன” எனச் சொல்லியிருக்கிறார். ‘தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை’ என்ற அடிப்படைக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு.

    2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத் துறை, வருமானவரித் துறை, சிபிஐ நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்து கூட்டணிக்குச் சம்மதித்த பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு எந்தத் தேர்தலிலாவது வெற்றி பெற்றிருக்கிறாரா?

    2017 ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2019-ல் நடந்த 22 சட்டசபைத் தொகுதிகளின் இடைத் தேர்தல், 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2022-ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு இடைத் தேர்தல் எனத் தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்தான், ‘ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன’ என ஜோசியம் சொல்கிறார்!

    தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் பழனிசாமி. 2025 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் தோற்று, ‘11-வது தோல்வி பழனிசாமி’ என்ற அவப்பெயரைத் துடைக்கத் தேர்தலில் போட்டியிடாமல் கோழை போலக் களத்தைவிட்டே ஓடியவர்தான் பழனிசாமி. தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் ‘தோல்வி’சாமி அதிமுகவைப் பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

    செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேசப் பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா? வளம் கொழிக்கும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தைக் கைப்பற்றுவதிலும் தக்கவைப்பதிலும் நடந்த மோதலில், உடுமலை ராதாகிருஷ்ணுக்காக மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார்.

    திருப்பூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், முதல்வர் பழனிசாமிக்குப் பக்கத்தில் யார் அமர்வது? என்ற ‘நாற்காலிச் சண்டை’யில் ஒரு நாற்காலியை இருவரும் பிடித்துக் கொண்டு உடுமலை ராதாகிருஷ்ணனும் பொள்ளாச்சி ஜெயராமனும் சண்டை போட்டது தமிழ்நாடெங்கும் நாறியது. அந்த உடுமலை ராதாகிருஷ்ணனைத் தன் பக்கத்தில் அமர வைத்ததோடு அரசு கேபிள் டிவி தலைவர் பதவியையும் பழனிசாமி வழங்கினார்.

    “தன்னுடைய துறையில் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட விஷயம்கூட எனக்குத் தெரிவிக்கப்படவில்லை” என மணிகண்டன் சொன்ன அன்றுதான், அவரின் அமைச்சர் பதவியைப் பறித்தார் பழனிசாமி. “மேடையில் நாற்காலிக்குச் சண்டைபோட்ட, கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட, உடுமலை ராதாகிருஷ்ணனுக்குக் கேபிள் டிவி சேர்மன் பதவி. அதை எதிர்த்து வெறும் கருத்து மட்டும் சொன்ன மணிகண்டனுக்குப் பதவிப் பறிப்பா?” என அதிமுகவில் நடந்த குடுமிப்பிடிச் சண்டையை எல்லாம் வசதியாக மறந்துவிட்டீர்களா பழனிசாமி.

    தெர்மகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம். முதல்வர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் திமுக அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?

    “பழனிசாமி ஆட்சி ஊழல் நிறைந்தது” என்று சொல்லிப் போராட்டத்துக்குத் தேதி குறித்த 11 எம்எல்ஏக்களை வைத்து இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்வர் அளித்த பழனிசாமி எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர்.

    எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் எம்எல்ஏ பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்தப் பழனிசாமி திமுக அமைச்சரவையைப் பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது,” என்று அவர் கூறியுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்துக்கு திமுக வேண்டாம் என்பதே பாஜக-அதிமுக கூட்டணியின் நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்

    June 29, 2025
    மாநிலம்

    பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

    June 29, 2025
    மாநிலம்

    அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்

    June 29, 2025
    மாநிலம்

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், சூளைமேடு அஞ்சுகம் பள்ளிகளில் ரூ.14 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    June 28, 2025
    மாநிலம்

    விபத்தில்லா நிலையை உருவாக்க வாகனத்தின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

    June 28, 2025
    மாநிலம்

    கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்துக்கு திமுக வேண்டாம் என்பதே பாஜக-அதிமுக கூட்டணியின் நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
    • பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
    • அமித் ஷா கருத்தால் அதிமுக – பாஜகவில் சலசலப்பு: கூட்டணியில் பங்கா, ஆட்சியில் பங்கா என தொடரும் குழப்பம்
    • பிராடாவின் சர்ச்சைக்குரிய கோலபுரி சாப்பல்: கலாச்சார ஒதுக்கீடு அல்லது உத்வேகம்? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நா.முத்துக்குமாரின் கவிதையை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.