Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத போர்டு, பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு 
    மாநிலம்

    பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத போர்டு, பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு 

    adminBy adminAugust 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத போர்டு, பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு 
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மதுரை: தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் அனு​மதி பெறாமல் வைக்​கப்​பட்​டுள்ள பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​களை அகற்ற உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. நாகை மாவட்​டத்தை சேர்ந்த அருளரசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: அரசி​யல் கட்​சிகள் சார்​பில் ஏராள​மான பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​கள், அலங்​கார வளைவு​கள் வைக்​கப்​படு​கின்​றன. எந்த அனு​ம​தி​யும் பெறாமல் வைக்​கப்​படும் போர்​டு​களால், போக்​கு​வரத்து நெரிசல் உள்​ளிட்ட பிரச்​சினை​கள் ஏற்​படு​கின்​றன.

    பேனர்​கள், அலங்​கார வளைவு​களை அகற்ற வேண்​டியது அதி​காரி​களின் கடமை​யாகும். ஆனால், அதி​காரி​கள் உரிய நடவடிக்கை எடுப்​ப​தில்​லை. எனவே, அனு​மதி பெறாமல் பொதுப்​பாதைகள், நடை​பாதைகள் மற்​றும் சாலை​யோரங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள பிளக்ஸ் போர்​டு​கள் உள்​ளிட்​ட​வற்றை அகற்​ற​வும், அவற்றை வைத்​தவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

    இந்த மனு எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அரசு தரப்​பில், “பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​கள் வைப்​பதை முறைப்​படுத்​து​வது தொடர்​பாக உயர் நீதி​மன்​றம் ஏராள​மான உத்​தர​வு​களை பிறப்​பித்​துள்​ளது. அந்த உத்​தர​வு​களின் அடிப்​படை​யில் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்” எனக் கூறப்​பட்​டது.

    இதையடுத்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: அனு​மதி பெறாத பிளக்ஸ் போர்​டு, பேனர்​கள் விவ​காரத்​தில் ஏற்​கெனவே உயர் நீதி​மன்ற உத்​தர​வு​கள் உள்​ளன. அப்​படி​யிருக்​கும்​போது நீதி​மன்​றம் மீண்​டும் மீண்​டும் உத்​தரவு பிறப்​பிக்க முடி​யாது. அதி​காரி​கள் அவர்​களின் கடமையை செய்ய வேண்​டும் என்றே நீதி​மன்​றம் விரும்​பு​கிறது.

    நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்த பிறகு அதி​காரி​கள் பணியை செய்​தால், அவர்​கள் ஏன் ஊதி​யம் பெறுகிறார்​கள்? அதி​காரி​கள் தங்​களின் அணுகு​முறையை மாற்​றிக் கொள்ள வேண்​டும்.

    அதி​காரி​கள் மீது நடவடிக்கை: பொது இடங்​களில் விதி​களை மீறி அச்​சுறுத்​தும் வகை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள பேனர்​கள், அலங்​கார வளைவு​கள், பிளக்ஸ் போர்​டு​களை அகற்ற காவல் துறை, வரு​வாய்த் துறை, உள்​ளாட்சி அமைப்​பு​கள், நகராட்​சி, மாநகராட்சி அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும். சட்​ட​விரோத பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​கள் விழுந்து அசம்​பா​விதம் நிகழ்ந்தால், சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

    மக்​கள் வரிப்​பணத்​தில் இருந்து ஊதி​யம் பெறும் அரசு அலு​வலர்​கள், தங்​கள் கடமையை முறை​யாக, பொறுப்​புடன் செய்ய வேண்டியது அவசி​யம். எனவே, மக்​களுக்கு அச்​சுறுத்​தல், ஆபத்தை ஏற்​படுத்​தும் வகை​யில் அமைக்​கப்​பட்​டிருக்​கும் பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​கள், அலங்​கார வளைவு​களை அகற்ற உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும். அது தொடர்​பாக நீதி​மன்றத்​தில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும். விசா​ரணை 2 வாரங்​களுக்கு தள்ளி வைக்​கப்​படுகிறது. இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் தெரி​வித்​துள்​ளனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்டு சிகிச்சை அளிக்க கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு படகு ஆம்புலன்ஸ் சேவை

    August 13, 2025
    மாநிலம்

    ‘வாக்குத் திருட்டு’ மற்றும் பிஹார் SIR-க்கு கண்டனம்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

    August 13, 2025
    மாநிலம்

    மீன்வளத் துறை சார்பில் மீன் இறங்குதளங்கள் உட்பட ரூ.177 கோடியில் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

    August 13, 2025
    மாநிலம்

    2 தடங்களில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம்: அறிக்கை தயாரிக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

    August 13, 2025
    மாநிலம்

    சுதந்திர தின தொடர் விடுமுறை: 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு

    August 13, 2025
    மாநிலம்

    பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடையும்: நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து மீட்டு சிகிச்சை அளிக்க கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு படகு ஆம்புலன்ஸ் சேவை
    • ஹார்வர்ட் டாக்டர் 5 உணவுகள் ஆரம்பகால நினைவக இழப்பு மற்றும் டிமென்ஷியாவுடன் இணைக்கப்படலாம் என்பதை வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • “இது டீசர் மட்டுமே… இனிதான் மெ​யின் பிக்​சர்!” – ‘வாக்கு திருட்டு’ விவகாரத்தில் ராகுல் காந்தி தகவல்
    • இந்தியா, பாகிஸ்தான் உடனான எங்கள் உறவு நன்றாக உள்ளது: அமெரிக்கா கருத்து
    • ‘வாக்குத் திருட்டு’ மற்றும் பிஹார் SIR-க்கு கண்டனம்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.