Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பொதுமக்கள் கேள்வி கேட்டால் பொய் வழக்கு பதிவு செய்வதா? – தமிழக அரசுக்கு பாஜக கண்​டனம்
    மாநிலம்

    பொதுமக்கள் கேள்வி கேட்டால் பொய் வழக்கு பதிவு செய்வதா? – தமிழக அரசுக்கு பாஜக கண்​டனம்

    adminBy adminMay 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பொதுமக்கள் கேள்வி கேட்டால் பொய் வழக்கு பதிவு செய்வதா? – தமிழக அரசுக்கு பாஜக கண்​டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் முறைகேடுகளை பொதுமக்கள் கேள்வி கேட்டால் அவர்கள் மீதே பொய் வழக்கு பதிவு செய்வதா? என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

    பாஜக மாநில செயலாளர் அஷ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களில் பயனாளிகளை தேர்வு செய்கிற நோடல் ஏஜென்சியாக மாநில அரசு உள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகளும், ஊழல்களும் தமிழகத்தில் நடக்கிறது. குறிப்பாக, வீடு ஒதுக்கீடு செய்வதற்கு லஞ்சம் வாங்குவதும், மேலும் சார்பு அடிப்படையில் வீடுகளை ஒதுக்குவதும் தமிழகம் முழுவதும் நடந்தேறி வருகிறது.

    குழாய் மூலமாக குடிநீர் வழங்குவதற்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை லஞ்சம் பெறப்படுவதாக குற்றச்சாட்டு பல பகுதிகளில் எழுந்துவருகிறது. இந்நிலையில், இந்த ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளித்தால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளிக்கிற பொது மக்கள் மீதே பொய் வழக்குகள் போடுவதாக மிரட்டி பயமுறுத்தி வருகிறது திராவிட மாடல் அரசு.

    குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஊராட்சியிலும், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், ஜல்ஜீவன் திட்டத்தில் நடக்கும் ஊழலை பொதுமக்கள் கேள்விக்கேட்டால், அவர்கள் மீது பொய் வழக்கு போடுவோம் என காவல்துறையை வைத்து மிரட்டி வருகிற இந்த போக்கு ஜனநாயகத்துக்கு எதிரானது. தமிழக அரசு உடனடியாக அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி: அதிமுக ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கைது

    July 6, 2025
    மாநிலம்

    பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாது​காப்பு: திருமாவளவன் வரவேற்பு

    July 6, 2025
    மாநிலம்

    மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு: முதல்வர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி

    July 6, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஜூலை 15-ல் தொடங்கி வைக்கிறார்

    July 6, 2025
    மாநிலம்

    என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: ராமதாஸ்

    July 6, 2025
    மாநிலம்

    அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை

    July 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி: அதிமுக ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் கைது
    • ஆப்டிகல் மாயை: “வெவ்வேறு” டைனோசரை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அமர்நாத் யாத்திரையில் பேருந்துகள் மோதல்: 36 பக்தர்கள் காயம்
    • சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்: விழாக்கோலம் பூண்டது திருச்செந்தூர்
    • பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாது​காப்பு: திருமாவளவன் வரவேற்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.