Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, September 6
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பொதுச் செயலாளராக தேர்வு: இபிஎஸ்-க்கு எதிரான வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு
    மாநிலம்

    பொதுச் செயலாளராக தேர்வு: இபிஎஸ்-க்கு எதிரான வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminSeptember 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பொதுச் செயலாளராக தேர்வு: இபிஎஸ்-க்கு எதிரான வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்வு செய்​யப்​பட்​டது சட்​ட​விரோதம் என்று அறிவிக்​கு​மாறு தொடரப்​பட்ட வழக்கை உயர் நீதி​மன்​றம் நிராகரித்​துள்​ளது.

    2022 ஜூலை 11-ம் தேதி நடந்த அதி​முக பொதுக்​குழு தீர்​மானங்​களை எதிர்த்​தும், பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்வு செய்​யப்​பட்​டது செல்​லாது என்று அறிவிக்க கோரி​யும், திண்​டுக்​கல் மாவட்​டத்தை சேர்ந்த சூரியமூர்த்​தி, சென்னை பெருநகர உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

    இந்த வழக்கை நிராகரிக்க கோரி பழனி​சாமி தாக்​கல் செய்த மனுவை உரிமை​யியல் நீதி​மன்​றம் ஏற்க மறுத்​து, கடந்த ஜூலை மாதம் தள்​ளு​படி செய்​தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பழனி​சாமி மேல்​முறை​யீடு செய்​தார்.

    நீதிபதி பி.பி.​பாலாஜி முன்​னிலை​யில் இந்த வழக்கு விசா​ரணை நடந்​தது. பழனி​சாமி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய​நா​ராயணன், “வழக்கு தொடர்ந்​துள்ள சூரியமூர்த்தி அதி​முக உறுப்​பினரே இல்லை என்​ப​தால், உட்​கட்சி விவ​காரங்​கள் தொடர்​பாக வழக்கு தொடர அவருக்கு உரிமை இல்​லை. இதே கோரிக்கை தொடர்​பான வழக்​கு​களை ஏற்​கெனவே உயர் நீதி​மன்​ற​மும், உச்ச நீதி​மன்​ற​மும் விசா​ரித்து உத்​தர​விட்​டுள்​ளது. மீண்​டும் அதே கோரிக்​கையை மனு​தா​ரர் எழுப்​பி​யுள்​ளார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை உரிமை​யியல் நீதி​மன்​றம் சரிவர கவனத்​தில் கொள்​ளாமல் தள்​ளு​படி செய்​துள்​ளது” என்​றார்.

    சூரியமூர்த்தி தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம்​.வேல்​முரு​கன், “சூரியமூர்த்தி ரூ.10 செலுத்தி உறுப்​பினர் அட்​டையை புதுப்​பிக்​க​வில்லை என்​ப​தற்​காக, அவர் உறுப்​பினரே இல்லை என்று கூற​முடி​யாது. கட்சி விதி​களின்​படி அவர் அடிப்​படை உறுப்​பின​ராக நீடிக்​கிறார். அதி​முக அடிப்​படை உறுப்​பினர்​களால்​தான் பொதுச் செய​லா​ளர் தேர்ந்​தெடுக்​கப்பட வேண்​டும் என்ற விதியை இஷ்டம்​போல மாற்ற முடி​யாது. கட்​சி​யின் அடிப்​படை விதி​களுக்​கு புறம்​பாக பொதுச் செய​லா​ளர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​தா​லும், பொதுக்​குழு தீர்​மானங்​களும் கட்சி விதி​களுக்கு அப்​பாற்​பட்டு இருப்​ப​தா​லும் அவற்றை செல்​லாது என அறிவிக்க கோரி வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது” என்​றார்.

    இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி பாலாஜி நேற்று பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த மேல்​முறை​யீட்டு வழக்​கில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தரப்​பில் முன்​வைக்​கப்​பட்​டுள்ள வாதங்​கள் ஏற்​புடைய​தாக இருக்​கின்​றன. எனவே, சூரியமூர்த்​தி​யின் வழக்கை நிராகரிக்​கு​மாறு அவர் தாக்​கல் செய்த மனுவை தள்​ளு​படி செய்து உரிமை​யியல் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​கிறேன். அதே​போல, அதி​முக பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்வு செய்​யப்​பட்​டதை எதிர்த்து சூரியமூர்​த்​தி உரிமையியல்​ நீதிமன்​றத்​தில்​ தொடர்​ந்​துள்​ள வழக்​கையும்​ நி​ராகரித்​து உத்​தரவிடுகிறேன்​. இவ்​வாறு உத்​தரவில்​ நீதிபதி தெரிவித்​துள்​ளார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ராமதாஸின் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கப் போவதில்லை: அன்புமணி திட்டவட்டம்

    September 6, 2025
    மாநிலம்

    சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 50 தொகுதிகளை கேட்கும் பாஜக: 40-ஐ கொடுத்து 20-ஐ தேர்ந்தெடுக்க சொல்லும் அதிமுக

    September 6, 2025
    மாநிலம்

    சொத்து குவிப்பு வழக்கு: மறுவிசாரணைக்கு அமைச்சர் துரைமுருகன் செப்.15-க்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்

    September 6, 2025
    மாநிலம்

    396 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர் தினத்தையொட்டி உதயநிதி வழங்கினார்

    September 6, 2025
    மாநிலம்

    தமிழகத்தில் நல்லிணக்கம், சகோதரத்துவம் போற்றுவோம்: முதல்வர், தலைவர்கள் மீலாது நபி வாழ்த்து

    September 6, 2025
    மாநிலம்

    திருச்சியில் செப்டம்பர் 13-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார் விஜய்?

    September 6, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ராமதாஸின் எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கப் போவதில்லை: அன்புமணி திட்டவட்டம்
    • ஒரேநாளில் பத்திரப் பதிவு மூலம் ரூ.274 கோடி வருவாய்: அமைச்சர் மூர்த்தி தகவல்
    • சிறுநீரக கற்களுக்கான வீட்டு வைத்தியம் மற்றும் மருத்துவ சிகிச்சை: என்ன வேலை? – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹாக்கியில் இந்தியா வெற்றி!
    • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 50 தொகுதிகளை கேட்கும் பாஜக: 40-ஐ கொடுத்து 20-ஐ தேர்ந்தெடுக்க சொல்லும் அதிமுக

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.