Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறியதாக சர்ச்சை!
    மாநிலம்

    பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறியதாக சர்ச்சை!

    adminBy adminJuly 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறியதாக சர்ச்சை!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கோவை பேரூரில் பழமை வாய்ந்த பட்டீசுவரர் கோயில் உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். பின்னர், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு அடைக்கப்படும். இரவு நடை அடைக்கப்பட்ட பிறகு மறுநாள் திறக்கப்படும்.

    இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஆகம நடைமுறைகளை மீறி, பேரூர் பட்டீசுவரர் கோயிலின் நடை இரவில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கோயிலுக்கு வந்த சிவனடியார் ஒருவர் வீடியோ வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இவ்விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது, ”வழக்கமாக தினமும் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப் படும். அதற்கு முன்னதாக 8.30 மணிக்கு சுவாமியின் சந்நதி முன்பு திரை மூடப்படும். பக்தர்கள் யாராவது வந்தால் திரைச்சீலை திறக்கப்படாது. அர்ச்சகரிடம் திருநீறு வாங்கிச் செல்லலாம். கடந்த 19ம் தேதி இரவு இக்கோயிலுக்கு சிறப்புக் காவல் படை காவல் கண்காணிப்பாளர் ஒருவர் தரிசனத்துக்கு வந்தார்.

    அவர் கோவை மாவட்டத்திலும் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் வரும் போது சுவாமியின் சந்நதியில் திரைச் சீலை மூடப்பட்டு இருந்தது. அவர் அர்ச்சகரிடம் திருநீறு வாங்கிச் சென்று விட்டார். திரையை அகற்றி சுவாமியை அவர் தரிசனம் செய்யவில்லை. அதற்கு அனுமதியும் வழங்கவில்லை. அதனால், ஆகம விதிகள் மீறப்பட்டதாக கூறுவது தவறானது” என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கண்டனம்

    July 23, 2025
    மாநிலம்

    திமுக கூட்டணியில் விசிக வீழ்ச்சி அடையவில்லை: பழனிசாமிக்கு திருமாவளவன் பதில்

    July 23, 2025
    மாநிலம்

    பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாக தேர் செல்ல உயர் நீதிமன்றம் உத்தரவு

    July 23, 2025
    மாநிலம்

    மதுரை ஆதீனத்தின் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரி காவல் துறை மனு!

    July 23, 2025
    மாநிலம்

    “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கிறது அமமுக” – தினகரன் உறுதி

    July 23, 2025
    மாநிலம்

    பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: இந்து முன்னணி

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஆகாஷ் பாஸ்கரனுக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் கண்டனம்
    • உங்கள் வீடு மற்றும் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க மிகவும் பாதுகாப்பு நாய் இனங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • திமுக கூட்டணியில் விசிக வீழ்ச்சி அடையவில்லை: பழனிசாமிக்கு திருமாவளவன் பதில்
    • 10 அன்றாட உணவுகள் மற்ற நாடுகளில் தடைசெய்யப்பட்ட நீங்கள் இன்னும் சாப்பிடலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டெஸ்ட்டில் முதல் அரை சதம் பதிவு செய்த சாய் சுதர்ஷன்; காயத்தால் வெளியேறிய பந்த் – ENG vs IND

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.