Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பேசின்பாலம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் ஒப்பந்தம் முடிந்தது: பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த இடமில்லை
    மாநிலம்

    பேசின்பாலம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் ஒப்பந்தம் முடிந்தது: பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த இடமில்லை

    adminBy adminJune 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பேசின்பாலம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் ஒப்பந்தம் முடிந்தது: பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த இடமில்லை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பேசின் பாலம் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. அங்கு பராமரிப்பு ஒப்பந்தம்முடிந்ததால், பயணிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு விரைவில் தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது.

    சென்னை சென்ட்ரலை அடுத்து அமைந்துள்ள முக்கியமான நிலையம் பேசின்பாலம் ரயில் நிலையம். இந்த நிலையத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என இரு வழித்தடங்களாக ரயில்கள் பிரிந்து செல்லும். இங்குள்ள ரயில் நிலையத்தில் தினசரி 10,000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

    இதில், 2,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் இருசக்கர வாகனங்களை நிலைய பார்க்கிங்-ல் நிறுத்திவிட்டு, ரயில்களில் பயணம் செய்வது வழக்கம். இந்த நிலையத்தில் இருந்த வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்கும் புதிய ஒப்பந்ததாரை தேர்வுசெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், இந்த வாகன நிறுத்தப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததால். வாகனங்களை நிறுத்த வழியின்றி பயணிகள் அவதிப்பட்டனர்.

    இதற்கிடையில், பேசின்பாலம் ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் வசதியை செயல்படுத்த, ஒரு ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு நவ.25-ம் தேதி கொடுக்கப்பட்டது. இதனால், இந்த ரயில் நிலையத்தில் பார்க்கிங் வசதியை பயன்படுத்தும் பயணிகள் அடைந்தனர். இந்நிலையில், பேசின்பாலம் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் மீண்டும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    பேசின்பாலம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.

    இங்கு உள்ளபார்க்கிங்-ல் பராமரிப்பு ஒப்பந்தம் கடந்த மாதம் 24-ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து, புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரயில்வே தரப்பில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், இங்கு வாகன நிறுத்துவதற்கான ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதால், இங்கு வாகனத்தை நிறுத்துவது உரிமையாளரின் சொந்த பொறுப்பு. வாகனங்களின் பாதுகாப்புக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து பொன்னேரியை சேர்ந்த ரயில் பயணி பிரதாப் கூறியதாவது: நான் பொன்னேரியில் இருந்து பேசின்பாலம் ரயில் நிலையம் வந்து, அங்கு கட்டண பார்க்கிங்-ல் நிறுத்திய வாகனத்தை எடுத்துகொண்டு அலுவகத்துக்கு சென்று வருகிறேன். 4 ஆண்டுகள் தாமதத்துக்குபிறகு, கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் வாகன நிறுத்தமிட ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் ஆறு மாதத்தில் முடிந்தது வேதனை தருகிறது.

    ஏனெனில், தற்போது பார்க்கிங் இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினால், திருடு போகும் வாய்ப்பு உள்ளது. மேலும், ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்றால், ஆர்.பி.எஃப் போலீஸார் பறிமுதல் செய்து, அபராதம் வசூலிக்கும் நிலை உள்ளது. எனவே, விரைவில் பார்க்கிங் வசதி பராமரிப்பு ஒப்பந்தம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த நிலையத்தில் பார்க்கிங் ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில், புதிய நபர்களை தேர்வு செய்து, ஒப்பந்தம் வழங்கப்படும். அதுவரை, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன பார்க்கிங்கை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தவெக கட்சிக் கொடியில் உள்ள வண்ணங்களை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

    July 16, 2025
    மாநிலம்

    முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் மனு: தீர்ப்பை தள்ளிவைத்தது நீதிமன்றம்

    July 16, 2025
    மாநிலம்

    ஆவின் வேலை மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி ஆஜர்: விசாரணை ஆக.13-க்கு ஒத்திவைப்பு

    July 16, 2025
    மாநிலம்

    “எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித் ஷா சொன்னார்” – இபிஎஸ் மீண்டும் விளக்கம்

    July 16, 2025
    மாநிலம்

    கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் என்னென்ன?

    July 16, 2025
    மாநிலம்

    ஆறாவது விரல் அரசுப் பணிக்கு தடையல்ல: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தவெக கட்சிக் கொடியில் உள்ள வண்ணங்களை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
    • இந்த 15 அறிகுறிகள் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் சிறந்த ஆரோக்கியத்தைக் குறிக்கின்றன! – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வரலாற்று சிறப்புமிக்க 18-நாள் ஆக்சியம் -4 மிஷன் குறித்த ஐ.எஸ்.எஸ்-க்கு சுபன்ஷு சுக்லாவை அனுப்ப இஸ்ரோ எவ்வளவு செலவு செய்தது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அன்று ‘நீட்’ தேர்வில் தோல்வி; இன்று ரூ.72 லட்சம் சம்பளத்தில் ரோல்ஸ் ராய்ஸில் வேலை: ஓர் உத்வேகக் கதை!
    • அரசு உதவிபெறும் நகர்ப்புற பள்ளிகளில் தள்ளிப்போகும் காலை உணவு திட்டத்தால் ஏமாற்றம்!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.