Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை
    மாநிலம்

    பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

    adminBy adminJuly 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளை தானாக தத்தெடுத்தால் நடவடிக்கை: தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: பெற்​றோ​ரால் கைவிடப்​படும், ஒப்​படைக்​கப்​படும் குழந்​தைகளை தானாக தத்​தெடுத்​தால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தேசிய மருத்​துவ ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

    இதுதொடர்​பாக தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்​எம்​சி) வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில் கூறி​யிருப்​ப​தாவது: மருத்​து​வ​மனை​களில் கைவிடப்​பட்ட நிலை​யில் கண்​டறியப்​படும் குழந்​தைகள், மற்​றவர்​களால் கொண்டு வந்து ஒப்​படைக்​கப்​படும் குழந்​தைகள் குறித்து சட்​ட​வி​தி​களின்​படி தகவல்​கள் அளிக்​கப்​படு​வ​தில்​லை.

    அந்த குழந்​தைகளை உரிய விதி​களுக்கு உட்​ப​டா​மல் தத்​தெடுக்​கும் சம்​பவங்​கள் நடக்​கிறது என்று மத்​திய பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்டு அமைச்​சகம் சமீபத்​தில் தேசிய மருத்​துவ ஆணை​யத்​துக்கு கடிதம் எழு​தி​யிருந்​தது.

    எந்த ஒரு தனி நபருக்​கோ, நிறு​வனத்​துக்​கோ, மருத்​து​வ​மனைக்கோ கைவிடப்​பட்ட நிலை​யில் ஆதர​வற்ற குழந்​தைகள் இருப்​பது தெரிய​வந்​தால், அதுகுறித்து குழந்​தைகள் உதவி மையம் (1098), குழந்​தைகள் நலக்​குழு, மாவட்ட குழந்​தைகள் பாது​காப்பு பிரிவு, காவல் துறைக்கு உடனடி​யாக தகவல் தெரி​விப்​பது கட்​டா​யம் ஆகும்.

    அதே​போல், தங்​களது குழந்​தையை வளர்க்க இயலாமல், ஒப்​படைக்க பெற்​றோர் முன்​வந்​தால், அதுகுறித்து மருத்​து​வமனை நிர்​வாகம் குழந்​தைகள் நலகுழு​வுக்கு தகவலளிக்க வேண்​டும். குழந்​தைகளை முறைப்​படி தத்​தெடுக்க உரிய பதிவு செய்​வது அவசி​யம் ஆகும். ஆவணங்​களின்​படி​யும், பதிவு மூப்பு அடிப்​படை​யிலும் அவர்​களுக்கு குழந்​தைகள் தத்து கொடுக்​கப்​படும். இந்த விதி​களை மீறி தன்​னிச்​சை​யாக குழந்​தைகளை தத்​தெடுப்​பது சட்​டப்​படி குற்​றம் ஆகும்.

    தீவிர குற்றச் செயல்: பணத்​துக்​கோ, பொருளுக்கோ குழந்​தைகளை விற்​பனை செய்​வதும் தீவிர குற்ற செய​லாக கருதப்​படு​கிறது. இந்த குற்றச் செயல்​களில் ஈடு​பட்​டாலும், கைவிடப்​பட்ட குழந்​தைகள் குறித்து தகவலளிக்​கா​விட்​டாலும் உரிய சட்​ட​வி​தி​களின்​படி நடவடிக்கை எடுக்க முடி​யும். அதனால், அதனை கருத்​தில் கொண்டு அனைத்து மருத்​து​வ​மனை​களும், இதுதொடர்​பான பயிற்​சிகளை​யும், வழி​காட்​டு​தல்​களை​யும் தங்​களது ஊழியர்​களுக்கு வழங்க வேண்​டும்.

    குறிப்​பாக, மகப்​பேறு மருத்​துவ பிரி​வில் உள்​ளவர்​களுக்கு அவசி​யம் விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். இதுதொடர்​பான விழிப்​புணர்வு வாசகங்​கள் அடங்​கிய சுவரொட்​டிகள், பதாகைகளை மருத்​து​வ​மனை வளாகத்​தில் விளம்​பரப்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    மதிமுகவுக்கு 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும்: திமுகவுக்கு துரை வைகோ கோரிக்கை

    July 12, 2025
    மாநிலம்

    மாநிலத்​தின் முதல் பிரஜை​ ஆளுநர்​தான்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

    July 12, 2025
    மாநிலம்

    2026-ல் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி: விழுப்புரம் பிரச்சாரத்தில் பழனிசாமி நம்பிக்கை

    July 12, 2025
    மாநிலம்

    எனது வீட்டில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி: பாமக நிறுவனர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல்

    July 12, 2025
    மாநிலம்

    “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பழிபோடுவது ஸ்டாலினின் தந்திரம்” – விழுப்புரத்தில் இபிஎஸ் பேச்சு

    July 12, 2025
    மாநிலம்

    பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் உள்ள இணையதளங்களை முடக்க ஐகோர்ட் உத்தரவு

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கனடாவில் இந்திய நடிகரின் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: காலிஸ்தான் தீவிரவாதி பொறுப்பேற்பு
    • மதிமுகவுக்கு 10 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும்: திமுகவுக்கு துரை வைகோ கோரிக்கை
    • இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் எம்.டி., சிஇஓ.வாக பிரியா நாயர் நியமனம்
    • அந்தமான் அருகே பாய்மர படகில் தத்தளித்த 2 அமெரிக்கர்களை மீட்டது இந்திய கடலோர காவல் படை
    • மாநிலத்​தின் முதல் பிரஜை​ ஆளுநர்​தான்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.