Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, January 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்கோவில் வரை 7 இடங்களில் நடை மேம்பாலம்: ரூ.20 கோடியில் பணிகள் தீவிரம்
    மாநிலம்

    பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்கோவில் வரை 7 இடங்களில் நடை மேம்பாலம்: ரூ.20 கோடியில் பணிகள் தீவிரம்

    adminBy adminJune 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்கோவில் வரை 7 இடங்களில் நடை மேம்பாலம்: ரூ.20 கோடியில் பணிகள் தீவிரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    காட்டாங்கொளத்தூர் தமிழகத்தில் பிரதான தேசிய நெடுஞ்சாலையாக உள்ள சென்னை – திருச்சி சாலை, தற்போது நான்குவழி சாலையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால், இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இதனிடையே பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழி சாலை 8 வழி சாலையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்ட நிலையில், சிங்கப்பெருமாள் கோவில் முதல் திருச்சி வரை 8 வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்றது வருகின்றன.

    இந்நிலையில் நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களால், சாலை குறுக்கிடும் பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து உள்ளனர். இதனை தவிர்க்க சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள்கோவில் வரை 7 இடங்களில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் ரூ.20.48 கோடியில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக, பெருங்களத்தூர் இரணியம்மன் கோயில், வண்டலூர் ரயில் நிலையம், தைலாவரம் எஸ்டான்சியா டெக்பார்க், பொத்தேரி வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், மறைமலை நகர் பேருந்து நிலையம் மற்றும் சிங்கப்பெருமாள்கோவில் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 7 இடங்களிலும் 61 மீட்டர் நீளம் கொண்ட 60 டன் எடை கொண்ட இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. முக்கிய சாலை என்பதால் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றன.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஈஸ்வரன் கூறியது: பரபரப்பான சாலையாக விளங்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஏழு இடங்களில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது. இதனால் விபத்துகள் குறைவதோடு வாகனங்கள் தங்கு தடை இன்றி செல்ல வழிவகை ஏற்படும். தற்போது அமைக்கப்பட்டு வரும் நடை மேம்பாலங்கள் அனைத்திலும் எஸ்கலேட்டர் வசதி அல்லது லிப்ட் வசதி ஏற்படுத்த வேண்டும். இந்த வசதி இல்லையெனில் பொதுமக்கள் இதனை பயன்படுத்தாமல். மீண்டும் சாலையை கடந்து செல்வார்கள். இதனால் ஏற்படும் விபத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியாது.

    மேலும் 3 நடைமேம்பாலம் தேவை: மேலும், மறைமலைநகர் நகராட்சி கீழக்கரணை பகுதி மற்றும் மகேந்திர சிட்டி, நந்திவரம் பகுதியிலும் மக்களின் வசதிக்காக நடைமேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். இந்த பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருவதால் மற்ற பகுதியில் அமைக்கப்பட்டு வருவது போல் இங்கும் நடை மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

    December 3, 2025
    மாநிலம்

    மகிளா வங்கியை மூடிய பாஜக அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

    December 3, 2025
    மாநிலம்

    “விருதுநகர் தொகுதியில் அதிமுகதான் போட்டி” – ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்

    December 3, 2025
    மாநிலம்

    “பிஹார் தேர்தல் முடிவை விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும்” – கமல்ஹாசன் எம்.பி

    December 3, 2025
    மாநிலம்

    ‘புலி வருது, புலி வருது’ என்பது போல – ஆந்திராவுக்கு மடைமாறிய முதலீடு: நயினார் நாகேந்திரன் கிண்டல்!

    December 3, 2025
    மாநிலம்

    மேயர் இல்லாததால் மதுரை மாநகராட்சியில் திமுக – மார்க்சிஸ்ட் இடையே அதிகார மோதல்!

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘எனக்கு போதுமான திறமை உள்ளது’: கனடாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட நபர் டிக்டோக்கில் ‘இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று பதிலளித்தார் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் பிளாஸ்டிக் கொள்கலன்களில் இருந்து லேபிள்களை அகற்ற இது எளிதான வழி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சீனாவின் பெரிய நகரங்கள் ‘பிளாஸ்டிக் மேகங்களின்’ கீழ் வாழ்கின்றன; விஞ்ஞானிகள் எச்சரிக்கை | உலகச் செய்திகள் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கம்பளி ஆடைகள் பராமரிப்பு: குளிர்காலத்தில் உங்கள் கம்பளி ஆடைகளை எவ்வாறு பராமரிப்பது: 8 நடைமுறை குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிக் பென் மற்றும் எலிசபெத் டவர் உண்மைகள் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.